தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என் படத்தை நானே பார்க்க மாட்டேன்! – சத்யராஜ்

Go down

என் படத்தை நானே பார்க்க மாட்டேன்! – சத்யராஜ் Empty என் படத்தை நானே பார்க்க மாட்டேன்! – சத்யராஜ்

Post  ishwarya Fri Apr 26, 2013 2:09 pm

தனி கதாநாயகனாக நடித்தால் என் படத்தை நானே பார்க்க மாட்டேன் என்றார் நடிகர் சத்யராஜ்.

சத்யராஜ், சுந்தர் சி. இணைந்து நடித்துள்ள ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அவர் பேசியது:

“என்னை மாதிரி நடிகர்களுக்கு, ஒரு துணை தேவைப்படுகிறது. தனி கதாநாயகனாக நடித்தால், என் படத்தை நானே பார்க்க மாட்டேன். அதனால்தான் இந்த படத்தில் சுந்தர் சி.யுடன் நடித்தேன். இந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். இனி இரண்டு மூன்று ஹீரோக்கள் நடிக்கும் படங்கள்தான் ஜெயிக்கும்.

எப்போதுமே நல்ல கதை இருந்தால், அந்த படம் ஜெயிக்கும். குறிப்பாக, பெண்கள் பிரச்சினையை மையமாக வைத்து படம் எடுத்தால் ஜெயிக்கலாம். இதற்கு உதாரணமாக சில படங்களை கூறலாம்.

பராசக்தி படத்தில் சிவாஜி சார்தான் கதாநாயகன் என்றாலும், ரஞ்சனின் பிரச்சினையை மையமாக வைத்து அந்த படத்தின் கதை அமைக்கப்பட்டு இருந்தது. நாடோடி மன்னன் படத்தை எடுத்துக்கொண்டால், காணாமல் போன ரத்னபுரி இளவரசியை அடிப்படையாக வைத்து கதை அமைக்கப்பட்டிருந்தது.

அடிமைப்பெண் படத்தில், பண்டரிபாயை மையமாக வைத்து கதை அமைந்திருந்தது. தமிழ் பட வரலாற்றிலேயே மிக அதிக நாட்கள் ஓடிய சந்திரமுகி படத்தை எடுத்துக்கொண்டால், ஜோதிகா கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்து கதை அமைந்திருந்தது..” என்றார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» என் பேச்சை நானே கேட்க மாட்டேன்: தீபிகா “பஞ்ச்
» ‘சின்ன-பெரிய கதாநாயகன் வித்தியாசம் பார்க்க மாட்டேன்!’ – சதா
»  என் படத்தை குடும்பத்தோடு பார்ப்பதால் முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் -தமன்னா
» இலங்கையில் கால் வைக்க மாட்டேன் - ஷாருக் படத்தை உதறும் சத்யரா‌ஜ்?
» இப்போதைக்கு நானே தயாரிப்பாளர் நானே ஹீரோ… விஜய் ஆன்டனியின் புது ரூட்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum