தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நயனுடன் சக்களத்தி சண்டை! ரமலத் பரபரப்பு பேட்டி!!

Go down

நயனுடன் சக்களத்தி சண்டை! ரமலத் பரபரப்பு பேட்டி!! Empty நயனுடன் சக்களத்தி சண்டை! ரமலத் பரபரப்பு பேட்டி!!

Post  ishwarya Tue Apr 23, 2013 5:45 pm

பிரபுதேவா – நயன்தாரா கள்ளக்காதல் விவகாரம் கசியத் தொடங்கிய நேரத்தில் பத்திரிகையாளர்களை தேடிச் சென்று பேட்டி கொடுத்தார் பிரபுதேவாவின் காதல் மனைவி ரமலத். நயன்தாரா சென்னைக்கு வந்தால் அடிப்பேன்… உதைப்பேன் என்றெல்லாம் வாய்ச்சவடால் ‌விட்டார்.

ஆனால் நயன்தாராவை திருமணம் செய்யப்போவதாக பிரபுதேவா பகிரங்கமாக அறிவித்த பிறகு மவுனம் காத்தார். பின்னர் வக்கீல்களுடன் ஆலோசித்து பிரபுதேவா மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியொன்று இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேட்டி :

சினிமா சம்பந்தப்பட்ட ஆட்கள் எங்க வீட்டுக்கு வந்தாலும் ஒரு பாசத்தோடதான் உபசரிப்பேன். எங்களுக்கு சோறு போடுற தொழிலாச்சே. அந்த மாதிரிதான் அந்த பெண்ணை(நயன்தாரா) யும் ஆரம்பத்துல பார்த்தேன். வீட்டுக்கு வரும்போதெல்லாம் அவரை சார்னும் என்னை அக்கான்னும் கூப்பிடும். ஆனா அது மனசுல இந்த மாதிரி நியாயத்துக்கும் தர்மத்துக்கும் புறம்பான ஒரு ஆசை இருக்குதுங்குறது எனக்கு தெரியாம போச்சு. இல்லாட்டி என் வீட்டுக்கே வந்து என் புருஷனை விட்டு தரச்சொல்லி கேக்குற வரைக்கும் அதை நம்பியிருப்பேனா? உலகத்துல ஒரு பொண்ணு இன்னொரு பொண்ணுகிட்ட கேட்க கூடாததை எங்கிட்ட கேட்டுச்சு. அன்னைக்குதான் வாழ்க்கையிலேயே நான் தூங்காத முழு ராத்திரி.

மூத்த பையன் விஷால் கேன்சர்ல இறந்த துக்கத்துல இருந்து முழுசா மீண்டு வராத நிலையில எங்கிட்ட வந்து இப்படி கேட்டாங்க. விஷால் விஷயத்துல கூட அவருக்கு எங்க இருந்துச்சு அக்கறை? உடலை அடக்கம் பண்ணிட்டு வந்ததோட சரி. மறுநாள் அந்த பொண்ணோட கிளம்பிட்டார். பையன் போயிட்டானே என்ற கவலையெல்லாம் நயன்தாரா வந்ததும் ரெண்டாந்தரமா போச்சு. மொத்தத்துல அக்கான்னு சொல்லி வீட்டுக்குள்ளே வந்தவங்களை நம்புனதாலதான் இப்ப சக்களத்தி சண்டை போட வேண்டியிருக்கு. வர்றபோதெல்லாம் சாக்லெட், டிரஸ்னு வாங்கிட்டு வந்ததால பசங்களும் ஆன்ட்டின்னு பழகுனாங்க. எல்லாம் வேற நோக்கம்னு அந்த பிஞ்சுகளுக்கே இன்னிக்கு தெரிஞ்சுருச்சு. அந்த பொண்ணு போட்டோவை பார்த்தா கிழிச்சு போடுறாங்க. டி.வி.யில அவங்க நடிக்கிற படம் வந்தா ஆஃப் பண்ணிடுறாங்க. ராத்திரி தூக்கத்துல பாதியில எழுந்து அப்பா எங்கம்மான்னு கேக்குறான் கடைசி பையன் ஆதித். மன ரீதியா அவங்க பாதிக்கப்பட்டிருக்காங்க. இப்படி என் பிள்ளைகளுக்கும் எனக்கும் மன உளைச்சலை தந்துட்டு அவரை எங்ககிட்ட இருந்து பிரிச்சுட்டு போய் சந்தோஷமா வாழ நினைக்குது அந்த பொண்ணு.

இவ்வாறு ரமலத் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். இதற்கிடையில் பிரபுதேவாவும், நயன்தாராவும் காளகஸ்தி கோயிலுக்கு சென்று பரிகார பூஜை செய்துவிட்டு திரும்பியிருக்கிறார்கள். தங்களது திருமணத்தில் இருக்கும் சிக்கல்கள் தீர்வதற்காக இந்த பரிகார பூஜை நடத்தியிருக்கிறார்களாம் அந்த கள்ளக்காதல் ஜோடி

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum