தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்திய பெண்களிடம் கருச்சிதைவு அதிகரிப்பு;தடுக்க சிகிச்சை முறைகள்

Go down

இந்திய பெண்களிடம் கருச்சிதைவு அதிகரிப்பு;தடுக்க சிகிச்சை முறைகள் Empty இந்திய பெண்களிடம் கருச்சிதைவு அதிகரிப்பு;தடுக்க சிகிச்சை முறைகள்

Post  meenu Thu Jan 24, 2013 12:19 pm


சமீபகாலமாக இளம்பெண்கள் பலர் சிறுவயது முதலே எடையைக் குறைப்பதற்காக உணவுக்கட்டுப்பாட்டை கடைபிடிக்கிறார்கள்.இதனால் அவர்கள் ஒல்லியாக அழகாக மாறுகிறார்கள். ஆனால் அவர்களது உடலில் பல்வேறு கோளாறுகளை ஏற்படுத்தி விடுகிறது.அதில் முக்கியமாக கருப்பை கோளாறு. இதேபோல் பெண்கள் பலர் தாமதமாக குழந்தை பெற்றுக்கொள்வதும் இன்னொரு காரணம்.

தற்போது இந்தியாவில் உள்ள நகர்ப்புறங்களில் குழந்தை பெற இயலாத பெண்கள் அதிகரித்துள்ளனர்.அவர்கள் நவீன சிகிச்சை மூலமே குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள் என்கிறார் பிரபல குழந்தையின்மை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெயராணி. அவர் மேலும் கூறியதாவது:

திருமணமான சில பெண்கள் குழந்தைபேறு கிடைக்கவில்லையென்றும், கர்ப்பப்பை பலமிழந்து இருக்கிறது என்றும், கருப்பை சிறிதாக இருக்கிறது என்றும் சொல்வார்கள். உண்மையில், இவர்களது இந்த பிரச்சினைக்கு காரணம் கர்ப்பப்பை அல்ல. இவர்களின் குழப்பங்களுக்கு கருமுட்டை பையிலிருந்து வெளிவரும் தரமற்ற முட்டைகள் , குறைபாடுகள் உள்ளதாக, கருப்பிடித்தாலும் கருவறையில் ஒட்டாத கருவாக மாறுகிறது.

கருவறையில் ஒட்டுவதற்கு இம்பிளட்டேசன் என்று பெயர். கருச்சிதைவு முதல் மூன்று மாதங்களுக்குள் நடைபெற்றுவிடும். 35 முதல் 40 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்பட அதிகம் வாய்ப்பு உண்டு. இக்கருக்களில் பல பிறவிக்கோளாறுகள் உள்ளன. 40 வயதினை கடக்கும் நிலையில் கருமுட்டை மரபணுக் கோளாறுகளுக்கு உள்ளாகி 50 சதவிகிதம் தகுதியற்ற மோசமான கருக்களாக உள்ளன.

கருச்சிதைவு முதல் 40 நாட்களில் அதிகமாகி விடுகிறது. அவர்களுக்கு கருச்சிதைவு நடைபெறுவதை மாதமுறை வருவதாகவே அவர்கள் எண்ணுவார்கள். இருக்கருச்சிதைவால் உதிரம் சிறிது அதிகமாகப் போகும். வலியோடும் போகும் இது கருச்சிதைவின் விளைவே தவிர மாதமுறை அல்ல. சிறுநீர்ப் பரிசோதனையின்போது குழந்தை என்று வந்துவிடும். ஆனால் சில நாட்களில் கருச்சிதைவு ஏற்பட்டுவிடும்.

அதற்கு மேலும் அதை உறுதிப்படுத்த வேண்டுமென்றால் மாதமுறை வருவதற்கு இரண்டு மூன்று நாட்கள் தள்ளி சென்றாலும் நீர் பரிசோதனை, இரத்தத்தில் பீட்டா ஏஇஎ என்ற ஹார்மேன் பரிசோதனை ஆகியவற்றை செய்து பார்த்துக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் இவையெல்லாம் கருச்சிதைவாகிவிடும்.

இவையெல்லாம் 35 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் பெண்கள் கருத்தரிக்கும்போது அவர்களது தரமற்ற கருமுட்டைகளால் ஏற்படும் வினைகள். அண்மைக்காலமாக சோதனைக் குழாய் குழந்தை முறைகள் எல்லா மருத்தவமனைகளிலும் பிரபலமாகி வருகின்றன. இதைப்பற்றி பல விளம்பரங்களும் வெளியிடப்படுகின்றன.

உண்மையில் இரு ஒரு முன்னேற்றமான முறைதான். இந்த சோதனை குழாய் குழந்தை முறையில் கரு ஒட்டுவதற்கு முனபாகவே, அதிலுள்ள மரபணு கோளாறுகள் போன்றவற்றை அறிந்து களைவதற்கு பல சோதனைகள், ஆராய்ச்சி முறைகள் உள்ளன. இது ஒரு சாதகமான அம்சமாகும்.

சோதனை குழாய் குழந்தையில் 1,2,3,4, என்று பல கருப்படித்த கருக்களை உருவாக்கி, அவற்றில் ஏதாவது குறைபாடுகள் இருக்கின்றனவா என்று கண்டறிந்து, கழிக்க வேண்டிய தவிர்க்க வேண்டிய கருக்களைத் தவிர்த்து விட்டு நல்ல தரமான கருக்களை கர்ப்பப்பைக்குள் செலுத்தி விடுகிறார்கள்.

குறைபாடு இல்லாத குழந்தை.....

ஒரு பெண்ணுக்கு ஆரம்ப நிலை கருவின் எல்லாத் தன்மையையும் பல்வேறு பரிசோதனைகள் மூலம் அறிந்து கொள்ள முடியும். ஆண் அணு, பெண் கருமுட்டை இரண்டும் இணைந்த ஆரம்ப நிலைக்கருவினை திசுப் பரிசோதனைக்கு உட்படுத்தும் போது ஆண் அணுக்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தாலும் கண்டறிந்துவிடலாம்.

உதாரணமாக குரோமோசாம் என்ற மரபணுக்களில் மொசைசிம் என்ற கோளாறுகள் மிக அதிகமாக உள்ளன. இவற்றால் 7.2 சதவிகிதம் கருச்சிதைவாகி விடுகின்றன. இவற்றையெல்லாம் கண்டுபிடித்து கருவை உள்ளே செலுத்தாமல் தவிர்த்துவிடலாம். இதைப்போன்றது தான் டிரையோஸ்மிக் ஆப்ஸ்பிரிங்.

இதுவும் ஒரு குறைபாடு தான். இதை கண்டுபிடிப்பதற்கு சோரியன் விலஸ்பயோங்சி, சோரியன் விலஸ்சாம்ளிங் ஆகியவை உள்ளன. கரு உண்டான ஆரம்ப கட்டத்தில் ஆண் அணு, பெண் முட்டை இரண்டும் இணைந்து உண்டாகிய ஆரம்ப கால கரு உண்டான ஆரம்ப கட்டத்தில் ஆண் அணு, பெண் முட்டை இரண்டும் இணைந்து உண்டாகிய ஆரம்ப கால ஜைகோட் இவற்றை சுற்றியிருக்கும் திசுக்கள், இவற்றிலிருந்து திசுப் பரிசோதனைக்கு எடுக்கலாம்.

ஜைகோட்டை சுற்றியிருக்கும் திசுக்கள்தான் பிற்காலத்தில் பிளேசன்டா என்ற நஞ்சாக மாறுகின்றன. இதை சோரியன் விலஸ் என்பார்கள். இந்த திசுப் பரிசோதனை மூலம் வளமான, நலமான குழந்தைகள் கிடைக்கும்.

கருமுட்டை தானம்....

ஆணிடம் அணுக்கள் இல்லாத போது விரைப்பையிலிருந்து உறிஞ்சி எடுத்தும் செய்யப்படுகிறது. இதில் வெற்றி வாய்ப்பு 50 முதல் 70 சதவீதம் வரை உள்ளது. கருவில் தோல் கெட்டியாக இருந்தாலோ, கருப்பையினுள் ஒட்டாமல் இருக்க கர்ப்பப்பை தோல் தாராளமாக இருந்தாலோ கருவின் வெளித்தோல் தன்மை அதிகரிக்கலாம்.

இயற்கையிலேயே கருமுட்டை குறைந்த அல்லது இல்லாத பெண்களுக்கும் மாதவிடாய் நின்று கருமுட்டைகள் உருவாகாத பெண்களுக்கும் கரு முட்டை தானம் என்ற முறையில் குழந்தையை உருவாக்க நவீன விஞ்ஞானத்தில் வாய்ப்புகள் உள்ளன.

செயற்கை கருத்தரிப்பு...

குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு வழங்கப்படும், உலக நாடுகளில் பிரபலமான செயற்கை கருத்தரிப்பு முறை, கருத்திசு வளர்ச்சி முறை, குறைந்த உயிரணுக்கள் கொண்டவருக்கு விதைப்பையிலிருந்து அணுக்களை உறிஞ்சி செயற்கையாக செலுத்துவது, லேசர் முறையில் கருவை பொரிக்கச் செய்தல், கருமுட்டை தானம், வாடகைத்தாய் போன்ற பல்வேறு சிறப்பு சிகிச்சைகள் இந்தியா முழுவதிலும், குறிப்பாக தமிழ்நாடெங்கும் வழங்கப்பட்டு வருகின்றன.

பிந்திய வயதுகளில் திருமணம் செய்வது என்பது இப்போதுள்ள சூழ்நிலையில் சகஜமாகிவிட்டது. திருமணத்திற்கு முன் படிப்பு, தொழில் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை தவறென்று சொல்ல முடியாது. தவிர்க்கவும் இயலாது. ஆனால் திருமணம் ஆகி ஓரிரு ஆண்டுகளில் கருத்தரிப்பு நிகழவோ அல்லது கருத்தரிப்புக்கான சாதாரண அறிகுறிகளோ தோன்றாத நிலையில் தகுந்த மருத்துவர்களை அணுகுவது அவசியம்.

குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள், சில தகவல்களையும் அறிவுரைகளையும் பெற்றுக்கொள்வது அவர்களுக்கு நன்மைபயக்க கூடியனவாக இருக்கும். ஐ.வி.எப். எனும் செயற்கை கருத்தரிப்பு முறையில் ஒரு பெண்ணின் கரு முட்டை பையில் பல கரு முட்டைகளை உருவாக்கி, அவற்றை உறிஞ்சி, பின் அப்பெண்ணின் கணவரிடம் இருந்து பெறப்படும் உயிரணுவை கலக்க செய்து உருவாக்கும் கருவினை செயற்கை கருப்பை எனப்படும் சாதனத்தில் வைத்து வளர வைத்து, பின் இரண்டு மூன்று நாட்கள் கழித்து பெண்ணின் கருப்பையினுள் செலுத்தும் முறையாகும்.

இதன் மூலம் குழந்தை கிடைக்க 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை வாய்ப்புள்ளது. பிளஸ்டோ சிஸ்ட் கல்ச்சர் எனப்படும் கருத்திசு வளர்ச்சி முறையில் வழக்கமாக செய்யப்படும் சோதனை குழாய் குழந்தை முறையில் போல்அல்லாது, கருவானது, ஐந்து நாட்கள் பெட்டியில் வளர்க்கப்பட்டு பின்னர் கருப்பையில் வைக்கப்படும்.

இயற்கையில் முட்டையானது வெளிவந்தவுடன் கருவறை குழாயினுள் ஆண் உயிரணுக்களுடன் சேர்ந்து கருவாக உருவாகும். அது பின்னர் பல மாற்றங்கள் அடைந்து, ஐந்தாம் நாள் கருத்திசுவாக உருமாறி, கர்ப்பப்பையினுள் வளர்ந்து பின்னர் சிசுவாக மாறும். ஆகவே, கருத்திசு வளர்ச்சி, இயற்கையோடு ஒன்றிய ஒரு சிகிச்சை முறையாகும். எனவே இதில் வெற்றி வாய்ப்பு 55 சதவீதம் முதல் 65 சதவீதம் வரை இருக்கிறது.

ஐவிஎப், ஐசிஎஸ்ஐ சிகிச்சைகள் தோல்வியடைந்த தம்பதியருக்கு இந்த சிகிச்சை முறை உகந்தது. மிகக்குறைவான உயிரணுக்கள் கொண்ட ,போதுமான உயிரணுக்கள் இருந்தும் அதில் போதிய வேகத்தன்மை இல்லாதவர்களும் ஐ.சி.எஸ்.ஐ. முறை மூலம் பயன்பெறலாம். பெண்களில் சிலருக்கு கருப்பை பலவீனம், பிறவியிலேயே கர்ப்பப்பை இல்லாமல் கருப்பை நோய் தாக்குதல் ஏற்பட்டால் குழந்தை பிறக்க வழியில்லை.

இது போன்ற பெண்களின் கரு முட்டையையும் அவரது கணவரின் உயிரணுவையும் செயற்கை முறையில் இணைத்து கரு உருவாக்கி பின்னர் இதை மற்றொரு பெண்ணின் கருப்பையில் செலுத்தி, கரு வளர்ந்து குழந்தை பெற வாய்ப்புகள் உள்ளன என்கிறார் சென்னை வடபழனி ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மைய இயக்குனர் டாக்டர் ஜெயராணி.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum