தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

செடியின் பூ வகை

Go down

செடியின் பூ வகை Empty செடியின் பூ வகை

Post  oviya Sun Feb 10, 2013 5:02 pm


ஆவாரம் பூ:

பிரமேக நீர், வறட்சி, உடலில் பூத்த உப்பு, கற்றாழை நாற்றம் ஆகியவற்றை நீக்கும்.

கருஞ்செம்மை பூ:

கபால சூலை, சிலேஷ்ம கோபம், நீரேற்றம், வாத தோஷம், பீனிசம் ஆகியவை நீங்கும்.

செம்பரத்தம் பூ:

மேக வெள்ளை, பிரமிய மேகம், இரத்த பிரமேகம், பெரும்பாடு, அசிர்க்காவருக்கம் ஆகியவை நீங்கும்.

அலரிப்பூ:

சுரம், அரோசகம், தோல் நோய், விதாகம், புடை, கிரந்தி, இரத்தக்கட்டி, பித்த நோய், தலை எரிச்சல் ஆகியவை அகலும்.

செம்பருத்திப்பூ:

உடல் அழற்சி, இரத்த பித்த நோய், உதிரக்கடுப்பு, சலமேகம், வெள்ளைப்படுதல், பேதிகள், தாகம் ஆகியவற்றை நீக்கும்.

நந்தியாவட்டைப்பூ:

நேத்திரகாசம், படலம், லிங்க நாத தோஷங்கள், சிரஸ்தாப நோய் முதலியவை தீரும்.

துத்திப்பூ:

இரத்த வாந்தியும், காச நோயும் நீங்கும். விந்து விருத்தியும், உடல் குளிர்ச்சியும் உண்டாகும்.

செவ்வந்திப்பூ:

மூர்ச்சையும், தலைச்சுழலும் நீங்கும். கண்ணுக்கு ஒளியும், ரோம செழிப்பும் உண்டாகும்.

தும்பைப்பூ:

தாக ரோகமும், சந்நிபாத சுரங்களும், நேத்திரத்தி பற்றிய தோஷங்களும் நீங்கும்.

நல்ல வேளைப்பூ:

இதை வேளைப்பூ என்றும் கூறுவர். வேளை பூவினால் மாந்த கணம், வாதனோய், ஜலதோஷம், மார்புச்சளி, மாந்த சுரம் ஆகியவை நீங்கும். பசி உண்டாகும்.

ரோஜாப்பூ:

இதை சிற்றாமரைப்பூ என்றும், பன்னீர் பூ என்றும் கூறுவர். மலச்சிக்கல், சுரம், தாகம், ஆசன எரிச்சல், இரத்த பிரமேகம், வயிற்று எரிச்சல் ஆகியவை அகலும்.

களாப்பூ:

நேத்திரத்தில் உண்டான கரும் படலம், ஸ்வேத படலம், இரத்த படலம், சதை படலம் முதலிய நோய்களை நீக்கும்.
இவை அனைத்தும் செடியின் பூ வகைக‌ள் மற்றும் அவற்றின் குணங்கள் ஆகும். இவற்றை அறிந்து கொண்டு உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum