தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஏப்.2-ல் உண்ணாவிரதம்: தென்னிந்திய நடிகர் சங்கம்

Go down

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஏப்.2-ல் உண்ணாவிரதம்: தென்னிந்திய நடிகர் சங்கம் Empty இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஏப்.2-ல் உண்ணாவிரதம்: தென்னிந்திய நடிகர் சங்கம்

Post  ishwarya Sat May 04, 2013 6:23 pm

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ் கலை உலகின் சார்பாக இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தப்படுகிறது.

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமையில், பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் முன்னிலையில் இலங்கையில் இனப்போரினால் பாதிக்கப்பட்ட நம் தொப்புள் கொடி உறவுகளான நம் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான, சுதந்திரமான நல்வாழ்விற்காக 02.04.2013 அன்று செவ்வாய் கிழமை தி.நகரில் உள்ள அபிபுல்லா சாலையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், கில்டு, திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் அதில் இணைக்கப்பட்ட தொழிலாளர் சங்கங்கள், விநியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம், சின்னத்திரை நடிகர்கள் சங்கம், சின்னத்திரை எழுத்தாளர்கள் சங்கம், பி.ஆர்.ஓ.க்கள் சங்கம் ஆகிய அனைத்து சங்கங்களும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்கின்றன.

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum