தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

3 விக்கெட்டுக்களால் வென்றது இலங்கை: ஆட்ட நாயகனாக மஹேல ஜயவர்தன

Go down

3 விக்கெட்டுக்களால் வென்றது இலங்கை: ஆட்ட நாயகனாக மஹேல ஜயவர்தன Empty 3 விக்கெட்டுக்களால் வென்றது இலங்கை: ஆட்ட நாயகனாக மஹேல ஜயவர்தன

Post  meenu Mon Mar 18, 2013 12:23 pm



அவுஸ்திரேலியாவில் நடைபெறும் சி.பீ. கிண்ண கிரிக்கெட் தொடரின் 9 ஆவது போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் வென்றது.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியை வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் இலங்கைக்கு எதிராக துடுப்பெடுத்தாடியது.

இதன்படி களம் இறங்கிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 280 ஓட்டங்களை பெற்றது.

அவுஸ்திரேலிய அணி சார்பாக Peter Forrest 10 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 104 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக மெத்தியூஸ் இரண்டு விக்கெட்டுக்களையும் மலிங்க, குலசேகர, மஹ்ரூப், ஹேரத் ஆகுயோர் தலா ஒரு விக்கெட்டினையும் பெற்றார்.

பதிலுக்கு 281 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி 49.2 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 283 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

இலங்கை அணி சார்பாக மஹேல ஜயவர்தன 85 ஓட்டங்களையும் சந்திமால் 80 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சர்பாக Christian 3 விக்கெட்டுக்களையும் Hilfenhaus இரண்டு விக்கெட்டுக்களையும் பெற்றனர்.

இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக மஹேல ஜயவர்தன தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum