தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரகாஷ் ராஜுடன் பரஸ்பர விவாகரத்துக்கு லலித குமாரி சம்மதம்

Go down

பிரகாஷ் ராஜுடன் பரஸ்பர விவாகரத்துக்கு லலித குமாரி சம்மதம் Empty பிரகாஷ் ராஜுடன் பரஸ்பர விவாகரத்துக்கு லலித குமாரி சம்மதம்

Post  ishwarya Sat Apr 27, 2013 5:48 pm

12-prakashraj-wife-kids-200நடிகர் பிரகாஷ் ராஜை விவாகரத்து செய்ய அவரது மனைவி லலிதகுமாரி சம்மதித்துள்ளார். இதுதொடர்பாக இருவரும் கூட்டாக, பரஸ்பர விவாகரத்துக்கு சம்மதிப்பதாக கூறி புதிய மனு ஒன்றை சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

நடிகர் பிரகாஷ்ராஜுக்கும், அவரது மனைவி லலித குமாரிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பிரகாஷ் ராஜ் மனு தாக்கல் செய்தார்.

ஆனால் எனக்கு பிரகாஷ் ராஜ் வேண்டும், அவரை விவாகரத்து செய்ய விரும்பவில்லை என்று உறுதியாக கூறி வந்தார் லலிதா குமாரி. இந்த நிலையில், தனது குடும்பத்தின் தினசரி செலவுக்குக் கூட பிரகாஷ் ராஜ் பணம் தர மறுக்கிறார். எனவே மாதம் ரூ. 2.58 லட்சம் ஜீவானம்சமாக தர வேண்டும் என்று கோரி குடும்ப நல நீதிமன்றத்தை அவர் அணுகினார்.

இந்த இரு மனுக்களும் நிலுவையில் இருந்து வந்தன. இதற்கிடையே பிரகாஷ் ராஜை சமாதானப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவர் இறங்கி வரவில்லை.

இந்த நிலையில் தற்போது பிரகாஷ் ராஜை விவாகரத்து செய்ய லலிதகுமாரியும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இருவரும் கூட்டாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர். அதில் பரஸ்பர விவாகரத்துக்கு சம்மதிப்பதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.

காயத்ரி ரகுராம் வழக்கு தள்ளி வைப்பு:

இந் நிலையில் விவகாரத்து கோரி நடிகை காயத்ரி ரகுராம் தொடர்ந்துள்ள வழக்கு தள்ளி வைக்கப்பட்டள்ளது.

காயத்ரி ரகுராமுக்கும், அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக உள்ள தீபக் சந்திரசேகருக்கும், 3 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. காயத்ரி கணவருடனேயே அமெரிக்காவில் தங்கியிருந்தார்.

இந் நிலையில் காயத்ரி ரகுராம், கணவரை பிரிந்து சென்னை வந்து விட்டார். கடந்த 10ம் தேதி சென்னை குடும்ப நல கோர்ட்டில் தனது கணவர் தீபக் சந்திர சேகரிடம் இருந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு முதன்மை குடும்ப நல நீதிபதி ராமலிங்கம் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தீபக் சந்திரசேகரை கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum