தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாராலிம்பிக்கில் இலங்கை தனது முதல் பதக்கத்தை வென்றது

Go down

பாராலிம்பிக்கில் இலங்கை தனது முதல் பதக்கத்தை வென்றது Empty பாராலிம்பிக்கில் இலங்கை தனது முதல் பதக்கத்தை வென்றது

Post  meenu Mon Mar 11, 2013 12:56 pm

லண்டன் பாராலிம்பிக் போட்டிகளில் டி 46 குறைபாடுள்ளவர்களுக்கான 400 மீட்டர் ஆடவர் ஓட்டப்பந்தயத்தில் இலங்கையின் பிரதீப் சஞ்சய வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

பாராலிம்பிக் போட்டிகளைப் பொறுத்தவரை இலங்கையர் ஒருவர் வெல்லக்கூடிய முதல் பதக்கம் என்றால் அது இதுதான்.

49.28 விநாடிகளில் தூரத்தைக் கடந்து பிரதீப் சஞ்சய வெண்கலம் வென்றார்.

இலங்கை இராணுவத்தில் லான்ஸ் கொர்ப்போரல் நிலையில் இருக்கும் சிப்பாயான சஞ்சய, 2008ல் கிளிநொச்சியில் நடந்த ஒரு மோர்டார் குண்டுத் தாக்குதலில் வலது கரம் செயலிழந்து போனவர்.

"ஒலிம்பிக் போட்டிகளில் என்னால் ஒரு வெண்கலப் பதக்கமாவது நிச்சயம் வெல்ல முடியும் என்று எனது பயிற்சியாளர் திரும்பத் திரும்பக் கூறிவந்தார். வெற்றி பெற வேண்டும் என்று நானும் தீர்மானமாக இருந்தேன். எமது அணியின் சக வீரர்களும் எனக்கு மிகவும் உதவியாக இருந்தனர்." என்று பிரதீப் சஞ்சய பிபிசியிடம் கூறினார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum