தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பொழிச்சலூரில் ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்

Go down

பொழிச்சலூரில் ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் Empty பொழிச்சலூரில் ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்

Post  ishwarya Fri May 24, 2013 12:23 pm

சென்னை விமான நிலையம் பின்புறம் 2 கி.மீ தொலைவில் உள்ள பொழிச்சலூரில் ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. வடதமிழ்நாட்டில் இந்த ஒரே ஆலயம் ஒன்று தான் சனிபகவானுக்கு என்று சனிதோஷ நிவர்த்தி பரிகார ஸ்தலமாகவும், நாடி ஜோதிடத்தின் பாவவிமோசனம் செய்ய பரிகார ஸ்தலமாகவும் சிறப்புற்று விளங்கி வருகின்றது.

இதனால் பக்தர்கள் இக்கோவிலை வட திருநள்ளாறு என்று வர்ணிக்கிறார்கள். சனிபகவான் எப்பொழுதும் கண்ட சனி, ஜென்ம சனி, ஏழரை சனி, என்று பலவிதமாக பக்தர்களை பிடித்து வாட்டி வதைத்து துன்பம் கொடுத்து வந்தார்.இதனால் இவருக்கு ஏற்பட்ட பாவங்களை போக்கி கொள்ள இக் கோவிலில் நள்ளார் தீர்த்தம் உண்டு பண்ணி சிவபெருமானை வழிபட்டார்.

இதன் மூலம் சனிபகவான் பிறருக்கு செய்த தன் பாவத்தை போக்கி பாவவிமோசனம் பெற்றதாக வரலாறு கூறுகிறது. இவ்வாலயத்தில் சனிபகவான் திருநள்ளாறுக்கு அடுத்ததாக தனியாக எழுந்தருளி சின்முத்திரையுடன் காட்சியளிக்கின்றார்.

இந்த ஆலயத்தில் சனிபகவானுக்கு நெய்வேத்தியம் செய்யும் நேரத்தில் சனிபகவானுடைய வாகனமான காக்கைகள் கூட்டமாக வந்து அர்ச்சகர் போடும் அன்னங்களை சாப்பிட்டு செல்லும். காக்கை, மாடு, நாய்க்கு அன்ன தீவனம் அளித்தால் தோஷங்கள் நீங்கி பாவவிமோசனம் கிட்டும் என்பது ஐதீகம்.

பழமை வாய்ந்த கோயிலாக விளங்கும் இவ்வாலயத்தில் இருக்கும் லிங்கம் சுயம்பு லிங்கம் ஆகும். கி.பி 12-ம் நூற்றாண்டு சோழ மன்னர் ஆட்சிபுரிந்த காலகட்டத்தில் கஜபிருஷ்ட விமான அமைப்புடன் கட்டப் பெற்றதாகும். இவ்வாலயத்தில் அகத்திய முனிவர் இமயம் விட்டு பொதிகை மலை நாடி வந்தபொழுது இங்கு சிலகாலம் தங்கி பூஜை செய்து வந்ததால் இறைவன் அகத்தீஸ்வரராகவும் இறைவி ஆனந்தவல்லியாகவும் காட்சியளிக்கின்றனர்.

இக்கோவிலுக்கு மற்றொரு குறிப்பிட்ட அம்சமும் உண்டு. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று அம்சங்களும் ஒருங்கே கொண்டு சிறந்த புண்ணியதலமாக விளங்குகிறது. இவ்வாலயத்தில் ஈசன் கிழக்கு நோக்கியும் அம்மன் தெற்கு நோக்கியும் உள்ளனர்.சித்திரை 7,8,9 தேதிகளில் சூரியன் உதயம் ஆகும்போது சூரியன் உள்ளே இருக்கும் சிவலிங்கம் மீது விழும் வகையில் வடக்கு வாசல் அமைக்கப்பட்டுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum