தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காதல் புறா கண்ணில் சிக்குமா?: காதலர் தின நம்பிக்கைகள்

Go down

காதல் புறா கண்ணில் சிக்குமா?: காதலர் தின நம்பிக்கைகள் Empty காதல் புறா கண்ணில் சிக்குமா?: காதலர் தின நம்பிக்கைகள்

Post  ishwarya Tue Feb 12, 2013 2:05 pm

Valentines Day
உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டாலும் காதலர் தினத்தை மையமாகக் கொண்டு எக்கச்சக்கமான மூட நம்பிக்கைகள் உலவி வருகின்றன. அவற்றில் சில ஆச்சரியமூட்டும் வகையில் அமைந்துள்ளன.

வாழ்த்து அட்டையா வேண்டாம்

காதலர் தினத்திற்காக வாழ்த்து அட்டைகள் பரிமாறப்படுவது தற்போது முக்கிய அம்சமாக உள்ளது. ஆண்டுதோறும் காதலர் தினத்தன்று மட்டும் பத்து லட்சம் வாழ்த்து அட்டைகள் விற்பனையாவதாக புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. ஆனால் விக்டோரிய மகாராணி காலத்தில் காதலர் தின வாழ்த்து அட்டைகளை பரிசளிக்க தடை உண்டு. ஏனெனில் வாழ்த்து அட்டை பரிமாற்றம் செய்தால் அந்த காதல் வெற்றி பெறாதாம். எனவேதான் வாழ்த்து அட்டைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

குலுக்கல் முறை தேர்வு

காதலியர் தங்கள் மனம் கவர்ந்தவர்களின் பெயர்களையெல்லாம் ஒரு பாத்திரத்தில் எழுதிப் போடுவார்கள். பாத்திரத்தைக் குலுக்கி எடுக்கும் போது வரும் பெயர் தான் அவளுடைய கணவன். இது பதினேழாம் நூற்றாண்டுகளில் நிலவி வந்த பாப்புலர் வழக்கம்.

மனதுக்கு பிடித்தவர்

காதலர் தினத்தன்று சந்திக்கும் ஆணைத் திருமணம் செய்து கொள்வோம் எனும் நம்பிக்கை பண்டைக் காலத்தில் பரவியிருந்தது. அதனால் தன் மனதுக்குப் பிடித்தவரைச் சந்திக்க வேண்டுமே என பெண்கள் காத்திருப்பார்களாம். தனக்கு ஒரு காதலி கிடைப்பாளா என ஆண்களும் காதலர் தினத்தன்று அங்கும் இங்கும் அலைந்து திரிவார்களாம்.

காதல் புறா

காதலர் தினத்தன்று காதலியின் கண்ணில் எந்தப் பறவை தென்படுகிறதோ அது அவளுடைய கணவனின் தன்மையைச் சொல்லும் என்பது காதலர் தினத்தன்று உலவி வந்த பண்டைய நம்பிக்கைகளின் ஒன்று. புறாவைக் காணவேண்டும் என்றுதான் பல பெண்களும் விரும்புபவார்களாம். ஏனெனில் காதலர் தினத்தன்று புறாவைக் கண்டால் காதல் வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும் என்றும், அமையும் கணவன் மிகவும் இரக்கமும், அன்பும், நேசமும் உடையவனாக இருப்பான் என்பதும் நம்பிக்கை.

அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே பின்னர் புறா விடு தூது பிரபலமடைந்தது. அதே சமயம் மரங்கொத்தி மட்டும் கண்ணில் பட்டுவிடக்கூடாது என்று வேண்டிக்கொள்வார்களாம். ஏனெனில் மரங்கொத்தியை கண்டால் காதல் வெற்றி பெறாது என்பது அவர்களின் நம்பிக்கை.

தமிழ்நாட்டில் கைக்குட்டையை பரிசளித்தால் அந்த காதல் கைகூடாது என்பது காதலர்களிடையே பரவலான நம்பிக்கையாக உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மீரா ஜாஸ்மின் காதல் – உறுதி செய்த காதலர்
» என்றென்றும் காதலர்" தினம்: மணம் முடிக்கத் துடிக்கும் சீன காதல் ஜோடிகள்
» காதலர் தினத்தில் இதய வடிவில் முட்டை அவித்து காதல் கணவனை குஷிபடுத்துவது எப்படி..?
» நம்பிக்கைகள்
» பெண்களே, உங்கள் கணவர்களுக்கு நீங்கள் செய்யும் சின்ன சின்ன சர்பிரைஸ்கள் உங்கள் வாழ்வை என்றும் மகிழ்வுடன் வைத்திருக்கும். அந்தவகையில்… காதலர் தினத்தில் இதய வடிவில் முட்டை அவித்து காதல் கணவனை குஷிபடுத்த நீங்கள் தயாரா..?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum