தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கூடுவாஞ்சேரி அருகே வாலிபர் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை

Go down

கூடுவாஞ்சேரி அருகே வாலிபர் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை Empty கூடுவாஞ்சேரி அருகே வாலிபர் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை

Post  ishwarya Thu May 02, 2013 5:21 pm

கூடுவாஞ்சேரியை அடுத்த பெருமாட்டு நல்லூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தர். இவரது மகன் சுபாஷ் (வயது 19). லாரி டிரைவர். நேற்று மாலை சுபாஷ் அதே பகுதியை சேர்ந்த நண்பர் கலைவாணனுடன் செல்போனுக்கு ரீசார்ஜ் செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் காயரம்பேடு கூட்டு ரோட்டிற்கு சென்றார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 5 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பின்தொடர்ந்தனர்.

இதனை கவனித்த சுபாஷ் மோட்டார் சைக்கிளை நெல்லிக்குப்பம் சாலைக்கு திருப்பினார். வேகமாக வந்த மர்ம கும்பல் நெருங்கியதால் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு சுபாசும், கலைவாணனும் ஓட்டம் பிடித்தனர். சுபாசை மட்டும் குறி வைத்த கும்பல் அவரை ஓடஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டினர். தலை, கழுத்தில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

உடனே மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு துணை போலீஸ் சூப்பி ரண்டு குமார், கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் தகராறில் அதே பகுதியை சேர்ந்த செல்வத்துடன் சுபாசுக்கு தகராறு ஏற்பட்டது. எனவே இந்த மோதலில் சுபாஷ் தீர்த்துக்கட்டப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். தற்போது செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அவர்கள் சிக்கினால் தான் கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவரும். இது தொடர்பாக உயிர் தப்பிய கிரு

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum