தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மன்மோகன் - சோனியா தங்கியிருக்கும் கோட்டைக்குள் 5 வயது சிறுமி கடத்தப்பட்டு 4 நாள் பாலியல் வல்லுறவு.

Go down

மன்மோகன் - சோனியா தங்கியிருக்கும் கோட்டைக்குள் 5 வயது சிறுமி கடத்தப்பட்டு 4 நாள் பாலியல் வல்லுறவு.  Empty மன்மோகன் - சோனியா தங்கியிருக்கும் கோட்டைக்குள் 5 வயது சிறுமி கடத்தப்பட்டு 4 நாள் பாலியல் வல்லுறவு.

Post  ishwarya Tue Apr 30, 2013 1:26 pm

5 வயது சிறுமியை 4 நாட்கள் அறையில் அடைத்து வைத்து கற்பழித்த வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிறுமி மாயம்

கிழக்கு டெல்லி, காந்தி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒரு தம்பதியரின் 5 வயது மகளை கடந்த 15–ந் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து அருகில் உள்ள போலீசில் புகார் செய்யப்பட்டது. பெற்றோரும், உறவினர்களும் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடினர்.4 நாட்களுக்கு பிறகு, நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) அந்த குழந்தை, அதே வீட்டின் கீழ் தளத்தில் உள்ள வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தையை மீட்டபோது அதன் பெற்றோர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

4 நாட்களாக கற்பழிப்பு

அவள் மயங்கிய நிலையில், உயிருக்கு போராடியபடி, குற்றுயிரும், குலை உயிருமாக கிடந்தாள். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தடயங்களுடன், உடல் முழுவதும் கொடூரமான காயங்களுடன் இருந்தாள். அவள் அடைத்து வைக்கப்பட்டு இருந்த கீழ் வீட்டில் வசித்த வாலிபரை காணவில்லை.குழந்தையுடன் அவளது பெற்றோர் போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, குழந்தையை அருகில் உள்ள சுவாமி தயானந்த் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

சித்ரவதை

அவளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஆர்.கே.பன்சால் கூறியதாவது:–‘‘குழந்தை தொடர்ந்து 4 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கிறாள். அவளது பிறப்பு உறுப்பு, மார்பு, உதடு, கன்னம் ஆகிய பகுதிகளில் பலத்த காயங்கள் உள்ளன. கழுத்து நெறிக்கப்பட்ட தடமும் உள்ளது.சிறுமியின் உடலுக்குள் மெழுகுவர்த்தி துண்டுகள், தலைக்கு தேய்க்கும் 200 மில்லி எண்ணெய் பாட்டில் ஆகியவை இருந்தது தெரிய வந்தது.இதுவரை இப்படி ஒரு மோசமான, காட்டுமிராண்டித்தனமான கொடூர சம்பவத்தை நாங்கள் சந்தித்தது இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

வலைவீச்சு

5 வயது சிறுமியை 4 நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்த காமுகன் தப்பி ஓடி விட்டான். அவன் ஒரு தையல் தொழிலாளி என்று தெரிய வந்துள்ளது. அவனது தந்தையை பிடித்து விசாரித்து வரும் போலீசார், அவனை பிடிப்பதற்காக தனிப்படை ஒன்றையும் அமைத்துள்ளனர்.இதற்கிடையில், சுவாமி தயானந்த் ஆஸ்பத்திரியில் இருந்து, அவளை உயிர் சிகிச்சை அளிப்பதற்காக அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டாள். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு 4 டாக்டர்களைக் கொண்ட குழு அவளுக்கு சிறப்பு சிகிச்சை அளித்து வருகிறது.இந்த கொடூர சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.


இதேநேரம் இந்தியாவில் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 336 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக கூறி அதிரவைக்கிறது தேசிய குற்றப்பிரிவு அமைப்பின் புள்ளிவிபரம்.

டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த பின் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் 3 வயது முதல் 10 வயது வரை உடைய சிறுமிகளும் அதிக அளவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். அதுபற்றி அதிர்ச்சிகரமான புள்ளிவிபரம் ஒன்றை வெளியிட்டுள்ளது தேசிய குற்றப்பிரிவு ஆணையம்.

10 ஆண்டுகளில் அதிகம் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக, கடந்த 2001-ஆம் ஆண்டு பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 113. இதுவே 2011-ஆம் ஆண்டு 48 ஆயிரத்து 338 ஆக அதிகரித்துள்ளது.

மத்தியபிரதேசம் நம்பர் 1

மத்திய பிரதேச மாநிலத்தில் அதிகப்படியாக 9 ஆயிரத்து 465 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அடுத்தப்படியாக மகாராஷ்டிராவில் 6 ஆயிரத்து 868 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

டெல்லியில் 2,909 வழக்குகள்

தலைநகர் டெல்லியில் 2ஆயிரத்து 909 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் கேரளாவில் 2 ஆயிரத்து 101 வழக்குகளும், ஆந்திராவில் 3 ஆயிரத்து 977 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 1,486 வழக்குகள்

தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரத்து 486 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 41 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வழக்குகள் அனைத்தும் சிறார் குற்றவியல் நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டவை ஆகும்.

5 வயது சிறுமி பாதிப்பு

டெல்லி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியை இரண்டு நாட்களாக அறைக்குள் பூட்டி வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள்.

பிரதமர் மன்மோகன் சிங் கவலை

இதனிடையே 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டிருப்பதும், அவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதும் தன்னை மிகவும் வேதனையடையச் செய்திருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனைக்கு ஆழமான தீர்வு காண்பதும் அதற்காக சமூகம் தன்னைத்தானே தயார்படுத்திக்கொள்வதும் அவசியம் என பிரதமர் கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பாலியல் வல்லுறவு: 13 வயது சிறுமி சிதைப்பு: தகப்பன் தலைமறைவு
» வவுனியாவில் பாலியல் வல்லுறவு: 9, 10 வயது சிறுமிகள் சிதைப்பு: 59 வயது முதியவர் கைது
» 55 வயது கிழவனின் பாலியல் இச்சைக்கு நாலரை வயது சிறுமி!
» மனைவியின் கண் முன்னே 60 வயது மூதாட்டி பாலியல் வல்லுறவு!
» மூர்க்கதனமான பாலியல் பலாத்காரம்: 5 வயது சிறுமி பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum