தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மகரஜோதி மகிமை

Go down

மகரஜோதி மகிமை Empty மகரஜோதி மகிமை

Post  gandhimathi Mon Jan 21, 2013 4:40 pm




தனது தந்தை சிவனைப்போல அய்யப்பனும் ஜோதிவடிவில் காட்சிதந்து பரவசமடைய வைக்கிறார். இந்நிகழ்ச்சி மகரஜோதி என்று அழைக்கப்படுகிறது. கடும் விரதம் இருந்து தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, சுவாமி அய்யப்பன் மகர சங்கராந்தியான தை மாதம் 1-ந் தேதி சபரிமலையின் வடகிழக்கில் உள்ள காந்தமலை என்று அழைக்கப்படும் பொன்னம் என்பது மலை.

மகரஜோதி தரிசனத்தன்று அய்யப்பனுக்குச் சூட்டப்படும் ஆபரணங்கள் பந்தளத்து அரண்மனையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆபரணங்கள் வேலைப்பாடமைந்த புராதனமான 3 பெட்டிகளில் உள்ளது. சபரிமலை எங்கும் சுவாமியே சரணம் அய்யப்பா என்னும் தாரக மந்திரம் ஒலிக்கிறது.

சரியாக மாலை 6.45 மணிக்கு அய்யப்பன் கோவிலில் மாலை நேர தீபாராதனைக்குரிய மணி அடிக்கப்படுகிறது. அதைக் கேட்டதும் அய்யப்ப பக்தர்களின் சரணகோஷம் அண்டத்தையே கிடுகிடுக்க வைக்கிறது. வானத்தில் நட்சத்திரம் ஒன்றும் பிரகாசிக்கிறது. அப்போது வெகுதூரத்தில் காணப்படும் பொன்னம்பலமேட்டில் முளைத்து நிற்கும் மாமரங்களுக்கு மத்தியில் சின்னஞ்சிறிய தீபம் தோன்றுகிறது.

அது கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகிறது. சிறிதாகியது. பின் தாழ்ந்து போகிறது. இப்படி 3 முறை அந்த ஜோதி தெள்ளத்தெளிவாக பக்தர்கள் அனைவரது கண்களுக்கும் காட்சி அளிக்கிறது. சுமார் 10 நிமிடங்களில் இருந்து 15 நிமிடங்கள் வரை ஜோதியாக பொன்னம்பல மேட்டில் ஐய்யன் காட்சி தருகிறார்.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum