செடியின் வேர் வகை
Page 1 of 1
செடியின் வேர் வகை
ஆடாதோடை வேர்:
இது இருமல், அக்கினி மந்தம், சுவேத பித்தம், கஷ்ட சுவாசம், களரோகம் முதலிய நோய்களை போக்கும்.
சங்கன் வேர்:
சங்கன் வேர்ப்பட்டை கோழை, காசம், கபச்சாரம், வாதக்கடுப்பு, சிலேத்ம சோகை, பங்க விசர்ப்பி, உட்சுரம், வாத கோபம், கிருமிகள் ஆகியவற்றை போக்கும்.
பேராமுட்டி வேர்:
வாத சுரம், தாகம், மாந்த கணம், குளிர்ச்சுரம், பித்த ரோகம் ஆகியவை போகும்.
சிற்றாமுட்டி வேர்:
இதனை குறுந்தொட்டி என்றும் கூறுவர். இதன் வேரினால் அஸ்திசுரம் முதலிய சுரங்களும், பித்தமும் நீங்கும். கண்ணுக்கு ஒளி உண்டாகும். தைலத்துக்கு உதவும்.
செந்தொட்டி வேர்:
சகனா விருத வாத நோய், விதாகம், ரூட்சை, கடுவன், இரைப்பு, கோழை ஆகியவை நீங்கும்.
முக்காவேளை வேர்:
முட்காவேளை என்பதே முக்காவேளை என ஆயிற்று. வாத கோபம், மந்தாக்கினி, அதிசாரம், நாவறட்சி, சந்த சுரம், வெப்பம், அன்னத்துவேஷம் ஆகியவை போகும்.
செங்கத்தாரி வேர்:
பிரமேக நீர், ஓட்டுப்புண், புரைகள், கீல்களை வீங்க செய்கின்ற கபம், கண்மாந்தம் ஆகியவை போகும்.
மரக்காரை வேர்:
சீதக்கடுப்பு, திரிதோஷம், உதிர பித்தம், வாத நோய், கரப்பான், கபம், கணமாந்தம் ஆகியவை போகும். இது வாந்தி மருந்து.
குத்துக்காற் சம்மட்டி வேர்:
பச்சையாயுள்ள குத்துக்காற் சம்மட்டி வேரினால் மகாவாதம், சர்வமேக கட்டிகள், திமிர் வாதம், மூர்ச்சையின் அயர்வு போகும்.
அவுரி வேர்:
இதனை நீலிவேர் என்று கூறுவர். அவுரி வேரினால் சர்வ விஷம், ரூட்சை, மூர்ச்சை, வெள்ளைப்படுதல், வயிற்று கோளாறுகள் ஆகியவை நீங்கும்.
களா வேர்:
விஷங்கள், மனச்சோர்வு, கபம், வியர்வை, விதாகம், கருப்பை அழுக்கு, மந்தாக்கினி ஆகியவை நீங்கும்.
வெட்டி வேர்:
பித்தத்தால் அகாலத்தில் உண்டாகும் தாகம், சோம ரோகம், காமாலை, இரத்த பித்தம், சுரம், பரவுகின்ற தோல் நோய்கள், தலை, கழுத்து சம்பந்தப்பட்ட நோய்கள், விந்து குறைபாடு, உன்மந்தம், தீயால் உண்டாகும் புண்கள், முலை சிலந்தி, திரி தோஷங்கள், மூச்சு திணறல், நேந்திர ரோகம், வித்திரிதிக்கட்டி, மேகக்கட்டி ஆகியவை குறையும்.
இவை அனைத்தும் செடியின் வேர் வகைகள் மற்றும் அவற்றின் குணங்கள் ஆகும். இவற்றை அறிந்து கொண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.
இது இருமல், அக்கினி மந்தம், சுவேத பித்தம், கஷ்ட சுவாசம், களரோகம் முதலிய நோய்களை போக்கும்.
சங்கன் வேர்:
சங்கன் வேர்ப்பட்டை கோழை, காசம், கபச்சாரம், வாதக்கடுப்பு, சிலேத்ம சோகை, பங்க விசர்ப்பி, உட்சுரம், வாத கோபம், கிருமிகள் ஆகியவற்றை போக்கும்.
பேராமுட்டி வேர்:
வாத சுரம், தாகம், மாந்த கணம், குளிர்ச்சுரம், பித்த ரோகம் ஆகியவை போகும்.
சிற்றாமுட்டி வேர்:
இதனை குறுந்தொட்டி என்றும் கூறுவர். இதன் வேரினால் அஸ்திசுரம் முதலிய சுரங்களும், பித்தமும் நீங்கும். கண்ணுக்கு ஒளி உண்டாகும். தைலத்துக்கு உதவும்.
செந்தொட்டி வேர்:
சகனா விருத வாத நோய், விதாகம், ரூட்சை, கடுவன், இரைப்பு, கோழை ஆகியவை நீங்கும்.
முக்காவேளை வேர்:
முட்காவேளை என்பதே முக்காவேளை என ஆயிற்று. வாத கோபம், மந்தாக்கினி, அதிசாரம், நாவறட்சி, சந்த சுரம், வெப்பம், அன்னத்துவேஷம் ஆகியவை போகும்.
செங்கத்தாரி வேர்:
பிரமேக நீர், ஓட்டுப்புண், புரைகள், கீல்களை வீங்க செய்கின்ற கபம், கண்மாந்தம் ஆகியவை போகும்.
மரக்காரை வேர்:
சீதக்கடுப்பு, திரிதோஷம், உதிர பித்தம், வாத நோய், கரப்பான், கபம், கணமாந்தம் ஆகியவை போகும். இது வாந்தி மருந்து.
குத்துக்காற் சம்மட்டி வேர்:
பச்சையாயுள்ள குத்துக்காற் சம்மட்டி வேரினால் மகாவாதம், சர்வமேக கட்டிகள், திமிர் வாதம், மூர்ச்சையின் அயர்வு போகும்.
அவுரி வேர்:
இதனை நீலிவேர் என்று கூறுவர். அவுரி வேரினால் சர்வ விஷம், ரூட்சை, மூர்ச்சை, வெள்ளைப்படுதல், வயிற்று கோளாறுகள் ஆகியவை நீங்கும்.
களா வேர்:
விஷங்கள், மனச்சோர்வு, கபம், வியர்வை, விதாகம், கருப்பை அழுக்கு, மந்தாக்கினி ஆகியவை நீங்கும்.
வெட்டி வேர்:
பித்தத்தால் அகாலத்தில் உண்டாகும் தாகம், சோம ரோகம், காமாலை, இரத்த பித்தம், சுரம், பரவுகின்ற தோல் நோய்கள், தலை, கழுத்து சம்பந்தப்பட்ட நோய்கள், விந்து குறைபாடு, உன்மந்தம், தீயால் உண்டாகும் புண்கள், முலை சிலந்தி, திரி தோஷங்கள், மூச்சு திணறல், நேந்திர ரோகம், வித்திரிதிக்கட்டி, மேகக்கட்டி ஆகியவை குறையும்.
இவை அனைத்தும் செடியின் வேர் வகைகள் மற்றும் அவற்றின் குணங்கள் ஆகும். இவற்றை அறிந்து கொண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» செடியின் பூ வகை
» செடியின் விதை வகை
» செடியின் கிழங்கு வகை
» செடியின் கிழங்கு வகை
» செம்பருத்தி செடியின் மருத்துவ குணங்கள்
» செடியின் விதை வகை
» செடியின் கிழங்கு வகை
» செடியின் கிழங்கு வகை
» செம்பருத்தி செடியின் மருத்துவ குணங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum