தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நமக்குள்ளே ஆனந்தம்

Go down

நமக்குள்ளே ஆனந்தம் Empty நமக்குள்ளே ஆனந்தம்

Post  birundha Sun Jan 27, 2013 2:56 pm

* சுற்றியுள்ள கயிற்றை அவிழ்ப்பதற்கு ஒருவழி தான் உண்டு. எப்படிச் சுற்றினோமோ அப்படியே மறுபடியும் திருப்பி அவிழ்க்க வேண்டும். அதைப் போலவே தவறான செயல்களை நற்செயல்களினாலும், பாவங்களைப் புண்ணியங்களினாலும் போக்கிக் கொள்ள வேண்டும்.
* தானம், தர்மம், கடமை புரிதல், பகவந்நாமாக்களை உச்சரித்தல், திருக்கோயில்களைத் தரிசித்தல் ஆகிய நல்லசெயல்கள் பாவம் தொலைக்கும் வழிகளாகும்.
* மனத்தினால் செய்த பாவங்களை மனத்தாலும், கைகள், கால்களால் செய்த பாவங்களை அந்த உறுப்புக்களினாலும் மட்டுமே தீர்க்க முடியும்.
* வெளியில் இருந்து வரும் பொருள்களில் தான் மகிழ்ச்சி இருப்பதாக எண்ணி அவற்றைச் சுற்றியே மனிதன் துரத்திக் கொண்டு ஓடுகிறான். வெளியில் இருப்பது எதுவும் நம் வசத்தில் இருப்பதல்ல. அது வந்தாலும் வரும். போனாலும் போகும். நமக்குள்ளே ஆனந்தம் இருப்பதை மனிதன் மறந்து விடுகிறான்.
* நமக்குள் இருக்கும் மகிழ்ச்சி பெரிய சமுத்திரம் போன்றது. புறவுலகில் இருக்கும் இன்பம் அனைத்தும் ஒரு நீர்த்துளி போன்றது தான். பதவி, பணம், பெயர், புகழ் என்று வெளியில் நாம் எதிர்பார்க்கும் எல்லாமே ஒரு சொட்டுத் தண்ணீர்தான். இதை முற்றிலும் உணர்ந்த ஞானிகள் வெளி இன்பத்தைத் தேடி அலைவதில்லை.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நமக்குள்ளே ஆனந்தம்
» நமக்குள்ளே ஆனந்தம்
» ஆன்மீகம் என்றால் ஆனந்தம் என்று சொல்லுவதும் சரிதான். ஆனந்தம் என்று சொல்வதை விட அமைதி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக அல்லது அமைதியினால் உருவாகும் ஆனந்தம் என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும். துன்பம் இருக்கும் வரை அமைதியினால் உருவாகும் ஆனந்தம் எப்பட
» அன்பால் வரும் ஆனந்தம்
» ஆனந்தம் இன்று ஆரம்பம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum