தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புதுமுக நடிகரை மிரட்டிய கொமெடியன்.

Go down

புதுமுக நடிகரை மிரட்டிய கொமெடியன். Empty புதுமுக நடிகரை மிரட்டிய கொமெடியன்.

Post  ishwarya Sat May 25, 2013 2:16 pm

நீண்ட இடைவெளிக்கு பின்பு பழ. கருப்பையா தயாரிக்கும் ‘நாடி துடிக்குதடி’ படத்தை இயக்குனர் செல்வா இயக்கி உள்ளார். நாடி துடிக்குதடி படத்தின் கதை பிஜி தீவில் நடப்பதுபோல படமாக்கி வருகிறார் இயக்குனர் செல்வா.

விடுமுறைக்காக பிஜி தீவு செல்லும் இளைஞன் அங்கு வசிக்கும் ஒரு பெண்ணின் மீது காதல் கொள்கிறான். அதனால் ஏற்படும் விளைவுகள்தான் படத்தின் கதை.

இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கூறுகையில், பிஜி தீவிலிருந்து வனலேவு தீவுக்கு எட்டு மணி நேரம் படகுல போகணும். அப்படி போய்விட்டு திரும்பும் போது நாங்க சென்ற படகு பயங்கரமா ஆடியது.

நான் வெளியே வந்து பார்த்தேன். அலைகள் பயங்கரமா வந்து படகுல மோதியது. படகு கவுந்திடுரா மாதிரி ஆடுது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பாடகர் மனோவின் மகன் ஜாகீர், “என்ன மாமா கடல் இப்படி கொடூரமா கொந்தளிக்குது. இப்போ என்ன பண்றது” என்று என்னிடம் கேட்டார்.

இறை நம்பிக்கை இருந்தால் சாமி கும்பிடு. அதிகபட்சம் இப்படியே போச்சுன்னா ஆளுக்கு ஒரு லைப் ஜாக்கெட் தருவங்க. அதை வாங்கிட்டு இந்த பசிபிக் கடலில் குதிக்க வேண்டியதுதான்.

என்ன எந்த பக்கம் கரை இருக்குன்னே தெரியாது. மெதந்துகிட்டே போக வேண்டியதுதான். அப்படியே போனாலும், கடல் கொந்தளிப்பு ஒரு புறம், குளிர் இன்னொரு புறம் கடுமையா இருக்கு என்று நான் சொல்லி முடிப்பதற்குள், சரசரன்னு ஒரு பெரிய மீன் அருகே வந்து வாலாட்டி சென்றது.

இதை பார்த்ததும் ஜாகீர் இன்னும் மிரண்டு போனார். அவரை பார்த்து, ‘’என்ன இவுங்க மாதிரி ஆளுங்கல்லாம் வருவாங்க. அதையெல்லாம் ஏதிர்த்து நாம போகணும்’’ என்றேன்.

அவர் அவ்வளவுதான். அரண்டு ஆடி போய்விட்டார். பின்னர் படகு ஒட்டியவரிடம் கடல் கொந்தளிப்பை பற்றி கேட்டோம். ‘’உங்களுக்கு இது புதுசு. எங்களுக்கு இது பழகிவிட்டது என்றார்.

அப்பப்போ இந்த மாதிரி சீற்றம் இருக்கும். அதை பற்றி கவலை படமுடியுமா. சில சமயம் படகு கவிழ்ந்து இறந்த அனுபவமும் உண்டு’’ என்று கூலாக சொன்னார்.

இதனைக் கேட்ட நாங்கள் கரைசேரும் வரையில் உயிரை பிடித்துக்கொண்டுதான் வந்து சேர்ந்தோம் என்றார் எம்.எஸ். பாஸ்கர்.

இவர் தற்போது நாடி துடிக்குதடி, ரணம், சரவண பொய்கை, சொல்லித்தர நானிருக்கேன், சுட்டகதை, ரகளபுரம், சந்தாமாமா, இருவர் உள்ளம், காதல் பிரதேசம், நாகராஜசோழன், தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் ஒரு படம், தமிழ், மலையாளம் இரு மொழிகளில் உருவாகும் ஒரு படம் என கைவசம் ஒரு டஜன் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum