தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மரக்காணம் கலவரத்தின் போது வாலிபர் மர்மமாக இறந்தது கொலை வழக்காக மாற்றம்

Go down

மரக்காணம் கலவரத்தின் போது வாலிபர் மர்மமாக இறந்தது கொலை வழக்காக மாற்றம் Empty மரக்காணம் கலவரத்தின் போது வாலிபர் மர்மமாக இறந்தது கொலை வழக்காக மாற்றம்

Post  ishwarya Thu May 02, 2013 2:41 pm

மகாபலிபுரத்தில் கடந்த 25-ந் தேதி பா.ம.க. சார்பில் நடந்த சித்திரை திருவிழாவில் பா.ம.க.வினர் பங்கேற்க சென்றபோது மரக்காணத்தில் பா.ம.க. வினருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது.

சம்பவத்தின்போது சித்திரை திருவிழாவில் பங்கேற்க சென்ற அரியலூர் மாவட்டம் வெண்மான் கொண்டான் கிராமத்தை சேர்ந்த பரமசிவத்தின் மகன் செல்வராஜ் (32), தஞ்சாவூரை சேர்ந்த விவேக் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இருவரும் இறந்து போனார்கள். இதையடுத்து மரக்காணம் போலீசார் விவேக் விபத்தில் இறந்து போனதாகவும், செல்வராஜ் மர்மசாவு என்றும் வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையே செல்வராஜின் உடல் மருத்துவ பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் செல்வராஜ் அரிவாளால் வெட்டப்பட்டதில் உயிரிழந்ததாக கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து மரக்காணம் போலீசார் செல்வராஜ் சாவை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மதுரவாயலில் வாலிபர் கொலை: போலீஸ்காரர் உள்பட 6 பேர் கைது
» ஐ.பி.எல். சூதாட்டத்தில் வீட்டை இழந்த வாலிபர்
» திருப்பதியில் திருமணமான 3 மணி நேரத்தில் பொறியாளர் மாப்பிள்ளை இறந்தது பற்றி?
» மரக்காணம் கலவரம் தொடர்பாக நீதி விசாரணைக்கு ஆணையிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
» கூடுவாஞ்சேரி அருகே வாலிபர் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum