தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காசிமேட்டில் சுனாமி வீடுகளை வழங்க கோரி சாலை மறியல்

Go down

காசிமேட்டில் சுனாமி வீடுகளை வழங்க கோரி சாலை மறியல் Empty காசிமேட்டில் சுனாமி வீடுகளை வழங்க கோரி சாலை மறியல்

Post  ishwarya Thu May 02, 2013 6:15 pm

ராயபுரம் காசிமேடு அருகே உள்ள அண்ணா நகர் பகுதியில் சுமார் 3,500 குடிசை வீடுகள் இருந்தன. 2004-ல் சுனாமி ஏற்பட்டபோது இந்த 3,500 குடிசை வீடுகளும் பாதிக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் காசிமேடு திருவொற்றியூரில் உள்ள ஆல் இந்தியா ரோடியோ பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வீடுகள் கட்டப்பட்டன.

ஆனால் கட்டப்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டவர் களுக்கு வழங்க படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரியிடம் முறையீட்டும் வீடுகள் வழங்கப்படவில்லை.

தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை உடனடியாக வழங்க கோரி பொதுமக்கள் இன்று காலை அண்ணா நகர் பீச் ரோட்டில் சாலை மறியல் செய்தனர்.

தகவல் அறிந்ததும் உதவி ஆணையாளர் சிவசங்கரன், மீன்பிடி துறைமுக போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய சுனாமி திட்டக்குழு உதவி பொறியாளர் சந்திரமோகன் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அவர் இன்னும் 25 நாட்களில் ஒதுக்கப்பட்ட வீடுகள் வழங்கப்படும் என்று கூறியதை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

இந்த சாலை மறியலால் 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அலுவலக பணிக்கு செல்பவர்களும், கல்லூரி, பள்ளிக்கு செல்லுபவர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  படத்தை திரையிடக் கோரி ரசிகர்கள் சாலை மறியல்,ஆர்ப்பாட்டம்
» படத்தை திரையிடக் கோரி ரசிகர்கள் சாலை மறியல்,ஆர்ப்பாட்டம்
» இலங்கை பிரச்சினை: வேலூரில் ஐ.டி.ஐ. மாணவர்கள்-வணிகர்கள் ஆர்ப்பாட்டம்இலங்கையில் தனிஈழம் அமைக்க வாக்கெடுப்பு நடத்த கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேலூர் அடுத்த அப்துல்லாபுரம் ஐ.டி.ஐ. மாணவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மறியல் செய்தனர். அப்போது
»  நாங்கள் காலிமனை வாங்கியுள்ளோம். 60 அடி நீளம் கொண்டது. மனைக்கு கிழக்கு, வடக்கு, தெற்கு மூன்று இடங்களிலும் சாலை அமைந்துள்ளது. மேற்குப் பகுதியில் சாலை இல்லாததால் குத்தலாக அமைந்திருக்கிறது. வீடு கட்டலாமா? இல்லையெனில், பரிகாரம் ஏதேனும் உள்ளதா?
» இலவச பொருட்களை வழங்க மாணவர்களிடம் பணம் வசூல் செய்த தலைமை ஆசிரியர் திங்கள்கிழமை பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். சிதம்பரம் வட்டம் புதுசத்திரம் அருகே சாமியார்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மணிவண்ணன். இவர் மாணவர்களுக்கு இலவச பொருட்களை வழங்க ரூ.10

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum