தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கல்லீரல் கொழுப்பை தடுக்க வழிமுறைகள்

Go down

கல்லீரல் கொழுப்பை தடுக்க வழிமுறைகள் Empty கல்லீரல் கொழுப்பை தடுக்க வழிமுறைகள்

Post  meenu Thu Jan 24, 2013 2:22 pm

கல்லீரல்தான் மனித உடலில் மிகப்பெரிய சுரப்பியாகும். சுமார் 1 கிலோ எடை கொண்டது. இது மிகவும் மென்மையான உறுப்பாகும். செம்பழுப்பு நிறத்துடன் காணப்படும். கல்லீரல் வயிற்றின் மேல் பகுதியில் வலது பக்கத்தில் அமைந்துள்ளது. நாம் உண்ணும் கொழுப்பு சத்துள்ள உணவுப்பொருட்கள் செரிப்பதற்கு பித்தநீர் மிகவும் அவசியமாகும். இந்த பித்தநீரை உற்பத்தி செய்வது கல்லீரல்தான்.

பொதுவாக கொழுப்புச் சத்துள்ள உணவுகளை செரிக்காமல் ஆங்காங்கே படிந்து ரத்தத்தின் மூலம் எல்லா உறுப்புகளுக்கும் சென்றடைந்து விடும். இதில் முக்கியமாக கொழுப்பு இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாய்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் இதயத்திற்கு தேவையான ரத்தம் செல்வதில்லை.

இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த கொழுப்பை கல்லீரலில் சுரக்கும் பித்த நீரானது கரைத்து விடுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படாமல் இருக்க கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. கல்லீரலில் கொழுப்பு தேங்குவதால், இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்துவதாகவும், அதிக அளவு கொழுப்பு காணப்படுவதால் சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்களை உருவாக்குகிறது.

ஈரலில் மிக அதிக அளவுக்கு கொழுப்பு சேர்வதால், ஆல்கஹால் அல்லாத கொழுப்பு தொடர்பான நோய்கள் ஏற்படுகிறது. உடல் பருமன் என்பது பரவலாகி விட்ட இந்தக் காலக் கட்டத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கல்லீரல் கொழுப்பு என்பதும் அதிகரித்து வருவதாகவும், அவை தொடர்பான நோய்களும் உயர்ந்து வருவதாகவும் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது என்கிறார் பிரபல கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேசன். அவர் கூறியதாவது:-

பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ், பீஸா மற்றும் குளிர்பானங்கள் போன்றவற்றில் உணவுப் பொருள் கெடாமல் இருக்க சில ரசாயனங்கள் சேர்க்கப்படு கின்றன. அவை 100 சதவீதம் கல்லீரலை குறி வைத்து தாக்குகிறது. இந்த நொறுக்குத் தீனிகளை அதிகம் விரும்பி சாப் பிடுவது குழந்தைகள் தான். இவை ருசியாக இருப்பதால் குழந்தைகள் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விடுகிறார்கள்.

நொறுக்குத் தீனிகளால் 10 வகையான கல்லீரல் நோய்கள் ஏற்படுகின்றன. 1. ஹெப்பாடிட்டீஸ் ஏ 2. ஹெப்பாடிட்டீஸ் பி 3. ஹெப்பாடிட்டீஸ் சி 4. ஹெப்பாடிட்டீஸ் டி 5. ஹெப்பாடிட்டீஸ் இ 6. சைரோசிஸ் 7. கலோலிதிசிஸ் 8. கலேசிஸ்டிடிஸ் 9. கார்சினோமோ 10. ஹெபடோமெகலி. நொறுக்குத்தீனிகளில் உள்ள நச்சுப்பொருட்களை முதலில் கல்லீரல் சுத்திகரிக்கிறது. எஞ்சியவற்றை சிறு நீரகம் சுத்திகரிக்கிறது.

நொறுக்குத் தீனிகளை ஒரு குழந்தை அடிக்கடி சாப்பிட்டால் கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்படும். நொறுக்குத்தீனியை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அவை உடனுக்குடன் ஜீரனமாகாமல் குடலில் தேங்குகிறது. இவை தான் விஷமாக மாறுகிறது. கல்லீரல் பாதிக்கப் பட்டால்அஜீரணக் கோளாறு, பசியின்மை, குமட்டல், வாந்தி, அடிக்கடி காய்ச்சல் போன்றவை ஏற்படும்.

ஜீரண மண்டல பாதிப்பு.........

கல்லீரலில் கொழுப்பு அதிகரித்தால் முதலில் பாதிப்படைவது ஜீரணம் தான். வயிற்றில் ஜீரணம் சரிவர நடைபெற, கல்லீரல், பித்தநீரை தயாரிக்கிறது. பித்த நீர் தவிர, கல்லீரல் ரத்த புரதம் மற்றும் நூற்றுக்கணக்கான என்ஜைம்களை தயாரிக்கிறது. இவற்றால் ஜீரணமும், இதர உடலின் வேலைப்பாடுகள் சரிவர நடக்கும். உணவிலிருந்து கிடைக்கும் சர்க்கரையை லிவர் `கிளைக்கோஜென்' ஆக மாற்றி அதை சேமித்து வைக்கிறது. தேவைப்படும் போது தருகிறது.

உடலிலிருந்து நச்சுப்பொருட்களை நீக்குவதையும் கல்லீரல் செய்கிறது. குளூகோஸ், விட்டமின்கள் ஏ, பி12, டி, இரும்பு, காப்பர் முதலியவற்றை கல்லீரல் சேமித்து வைக்கிறது.கார்போ ஹைடிரேட்களையும், புரதத்தையும் கொழுப்பாக மாற்றி கல்லீரல், பிற்கால தேவைக்காக சேமித்து வைக்கிறது.கல்லீரலில் அதிக கொழுப்பு சேர்ந்தால் கல்லீரல் வீங்கி விடும். நீரிழிவு மற்றும் அதீத பருமன் உள்ளவர்களுக்கு இது ஏற்படும்.

80 சதவீதம் குழந்தைகள் பாதிப்பு.......

குழந்தைகள் அடிக்கடி நொறுக்குத் தீனிகளை விரும்பி சாப்பிடுகின்றன. நொறுக்கு தீனிகளில் உள்ள கொழுப்பு குழந்தைகளின் கல்லீரலின் மேல் பகுதியில் படிந்து பருமனாக மாறி விடுகிறது. தற்போது நம் நாட்டில் உள்ள 80 சதவீதம் குழந்தைகள் இதுபோன்ற கொழுப்பு மிகுந்த ஈரலை உடையவர்களாக உள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளிடம் இது போன்ற கோளாறுகள் வெறும் 20 சதவீதம் மட்டும்தான் இருந்தது.

இதற்கு காரணம் ரசாயணம் கலக்காத உணவுகள்தான். ஆனால் தற்போது ரசாயணம் கலக்காத உணவைப்பார்ப்பதே அரிதாக உள்ளது. சில உணவுகளில் ருசிக்காக சில ரசாயணங்கள் சேர்க்கப்படுகின்றன. இவற்றை நம்மூர் கடைகளில் சாஷே பாக்கெட்டுகளில் வைத்து விற்கிறார்கள். அதை தவிர்க்க வேண்டும்.

தடுக்க வழிகள்.......

உடல் பருமனைக் குறைக்கும் போது, கல்லீரலில் உள்ள கொழுப்பானது தானாகவே கரைந்துவிடும்.கலோரி கட்டுப்பாடு காரணமாக கல்லீரலில் உள்ள கொழுப்பு குறையும்.எனவே உடல் பருமனைத் தவிர்ப்போம். கொழுப்புச் சத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபடுவோம். பாக் கெட்டில் அடைத்து விற்கப்படும் நொறுக்குத் தீனிகளை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது.

வீட்டில் தயாரித்த உணவுகளை கொடுப்பது நல்லது. உணவில் காய்கறிகள் அதிகம் சேர்க்க வேண்டும். தினமும் ஏதாவது சில பழங்களை உண்ணலாம். குழம்பு போன்றவற்றை சமைத்த அன்று மட்டும்தான் சாப்பிட வேண்டும், அதை பிரிட்ஜில் வைத்து மறுநாள் சாப்பிடக் கூடாது. ரசாயண குளிர்பானங்களை அருந்த கூடாது. கல்லீரல் நோயாளிகள் அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது.

சோடா உப்பு கலந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகாத உணவுகள் வேர்கடலை மற்றும் கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும். உணவில் அதிக அளவில் கீரைகள் சேர்த்துக் கொள்ளவேண்டும். இளநீர், கரும்புச்சாறு, தேங்காய் பால் அருந்தலாம். கல்லீரல் அழற்சி உள்ளவர்களுக்கு சைவ உணவே சிறந்தது. கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள் திராட்சை ஜுஸ், கேரட் ஜுஸ், போன்றவைகளை தினசரி சாப்பிடுவதன் மூலம் சிறுநீர் சுலபமாக பிரியும்.

மலமிளகும். எலுமிச்சை சாறு சேர்த்த நீரை அதிகமாக எடுத்துக் கொண்டால் கல்லீரலின் செல்கள் பலமடையும். மஞ்சள் காமாலைக்கு நல்லது.சத்துள்ள ஆகாரத்தால் கல்லீரலை புதுப்பிக்க முடியும்.பூண்டை தினசரி சமையலில் சேர்ப்பது நல்லது. சீரகப்பொடி கலந்த மோர் ஜீரணத்தை மேம்படுத்தும்.

கல்லீரல் கோளாறுகளை தவிர்க்க, சமையல் எண்ணெய்யை 20 லிருந்து 30 கிராம் வரை தினசரி உபயோகிக்கவும். அதிக எண்ணெய் ஆபத்துஎன்கிறார் சென்னை பெரம்பூர் சென் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வெங்கடேசன்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum