தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நன்றாகப் படித்து நல்ல பணியில் இருக்கும் என் மகளின் கணவர் பிரிந்துச் சென்று விட்டார். அவளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. என் வீட்டில் வசிக்கும் அவள், மீண்டும் கணவரோடு சேர்ந்து வாழ என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

Go down

நன்றாகப் படித்து நல்ல பணியில் இருக்கும் என் மகளின் கணவர் பிரிந்துச் சென்று விட்டார். அவளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. என் வீட்டில் வசிக்கும் அவள், மீண்டும் கணவரோடு சேர்ந்து வாழ என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?  Empty நன்றாகப் படித்து நல்ல பணியில் இருக்கும் என் மகளின் கணவர் பிரிந்துச் சென்று விட்டார். அவளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. என் வீட்டில் வசிக்கும் அவள், மீண்டும் கணவரோடு சேர்ந்து வாழ என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

Post  meenu Fri Feb 01, 2013 1:27 pm

ஒரு குழந்தை இருக்கும்போது இப்படி கணவன்&மனைவி பிரிந்திருப்பது என்பது எதிர்காலத்திற்கு நல்லதில்லைதான். என்னதான் பிரச்னையாக இருந்தாலும் சரி, மாதக் கணக்கில் பேசாமல் இருந்தாலும் குழந்தையை விட்டு தந்தை பிரியக் கூடாது.

இரண்டு பக்கமும் பிடிவாதமாக இருந்தால், அது எப்படிப்பட்ட விஷயமாக இருந்தாலும் அதில் பாதிக்கப்படப் போவது குழந்தைதான். ‘உங்களுக்கு என்ன வேணும், நீங்க என்ன நினைக்கிறீங்க’ என்று கணவனும் மனைவியும் நூறு சதவீதம் பொறுமையோடு அமர்ந்து பேசித் தீர்வு காண வேண்டும்.

வீட்டைச் சுற்றியுள்ள சிலர், இதுதான் சமயமென்று ஏற்றி விடுவார்கள். அவர்களால் தம்பதியைச் சேர்த்து வைக்க முடியுமா? உங்கள் குடும்பத்தில் அப்படி எவரேனும் இருப்பின் அவர்களை விலக்குங்கள்.

பத்து நிமிட கோபக் கொந்தளிப்பில் பல்லாண்டு கால வாழ்க்கையை வீணடித்துக் கொள்ளாதீர்கள். சிவாலயத்திலுள்ள சோமாஸ்கந்த மூர்த்திக்கு வியாழக் கிழமைகளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து வாருங்கள்.

அதைத் தவிர ஏழு சுமங்கலிகளுக்கு புடவை, ரவிக்கை துணி, சீப்பு, கண்ணாடி என்று வைத்துக் கொடுங்கள். வயிறார உணவளித்து அவர்களின் ஆசியை பெற்றுக் கொள்ளச் சொல்லுங்கள். மகள் கணவரோடு ஒற்றுமையாக இருப்பாள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  எங்களுக்கு பெரிய மனக்கஷ்டம் உள்ளது. சொந்த, பந்தம் மற்றும் அண்டை வீட்டாரால் விலக்கப்பட்டு எதிர்கால பயத்துடன் வாழ்க்கை நடத்துகிறேன். வியாபாரமும் சரியில்லை. வசிக்கும் வீட்டில் ஏதேனும் தோஷமா? கடன் வேறு அதிகமாக உள்ளது. நான் செய்ய வேண்டியது என்ன?
»  என் மகள் நன்றாகப் படித்து நல்ல வேலையில் உள்ளாள். திருமணத்திற்கு வரன் தேடும்போதுதான் அவள் வேறொருவரைக் காதலிப்பதாக சொன்னாள். இரு வீட்டாருக்கும் இதில் சம்மதமில்லை. இதையும்விட, இவள் மதம் மாறினால்தான் அவர்கள் ஏற்றுக் கொள்வதாகவும் நிபந்தனை விதிக்கிறார்கள். மகள
»  என் வயது 43. இரண்டு வருடம் முன்பாக கணவர் பிரிந்து சென்று விட்டார். என் உடல்நலமும் சரியில்லை. இரண்டு மகள்களும், ஒரு மகனும் படித்துக் கொண்டிருக்கின்றனர். எங்களை என் கணவர் நட்டாற்றில் தவிக்க விட்டு விட்டார். என் செலவுக்கேற்ற வருமானம் தரும் எந்த வேலையும் கிட
» என் வயது 30. நல்ல கணவர், குழந்தைகள் என்று வாழ்க்கை நன்றாகச் செல்கிறது. ஆனால், தற்சமயம் உடல்நிலை சரியில்லை. அதுவும் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்படுகிறேன். என்ன செய்ய வேண்டும், எந்தக் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லுங்கள்.
»  எங்களுக்கு திருமணமாகி 12 வருஷங்களாக குழந்தை பாக்கியம் இல்லை. வாரிசு பிராப்தம் அடைய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum