தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீண்டும் படப்பிடிப்பில் அஞ்சலி

Go down

மீண்டும் படப்பிடிப்பில் அஞ்சலி Empty மீண்டும் படப்பிடிப்பில் அஞ்சலி

Post  ishwarya Sat May 04, 2013 2:31 pm

நடிகை அஞ்சலி கடந்த 8-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி மும்பையில் தலைமறைவாக இருந்தார். சித்தி பாரதிதேவி பணத்தை அபகரித்து தன்னை கொடுமைபடுத்தியதாக பரபரப்பான குற்றச்சாட்டுகளையும் கூறினார்.

இதனை பார்வதி தேவி மறுத்ததுடன் அஞ்சலியை யாரோ கடத்தி சென்று விட்டதாக போலீசில் புகார் அளித்தார். சென்னை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி கேபியஸ் கார்பஸ் மனுவும் தாக்கல் செய்தார். போலீசார் அஞ்சலியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் அவர் ஐதராபாத் போலீசில் ஆஜராகி தன்னை யாரும் கடத்தவில்லை என்று வாக்குமூலம் அளித்தார். இனிமேல் சொந்த வாழ்க்கை சம்பந்தமான முடிவுகளை நானே எடுப்பேன் என்றும் பேட்டி அளித்தார்.

ஏற்கனவே அஞ்சலி மாயமானதால் அவர் வெங்கடேஷ் ஜோடியாக நடிக்க வேண்டி இருந்த 'போல்பச்சன்' தெலுங்குபட ரீமேக் ரத்து செய்யப்பட்டது. தற்போது அந்த படத்தில் மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.

இதன் படிப்பிடிப்பு மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் உள்ள பஞ்சாக்னி என்ற இடத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் மகிழ்ச்சியாக நடித்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்தனர். அஞ்சலிக்கு தனியாக கேரவேன் ஏற்பாடு செய்துள்ளனர். இரவில் தங்குவதற்கு நட்சத்திர ஓட்டலில் ரூமும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

படக்குழுவினருடன் சிரித்து சகஜமாக பழகுகிறாராம். 24-ந் தேதி வரை அங்கு படப்பிடிப்பு நடக்கிறது. அதன் பிறகு சென்னை வந்து கோர்ட்டில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தூத்துக்குடியில் நடக்கும் 'சிங்கம் 2' படப்பிடிப்பில் அஞ்சலி.
» தெலுங்கில் மீண்டும் கால்பதிக்கும் அஞ்சலி
» மின்சாரம் தாக்கி விபத்து: நடிகை அஞ்சலி கால் வீங்கியது- படப்பிடிப்பு மீண்டும் ரத்து
» படப்பிடிப்பில் கைக்குழந்தையுடன் கோபிகா
» மீண்டும் இதே நிலை ஏற்பட்டால், நாட்டைவிட்டு வெளியேறுவேன்- கமல் மீண்டும் பேச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum