மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ரசீது இணைக்கப்படுமா?: மே 10-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்
Page 1 of 1
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ரசீது இணைக்கப்படுமா?: மே 10-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்
இந்தியாவில் தேர்தல் நடத்துவதற்கு வாக்குச்சீட்டு முறை நீக்கப்பட்டு, வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த எந்திரத்தில் வாக்களிப்பதால், முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது என்று பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி, சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ‘ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்ததும் ரசீது வருவதுபோல், வாக்குப்பதிவு எந்திரத்திலும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் ரசீது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் இன்று ஒரு அறிக்கை தாக்கல் செய்தது. அதில் “வாக்குப்பதிவு எந்திரத்தில் சான்றுச்சீட்டு (ரசீது) இணைப்பது பற்றி ஆலோசிப்பதற்காக மே 10-ம்தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட உள்ளோம். அப்போது வாக்குப்பதிவு எந்திரத்தில் சான்றுச் சீட்டு இணைப்பது பற்றி இக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
பின்னர், சான்றுச்சீட்டு இணைப்பதற்காக விதிகளை மாற்றியமைப்பது பற்றி சட்ட அமைச்சகத்திடம் பரிந்துரை செய்யப்பட்டு, பாராளுமன்றத்தில் மசோதா தாக்கலாகும்” என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து சுப்பிரமணிய சாமியின் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி, சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ‘ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்ததும் ரசீது வருவதுபோல், வாக்குப்பதிவு எந்திரத்திலும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் ரசீது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் இன்று ஒரு அறிக்கை தாக்கல் செய்தது. அதில் “வாக்குப்பதிவு எந்திரத்தில் சான்றுச்சீட்டு (ரசீது) இணைப்பது பற்றி ஆலோசிப்பதற்காக மே 10-ம்தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட உள்ளோம். அப்போது வாக்குப்பதிவு எந்திரத்தில் சான்றுச் சீட்டு இணைப்பது பற்றி இக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
பின்னர், சான்றுச்சீட்டு இணைப்பதற்காக விதிகளை மாற்றியமைப்பது பற்றி சட்ட அமைச்சகத்திடம் பரிந்துரை செய்யப்பட்டு, பாராளுமன்றத்தில் மசோதா தாக்கலாகும்” என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து சுப்பிரமணிய சாமியின் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அனைத்துக் கடவுள்களையும் ஒருங்கே தரிசிக்கலாம்!
» மின்னணு ஆளுகை
» செய்து மகிழ சின்னஞ்சிறு மின்னணு சோதனைகள்
» சென்னை: மயிலை ஆதிகேசவ பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவம் கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை 6 மணிக்கு பல்லக்கில் பெருமாள் வலம் வந்தார். இன்று 2 ம் தேதி ரத கலச பிரதிஷ்டையும் சூர்ணாபிஷேகமும், புண்ணிய கோடி விமானமும் நடக்கின்றன. இரவு 8 மணிக்க
» பம்பாய்க் கூட்டம்
» மின்னணு ஆளுகை
» செய்து மகிழ சின்னஞ்சிறு மின்னணு சோதனைகள்
» சென்னை: மயிலை ஆதிகேசவ பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவம் கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை 6 மணிக்கு பல்லக்கில் பெருமாள் வலம் வந்தார். இன்று 2 ம் தேதி ரத கலச பிரதிஷ்டையும் சூர்ணாபிஷேகமும், புண்ணிய கோடி விமானமும் நடக்கின்றன. இரவு 8 மணிக்க
» பம்பாய்க் கூட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum