தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராகு-கேதுவை வழிபடுவது எப்படி?

Go down

ராகு-கேதுவை வழிபடுவது எப்படி? Empty ராகு-கேதுவை வழிபடுவது எப்படி?

Post  amma Fri Jan 11, 2013 6:24 pm

ராகு பகவான் நாளை மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) விருச்சிக ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். கேது பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ராகு - கேது இருவரும் பெரும் வீரர்கள். அரசு பதவி பெற உதவிகரமாக இருப்பவர்கள். ராகுவை வழிபாட்டால் பைத்தியக்காரன் கூட தெளிவு பெறுவான் என்பது ஆன்றோர் வாக்கு.

ராகு பலம் இருந்தால் வாழ்வில் தானே உயர்வு வரும். என்றாலும் சில அமைப்பின் காரணமாக ராகு - கேது பெயர்ச்சி எதிர் விளைவுகளை ஏற்படுத்தி விடும். எனவே ராகு - கேது பெயர்ச்சியின்போது ஐதீகப்படி உரிய வழிபாடு செய்ய வேண்டும். அப்படி செய்தால் ராகு - கேதுக்களின் தாக்கங்கள் குறைந்த நல்லது நடக்கும். வழிபாடு செய்வது எப்படி?

ராகு-கேதுவை வழிபடும் முறை வருமாறு:-

வருகிற 2-ந்தேதி (ஞாயிறு) ராகு-கேது பெயர்ச்சி தினத்தன்று ராகு காலமான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை வழிபாடு செய்ய மிகவும் ஏற்ற நேரம் ஆகும். முதலில் ராகுவை வழிபட வேண்டும். இதற்கு ஐந்துமுக பாம்பு கோலம் போட வேண்டும். அதன் மீது கருப்பு உளுந்தை பரப்பி வைத்துக் கொள்ள வேண்டும்.

அந்த உளுந்தின் மீது ஏழு அகல் விளக்குகளை வைத்து தீபம் ஏற்ற வேண்டும். அந்த சமயத்தில் சித்தர குப்தரை நினைத்து வணங்க வேண்டும். பின்னர் ராகு கவசம் படிக்க வேண்டும். இந்த வழிபாட்டை செய்தால் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மிகப்பெரிய அளவில் லாபம் அளிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ராகு உறவுக்காரகன் ஆவார்.

எனவே அவரை இப்படி ஐதீகப்படி வழிபட்டால் பிரிந்து சென்ற உறவினர்கள் நம்மை தேடி வருவார்கள். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை ஓங்கும். ராகு தியான துதியை சொல்லி வர வேண்டும். இதன்மூலம் வீட்டில் செல்வம் பெருகும்.

கேது பூஜை............

ராகு பூஜை முடிந்ததும் கேதுவுக்கு வழிபாடு நடத்த வேண்டும். ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரைதான் இந்த வழிபாட்டுக்கும் உகந்த நேரம் ஆகும். இந்த வழிபாடு செய்ய முதலில் பாம்பின் வால் பகுதியை கோலமாக வரைந்து கொள்ள வேண்டும். அந்த வாலின் மீது கொள்ளுப் போட்டு பரப்பி வைக்க வேண்டும்.

அதன்மீது 5 அகல் விளக்குகளை வைத்து தீபம் ஏற்ற வேண்டும். பிறகு கேது கவசம் படிக்க வேண்டும். இந்த வழிபாடு மிகமிக அரிய பலன்களை தரவல்லது. கேதுபகவான் ஞானக்காரகன் ஆவான். எனவே கேதுவை மனம் குளிர வழிபட்டால் மந்தப்புத்தி உள்ளவர்களிடம் மனமாற்றம் ஏற்படும்.

படிப்பில் சுமாராக இருக்கும் மாணவ- மாணவிகள் இந்த வழிபாட்டை செய்தால் கல்வியில் மேம்பாடு அடையலாம். கேது பூஜையின்போது தவறாமல் கேது கவசம் படித்தால் கேதுவின் ஆற்றலால் பிரிந்து சென்ற கணவர் திரும்பி வருவார்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum