குத்து பாட்டு ட்ரென்ட் மாறியிருக்கு... : இசையமைப்பாளர் இமான் மகிழ்ச்சி
Page 1 of 1
குத்து பாட்டு ட்ரென்ட் மாறியிருக்கு... : இசையமைப்பாளர் இமான் மகிழ்ச்சி
சுமார் அரை டஜன் படங்களை கையில் வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் டி.இமான். கடந்த வருடத்தில் இவர் இசையமைத்த கும்கி, இந்த வருடத்தின் துவக்கத்திலும் பீட் குறையாமல் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் தனக்கென ஒரு இணையதளத்தோடு உலக முகவரி தேடி களம் இறங்கியிருக்கிறார் இமான். இத்தனைக்கும் விருகம்பாக்கம் தாண்டி கம்போசிங் வைத்துக் கொள்ளாத நல்ல இசையமைப்பாளர் இவர்.
மற்ற முன்னணி இசையமைப்பாளர்கள் பலர், ஆஸ்திரேலியா, ஐரோப்பா என்று கம்போசிங்குக்கு கிளம்புகிறார்கள். நீங்கள் அதிகப்பட்சம் வடபழனியிலிருக்கும் கிரீன் பார்க் ஓட்டலை விட்டு தாண்டியதில்லையே என்ற கேள்வியோடு அவரை குளிர்விக்க கிளம்பியது நிருபர்களின் கேள்வி.
நீங்க கேட்கறது உண்மைதான். எனக்கு அப்படியெல்லாம் போனால்தான் மியூசிக் வரும்னு கிடையாது. எப்படி நம்ம வீட்டு டைனிங் ஹால்ல நம்ம வீட்ல சமைச்சதை நல்லா பிசைஞ்சு சாப்பிடும்போது ஒரு திருப்தி இருக்கோ, அப்படி ஒரு திருப்தி என் ஸ்டுடியோவுல நான் மியூசிக் கம்போஸ் பண்ணும்போது கிடைக்குது. இதை விட்டுட்டு எதுக்காக நாடுவிட்டு நாடு போகணும். மற்றவங்களுக்கு அது சரியா இருந்தா செய்யட்டும். அது பற்றி நான் கருத்து சொல்வது சரியல்ல என்றார் இமான்.
இன்னைக்கு குத்துப்பாட்டு ட்ரெண்ட் மாறியிருக்கு. இதுதான் எனக்கு பெரிய சந்தோஷம். முன்பெல்லாம் எல்லா பாட்டுமே குத்தா இருக்கணும்னு கேட்பாங்க. நானும் ரொம்ப கெஞ்சுவேன். சார் ஒரு பாட்டாவது மெலடி கொடுங்களேன்னு. ஆனால் இன்னைக்கு அப்படியில்ல. மெலடிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாங்க. இப்ப கும்கியில நான் போட்ட சொய்ங் சொய்ங் பாட்டு கூட குத்துப்பாட்டு ரகமில்ல. அது நாட்டுபுற பாடலின் இன்னொரு வடிவம். இது மாதிரி எண்ணற்ற நாட்டு புற பாடல்களும், கானா பாடல்களும் இருக்கு. அதையே ரசிக்கிற மாதிரி தொடர்ந்து தரலாம். தப்பில்ல என்ற இமான், எப்போ சினிமாவில் நடிக்கப் போகிறார்?
ஐயய்யோ... அந்த ஆசையெல்லாம் எனக்கு இல்லவே இல்லைங்க. நிறைய மியூசிக் பண்ணுவோம். அதுல சாதிப்போம். அது போதும் என்றார் தனக்கேயுரிய புஷ்டி புன்னகையுடன்!
மற்ற முன்னணி இசையமைப்பாளர்கள் பலர், ஆஸ்திரேலியா, ஐரோப்பா என்று கம்போசிங்குக்கு கிளம்புகிறார்கள். நீங்கள் அதிகப்பட்சம் வடபழனியிலிருக்கும் கிரீன் பார்க் ஓட்டலை விட்டு தாண்டியதில்லையே என்ற கேள்வியோடு அவரை குளிர்விக்க கிளம்பியது நிருபர்களின் கேள்வி.
நீங்க கேட்கறது உண்மைதான். எனக்கு அப்படியெல்லாம் போனால்தான் மியூசிக் வரும்னு கிடையாது. எப்படி நம்ம வீட்டு டைனிங் ஹால்ல நம்ம வீட்ல சமைச்சதை நல்லா பிசைஞ்சு சாப்பிடும்போது ஒரு திருப்தி இருக்கோ, அப்படி ஒரு திருப்தி என் ஸ்டுடியோவுல நான் மியூசிக் கம்போஸ் பண்ணும்போது கிடைக்குது. இதை விட்டுட்டு எதுக்காக நாடுவிட்டு நாடு போகணும். மற்றவங்களுக்கு அது சரியா இருந்தா செய்யட்டும். அது பற்றி நான் கருத்து சொல்வது சரியல்ல என்றார் இமான்.
இன்னைக்கு குத்துப்பாட்டு ட்ரெண்ட் மாறியிருக்கு. இதுதான் எனக்கு பெரிய சந்தோஷம். முன்பெல்லாம் எல்லா பாட்டுமே குத்தா இருக்கணும்னு கேட்பாங்க. நானும் ரொம்ப கெஞ்சுவேன். சார் ஒரு பாட்டாவது மெலடி கொடுங்களேன்னு. ஆனால் இன்னைக்கு அப்படியில்ல. மெலடிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாங்க. இப்ப கும்கியில நான் போட்ட சொய்ங் சொய்ங் பாட்டு கூட குத்துப்பாட்டு ரகமில்ல. அது நாட்டுபுற பாடலின் இன்னொரு வடிவம். இது மாதிரி எண்ணற்ற நாட்டு புற பாடல்களும், கானா பாடல்களும் இருக்கு. அதையே ரசிக்கிற மாதிரி தொடர்ந்து தரலாம். தப்பில்ல என்ற இமான், எப்போ சினிமாவில் நடிக்கப் போகிறார்?
ஐயய்யோ... அந்த ஆசையெல்லாம் எனக்கு இல்லவே இல்லைங்க. நிறைய மியூசிக் பண்ணுவோம். அதுல சாதிப்போம். அது போதும் என்றார் தனக்கேயுரிய புஷ்டி புன்னகையுடன்!
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது ஏன் என்று விளக்கம் கேட்டு கன்னட நடிகை குத்து ரம்யாவுக்கு கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். குத்து ரம்யாவின் தாத்தா எஸ்.எம்.கிருஷ்ணா. காங்கிரஸ் கட்சியி
» விஜய் படத்தில் டி.இமான்
» பெரிய ஹீரோக்கள் படங்களை ஏற்பதில்லையா? : இமான் பதில்
» குத்து பாடலில் சதா…!
» குத்து பாட்டுக்கு என்னை கூப்பிடாதீங்க – சானா கான்
» விஜய் படத்தில் டி.இமான்
» பெரிய ஹீரோக்கள் படங்களை ஏற்பதில்லையா? : இமான் பதில்
» குத்து பாடலில் சதா…!
» குத்து பாட்டுக்கு என்னை கூப்பிடாதீங்க – சானா கான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum