தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் செயற்கை கருப்பையால் குழந்தை பெறலாம்

Go down

 புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் செயற்கை கருப்பையால் குழந்தை பெறலாம்  Empty புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் செயற்கை கருப்பையால் குழந்தை பெறலாம்

Post  meenu Thu Jan 24, 2013 1:21 pm

குழந்தை பேறு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு சாதனையாகவே கருதப்படுகிறது. அதனால் தான் வம்சத்தை நிலை நிறுத்த ஒரு வாரிசை எதிர் நோக்கி இந்த மனித குலமே காத்துக்கிடக்கிறது. இந்த விசயத்தில் பெண்ணை போற்றுபவர்களும் உண்டு. குழந்தை பேறு பெறமுடியாமல் பல பெண்கள் விவாகரத்து பெற்றுள்ளனர்.

சில பெண்களின் கருப்பை பலவீனமாக இருப்பதால் குழந்தை பேறு பெற முடியாமல் போகிறது. இவைகளின் சோகத்தை சுகமாக்க வந்துள்ளது செயற்கை கருப்பை. பெண்களுக்கு கர்ப்பபையில் கோளாறு ஏற்பட்டால் அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.

தற்போது பெண்களுக்கு அதிக அளவில் கர்ப்பபை புற்று நோய் ஏற்படுகிறது. அவர்களுக்கும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலை உள்ளது. இவர்களுக்கு உதவும் வகையில் விஞ்ஞானிகள் செயற்கை கர்ப்பபையை உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர்.

இது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள புரோன் பல்கலைக்கழகம் மற்றும் பெண்கள், குழந்தைகள் மருத்துவ விஞ்ஞானிகள் கூட்டாக ஆய்வு செய்து இதை உருவாக்கி உள்ளனர். உடல் தசையில் இருந்தே இதை உருவாக்கி இருக்கின்றனர்.

இதை பெண்கள் உடலில் பொருத்தி கருவை வளர்க்க முடியும், செயற்கை கர்ப்பபை வெற்றிகரமாக அமைந்தால் குழந்தை இல்லாத பெண்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும் என்கிறார் சென்னை வட பழனி ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மைய இயக்குனர் டாக்டர் காமராஜ். அவர் மேலும் கூறியதாவது:-

தாய்மை என்பது எவ்வளவு புனிதமானது என்பது, அதனை அனுபவித்த, அனுபவிக்க காத்துக் கிடக்கும் பெண்களுக்கே அதிகம் புரியும். மருத்துவ ரீதியாக இதற்கு ஒன்றுமே செய்ய முடியாது. இது இறைவன் அளித்த சாபம் முன்ஜென்ம வினை என்று நினைத்து தன்னை நொந்து கொண்டிருக்கும் தாய்மார்களுக்கு நான் கூறிக் கொள்ள விழைவது, அந்த காலங்கள் கடந்து விட்டன.

இன்று உலகம் தன் அடுத்த பரிமாணத்தினை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. அதனைச் சுருங்கச் சொன்னால் முடியாது என்று நினைத்திருந்த எத்தனையோ விசயங்களுக்கு இன்று விடை கண்டிருக்கின்றான்.

மனிதன் தன் விஞ்ஞான மூளையின் மூலமாக ஒரு காலத்தில் தீர்க்கவே முடியாத நோயாக பெரியம்மையை கூறுவார்கள். இன்று சுத்தமாக அந்த நோய் அழிக்கப்பட்டு விட்டது. அது போல் இனி வரும் நாட்களில் குழந்தை இல்லை என்பதே இல்லை என்று ஆகும் காலம் நாம் வாழும் இந்த ஜென்மத்திலேயே கண்டு செல்வோம் என்றே தோன்றுகின்றது.

குழந்தை பெறுவதில் தாய்மார்கள் பெறும் பிரச்சினைகளை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று தன் உடலில் கருப்பை இருந்து, தன் மாதாந்திர சுழற்சிகள் சரியாகவும், இருந்த போதும், கணவனின் உயிரணுக்களின் எண்ணிக்கையோ குறைவாக இருப்பின் இந்த பிரச்சினை வரலாம்.

அல்லது இரண்டாவதாக கருப்பையே பிறவி முதல் இல்லாமல் கருப்பை இருக்க வேண்டிய இடத்தில் ஒரு வெற்று சதைப் பட்டை மட்டுமே இருந்து மாதாந்திர சுழற்சிகள் ஏதும் பெறாமல், இவை அனைத்தையும் தாண்டி கருமுட்டை உற்பத்தி செய்யும் உற்பத்திப் பைக்குள் ஒன்றோ அல்லது இரண்டுமோ சேதமடைந்த நிலையில் குழந்தை பிறக்க பிரச்சினைகள் என்றோ இருக்க வாய்ப்புகள் உண்டு.

இன்றைய விஞ்ஞானம் இதற்கான ஒரு அற்புதமான வழி முறையை வரமாக நமக்கு கண்டளித்திருக்கின்றது. முதல் பிரச்சினைக்கு வழி, உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, செயற்கையாக மருந்துகளின் மூலம் மற்றும் ஒரு சாக்குப்பை போல உயிரணு உற்பத்தி தலத்தில் அவற்றை பிடித்து வைத்திருக்கும் சிஸ்ட்டுகளை அங்கிருந்து நீக்குவதன் மூலம், கருவினை நன்கு வளரவிட்டு உறவின் போது உயிரணுவுடன் இந்த அண்டத்தினை இணைய விடுவதுடன் குழந்தை உருவாக வழி செய்யலாம்.

அல்லது கருவை செலுத்தி உறைதல் முறையில் பலகீனமாக இருக்கும் தாயின் கருப்பையினுள் ஆணின் உயிரணுவை பல வந்தமாக ஒரு ஊசியின் மூலம் புகுத்தி இரண்டையும் இணையவிட்டு கருவை உருவாக்கி குழந்தை உருவாக்கலாம்.

அல்லது இருவரின் உயிரணுக்களையும் வெளியே எடுத்து உறைதல் மூலம் ஒரு சோதனைக் குழாயில் இணைத்து அதனை தாயின் கருப்பையினுள் மீண்டும் வைத்து வளர வைக்கலாம். இப்படி பல வழிமுறைகள் உள்ளன. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கருப்பை புற்றுநோய் மற்றும் கருப்பை கட்டிகளால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த காரணங்களால் இளம் வயதிலேயே ஏராளமான பெண்களின் கருப்பை அகற்றப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் குழந்தை பெற முடியாத நிலை இருந்தது. இதனால் அப்பெண்கள் நம்மால் இனி குழந்தை பெற இயலாது என்ற கவலையில் மூழ்கி கிடந்தனர்.

அப்படிப்பட்டவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு வசதியாக மருத்துவ விஞ்ஞானிகள் செயற்கை கருப்பையை உருவாக்கி உள்ளனர். இதனால் இனி இந்த உலகில் யாருமே குழந்தை இல்லை என்று சொல்ல முடியாத அளவுக்கு மருத்துவம் வளர்ந்து விட்டது.

கட்டி வளர்தல் என்றாலே நாம் உடனடியாக நினைப்பது அது புற்றுநோயோ என்றுதான். அதுவும் ஒரு வகையில் நல்லதுதான், எந்தவொரு சந்தேகமான கட்டிகளையும் சோதித்து அவை புற்றுநோயல்ல என்று உறுதிப்படுத்திக் கொள்வது கட்டாயம்.

கருப்பையிலே புற்று நோய் கட்டியாக வளரலாம். ஆனால் அதை விட மிகவும் பொதுவாக ஏற்படும் புற்றுநோயல்லாத பைவ்ரோயிட் எனப்படும் கட்டிகள் பற்றி நிறையவே கேள்விப்பட்டிருப்போம். இது கருப்பைப் பையின் சுவற்றிலே இருக்கும் தசையில் இருந்து உருவாகும் கட்டியாகும்.

இது தனியாக இருக்கலாம் அல்லது ஒரு கருப்பையிலேயே பல கட்டிகள் இருக்கலாம். இந்த கட்டி புற்று நோயால் ஏற்படும் கட்டியல்ல. மேலும் இந்தக் கட்டி பிற்காலத்தில் புற்றுநோயாக மாறுவதற்கான சந்தர்ப்பமும் மிகவும் குறைவானது. இதனால் யாருக்காவது பிப்ராய்டு கட்டிகள் உள்ளது என்றால் பயப்பட வேண்டியதில்லை.

சில கட்டிகள் கருப்பையின் சுவற்றின் உட்புறமாக (அதாவது உருவாகிய சிசு கருப்பையின் உள்ளே ஓட்டிக் கொள்கின்ற இடத்திலே) இருக்கும்போது குழந்தை சரியாக கருப்பையில் நிலை கொள்ளாமல் அழிந்து போகலாம். சில வேளைகளில். குறிப்பாக குழந்தை கீழ் இறங்குவதை இந்தக் கட்டிகள் தடுப்பதால் சாதாரணமாக பிள்ளை பிறக்க முடியாமல் போகலாம்.

இதனால் சிசேரியன் மூலம் குழந்தை பிறக்க செய்யப்பட வேண்டி ஏற்படலாம். இப்போது இரண்டாம் வகையினரைப் பார்ப்போம், பிறப்பிலேயே கருப்பை இல்லாது இருத்தல், மாதாந்திர சுழற்றி இல்லாமலிருத்தல், கருமுட்டை உற்பத்தி செய்யும் உற்பத்திப்பைகளுள் ஒன்றோ, அல்லது இரண்டுமோ பலஹீனமாகவோ அல்லது சேதமடைந்த நிலையிலோ இருப்பினும், குழந்தை உருவாக வாய்ப்புகள் உண்டு.

முதலில் கருமுட்டை உற்பத்தி செய்யும் உற்பத்திப் பைகள் ஆங்கிலத்தில் ஓவரீஸ் என்று சொல்வர். பலவீனமாக இருப்பின் அவற்றினை தூண்டி விட பல சிகிச்சை முறைகள் வந்து விட்டன. ஒரு தேர்ந்த மகப்பேறு மருத்துவரை அணுகினால் ஓவரி இண்டிசிங் எனும் கரு உற்பத்தியை தூண்டுதல் மூலம் உற்பத்திப் பையினுள்ளிருக்கும் கருமுட்டையை தூண்டி விட்டு இனப்பெருக்கத்திற்கு அதனை தயார் செய்யலாம்.

அடுத்த வகையான கருப்பையே இல்லாமல் இருத்தல் என்ற வகைக்கு இப்போது அற்புதமான ஒரு மாற்று கண்டறிந்திருக்கின்றனர் விஞ்ஞானிகள் கருப்பை மாற்று சிகிச்சை, கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் இது உண்மையாகிக் கொண்டிருக்கின்றது.

செயற்கை இதயம், செயற்கை மூட்டு, செயற்கை கண் போல செயற்கை கருப்பையும் சாத்தியமான ஒன்று என்று விஞ்ஞானிகள் கூறி அவ்வாராயச்சியில் முக்கால் பகுதியை தாண்டி விட்டனர். ஒரு புதிய மெம்ப்ரேனை (சவ்வு) விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருப்பதாகவும் அது செயற்கை கருப்பை உற்பத்திக்கு தகுதியானது என்றும் வெளியிட்டிருந்தது.

எனவே அந்த ஆராய்ச்சியும் ஓரளவு முடிந்து விட்டது. எனவே இனி கவலை வேண்டாம். அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகளில் செயற்கை கருப்பைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கருப்பை கோளாறில் சிக்கி அவதிப்படும் பெண்கள் இம்முறையை நாடி வருகிறார்கள்.

இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நம் நாட்டிலும் இந்த செயற்கை கருப்பை முறை பிரபலமாகத் தொடங்கி விடும் என்கிறார் டாக்டர் காமராஜ்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum