தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெனாசீர் கொலை வழக்கு : முஷாரப்புக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

Go down

 பெனாசீர் கொலை வழக்கு : முஷாரப்புக்கு 14 நாள் நீதிமன்ற காவல்  Empty பெனாசீர் கொலை வழக்கு : முஷாரப்புக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

Post  ishwarya Thu May 02, 2013 6:18 pm

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பரில் ராவல்பிண்டியில் நடந்த தேர்தல் பிரசார பேரணியின் போது வெடிகுண்டு வீசியும், துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்யப்பட்டார். அப்போது, அதிபராக இருந்த முஷாரப் போதிய அளவு பாதுகாப்பு கொடுக்காததால்தான் இச்சம்பவம் நடந்ததாக புகார் கூறப்பட்டது.

இவர் மேல் தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் 57 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பாகிஸ்தானைவிட்டு வெளியேறி பல நாடுகளில் வாழ்ந்து வந்த முஷாரப், பாகிஸ்தானில் வரும் மே 11-ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடு திரும்பினர்.

அப்போது, 60 நீதிபதிகளை பதவி நீக்கம் செய்த வழக்கில் வழக்கில் முஷாரப் கைது செய்யப்பட்டு 2 வார வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இந்த காவல் மே 4-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் ராவல்பிண்டி நீதிமன்றம் பெனசீர் புட்டோ கொலை வழக்கில் அவரை மே 14-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் தேர்தல் தினத்தின் போதும் அவர் வீட்டுக் காவலில் இருப்பார் என தெரிகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum