தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அன்பால் வரும் ஆனந்தம்

Go down

அன்பால் வரும் ஆனந்தம் Empty அன்பால் வரும் ஆனந்தம்

Post  birundha Sat Feb 02, 2013 6:19 pm

* மனிதனைப் பாவத்தில் தள்ளிவிடும் சக்தி ஆசைக்கும், கோபத்திற்கும் உண்டு என்று கிருஷ்ணர் பகவத்கீதையில் குறிப்பிடுகிறார். இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று இணை
பிரியாதவை.
* ஒருவனைப் பாவி என்று வெறுக்கும்போது, நாம் பாவமே செய்யாதவர்களா என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். பாவச்செயல்களைச் செய்யா
விட்டாலும் மனதிலாவது நினைக்கத் தான் செய்கிறோம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
* நம் கோபத்தால் எதிராளியின் குணத்தை மாற்ற முடியாது. இருவருக்குமிடையே மேலும் கோபம் வளரத் தான் செய்யும். கோபத்தால் ஒருவரைப் பணியச் செய்வதில் நமக்குப் பெருமையில்லை. அன்பால் குறையைத் திருத்தி நல்வழிப்படுத்துவதே சிறந்தது.
* பெரும்பாலும் கோபம் கொள்வதால் நமக்கு நாமே பெரும் தீங்கு செய்தவர்களாகிறோம். ஆத்திரம் கொள்வதால் நம் உடலும் மனமும் பலவீனமடைகின்றன.
* அன்பாக இருப்பதே நம்முடைய இயல்பான குணம். அன்பால் நமக்கும் நம்மைச் சுற்றி இருப்பவருக்கும் ஆனந்தம் உண்டாகும். இதையே அன்பே சிவம் என்று திருமந்திரம் கூறுகிறது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum