தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

யோகாசனம் செய்வதிற்கு முன்பும்.. பின்பும்..

Go down

யோகாசனம் செய்வதிற்கு முன்பும்.. பின்பும்.. Empty யோகாசனம் செய்வதிற்கு முன்பும்.. பின்பும்..

Post  meenu Fri Feb 01, 2013 4:51 pm

* தினசரி காலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளாக யோகாசன பயற்சி செய்யலாம்.

* யோகாசன பயற்சியில் தியானம், முச்சு பயற்சி, ஆசனம் இந்த மூன்றும் ஒன்றுகொன்று தொடர்புள்ளது. ஆகவே, சில நிமிடங்கள் தியானம், பிறகு பிரணாயமம், அதன் பிறகு ஆசனங்கள் செய்வது நல்லது.

* நீர் ஆகாரமாக இருந்தால், அருந்திய பின் அரை மணி நேரம் கழிந்த பின்பும், எளிய சிற்றுண்டியாக இருந்தால் இரண்டு மணி நேரம் கழித்தும், முழுமையான ஆகாரமாக இருந்தால் நான்குமணி நேரம் கழித்தும் யோகப்பயற்சிகளை செய்யவும்.

* யோகப் பயற்சியை முடித்துக் கொண்டு வியர்வை அடங்கிய பின்னால் தான் குளிக்க வேண்டும்.

* யோகாசனப் பயற்சிக்கு பின்பு 15 நிமிடங்கள் கழித்து எளிய ஆகாரங்கலையோ, பழச்சாறு, அல்லது உணவு உட்கொள்ளலாம்.

* பெண்கள் கருவுற்ற காலங்களிலும், மாதவிடாய் காலங்களிலும், உடல் பயற்சி இயக்கமான ஆசான்களை தவிர்த்து, தியானமும், முச்சுபயற்சி முறைகளிலும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். நன்கு சவாசனம் செய்து ஓய்வு பெற வேண்டும். பகல் உறக்கத்தை தவிர்த்தல் நல்லது.

* காலையில் பழவகைகளையும், அல்லது திரவ கஞ்சி போன்றவற்றையும், மதியம் முழு அளவில் உணவினையும், இரவில் பழவகைகள் அல்லது திரவ ஆகாரங்களை யோகா சாதகர்கள் எடுத்து கொள்வது மிக நல்லது.

* தியாத்திற்கு பிறகு உடனடியாக எழுந்திருக்க வேண்டாம். தொடர்ந்து சிறிது நேரம் அமர்ந்து மனதுக்கு அமைதி தரும் ஆன்மீக புத்தகங்களை படியுங்கள். தியானத்தின் பலன்களை பற்றி அடுத்து பார்க்கலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum