தென்மேற்கு பருவக்காற்று – திரை விமர்சனம்
Page 1 of 1
தென்மேற்கு பருவக்காற்று – திரை விமர்சனம்
எப்போதாவது வரும் குறிஞ்சிப்பூ மாதிரியான கதை.
அருகருகே உள்ள வயல்பட்டி செழிப்பான கிராமம். ஜல்லிப்பட்டி வறண்ட கிராமம். வயல்பட்டியை சேர்ந்த வீராயி கணவனை இழந்தவள். ஒரே மகன் முருகனை பாசமாய் வளர்க்கிறாள். அவன் ஆடுமேய்ப்பது, தாய் சம்பாதித்த காசை திருடி சாராயம் குடிப்பது என திரிகிறான்.
முருகன் ஆட்டு மந்தையில் நள்ளிரவு வயல்பட்டியை சேர்ந்த திருடர்கள் புகுகிறார்கள். ஆடுகளை களவாடி செல்கின்றனர். முருகன் பின்னால் விரட்டி முகமூடி அணிந்த ஒருத்தரை பிடித்து முகத்தை விலக்கி பார்த்த போது பெண் என்பதை கண்டு அதிர்கிறான்.
அவள் பேச்சி என்பதும் குடும்ப தொழிலே களவு செய்தல் என்றும் தெரிகிறது. தப்பி ஓடிய அவளை போலீசாருடன் தேடி அலைகிறான். தங்கையை அடையாளம் கண்ட முருகனை போட்டுத்தள்ள அண்ணன்மார் திட்டம் வகுக்கின்றனர். போலீசார் அவர்களை பிடித்து ஜெயிலில் அடைக்கின்றனர்.
அதன் பிறகு முருகனுக்கும் பேச்சிக்கும் காதல் மலர்கிறது. வீராயியோ வேறு பெண்ணை நிச்சயம் செய்கிறாள். பேச்சி அண்ணன்கள் காதலை எதிர்க்கின்றனர்.
அதன் பிறகு நடப்பவை உயிரை உருக்கும் கிளைமாக்ஸ்…
முருகனாக சேதுபதியும், பேச்சியாக வசுந்தராவும் கிராமத்து காதலில் கவிதையாய் பதிகிறார்கள். வீராயியாக வரும் சரண்யா கள்ளிக்காட்டு தாயாய் வாழ்ந்துள்ளார்.
மகனுக்கு பெண் பார்ப்பது, மருமகளை ஊராரிடம் அறிமுகப்படுத்தி சந்தோஷப்படுவது.. மகனை காதலிக்கும் வசுந்தராவிடம் அவர் ஊருக்கே போய் சண்டைக்கு நிற்பது என அசல்தனமாய் பளிச்சிடுகிறார்.
வசந்தரா பேச்சில் வசியமாகி காதலை ஏற்படும் வில்லனால் வயிற்றில் கத்தி குத்து வாங்கி ஆஸ்பத்திரிக்கு நடந்தே போவதும் வயக்காட்டு தாயின் வார்ப்பு.
ஒளிப்பதிவாளர் அருள்தாஸ், ஸ்டில்ஸ் குமார், காதல் சுகுமார், தீப்பெட்டி கணேசன் பாத்திரங்களும் கச்சிதமாய் செதுக்கப்பட்டு உள்ளன. ஹேமலதா புழுதி கிராமத்தின் பூபாளம்.
ஆரம்ப சீன்களைவிட பின்பகுதி காட்சிகளை மனதில் ஊடுருவ வைக்கிறார் இயக்குனர் சீனுராமசாமி படத்துடன் ஒன்ற வைப்பதுடன் இறுதியில் விழிகளில் நீர் முட்ட வைத்து சபாஷ் போடவும் வைக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்நந்தன் இசையில் வைரமுத்துவின் பாடல் வரிகள் ஜீவன் பாய்ச்சுகிறது. கள்ளிக்காட்டில் பிறந்த தாயே பாடல் நெஞ்சை நனைக்கிறது.
அருகருகே உள்ள வயல்பட்டி செழிப்பான கிராமம். ஜல்லிப்பட்டி வறண்ட கிராமம். வயல்பட்டியை சேர்ந்த வீராயி கணவனை இழந்தவள். ஒரே மகன் முருகனை பாசமாய் வளர்க்கிறாள். அவன் ஆடுமேய்ப்பது, தாய் சம்பாதித்த காசை திருடி சாராயம் குடிப்பது என திரிகிறான்.
முருகன் ஆட்டு மந்தையில் நள்ளிரவு வயல்பட்டியை சேர்ந்த திருடர்கள் புகுகிறார்கள். ஆடுகளை களவாடி செல்கின்றனர். முருகன் பின்னால் விரட்டி முகமூடி அணிந்த ஒருத்தரை பிடித்து முகத்தை விலக்கி பார்த்த போது பெண் என்பதை கண்டு அதிர்கிறான்.
அவள் பேச்சி என்பதும் குடும்ப தொழிலே களவு செய்தல் என்றும் தெரிகிறது. தப்பி ஓடிய அவளை போலீசாருடன் தேடி அலைகிறான். தங்கையை அடையாளம் கண்ட முருகனை போட்டுத்தள்ள அண்ணன்மார் திட்டம் வகுக்கின்றனர். போலீசார் அவர்களை பிடித்து ஜெயிலில் அடைக்கின்றனர்.
அதன் பிறகு முருகனுக்கும் பேச்சிக்கும் காதல் மலர்கிறது. வீராயியோ வேறு பெண்ணை நிச்சயம் செய்கிறாள். பேச்சி அண்ணன்கள் காதலை எதிர்க்கின்றனர்.
அதன் பிறகு நடப்பவை உயிரை உருக்கும் கிளைமாக்ஸ்…
முருகனாக சேதுபதியும், பேச்சியாக வசுந்தராவும் கிராமத்து காதலில் கவிதையாய் பதிகிறார்கள். வீராயியாக வரும் சரண்யா கள்ளிக்காட்டு தாயாய் வாழ்ந்துள்ளார்.
மகனுக்கு பெண் பார்ப்பது, மருமகளை ஊராரிடம் அறிமுகப்படுத்தி சந்தோஷப்படுவது.. மகனை காதலிக்கும் வசுந்தராவிடம் அவர் ஊருக்கே போய் சண்டைக்கு நிற்பது என அசல்தனமாய் பளிச்சிடுகிறார்.
வசந்தரா பேச்சில் வசியமாகி காதலை ஏற்படும் வில்லனால் வயிற்றில் கத்தி குத்து வாங்கி ஆஸ்பத்திரிக்கு நடந்தே போவதும் வயக்காட்டு தாயின் வார்ப்பு.
ஒளிப்பதிவாளர் அருள்தாஸ், ஸ்டில்ஸ் குமார், காதல் சுகுமார், தீப்பெட்டி கணேசன் பாத்திரங்களும் கச்சிதமாய் செதுக்கப்பட்டு உள்ளன. ஹேமலதா புழுதி கிராமத்தின் பூபாளம்.
ஆரம்ப சீன்களைவிட பின்பகுதி காட்சிகளை மனதில் ஊடுருவ வைக்கிறார் இயக்குனர் சீனுராமசாமி படத்துடன் ஒன்ற வைப்பதுடன் இறுதியில் விழிகளில் நீர் முட்ட வைத்து சபாஷ் போடவும் வைக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்நந்தன் இசையில் வைரமுத்துவின் பாடல் வரிகள் ஜீவன் பாய்ச்சுகிறது. கள்ளிக்காட்டில் பிறந்த தாயே பாடல் நெஞ்சை நனைக்கிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரா-1 – திரை விமர்சனம்
» டூ – திரை விமர்சனம்
» கோ – திரை விமர்சனம்
» கொலவெறி ’3′ – திரை விமர்சனம்
» வித்தகன் – திரை விமர்சனம்
» டூ – திரை விமர்சனம்
» கோ – திரை விமர்சனம்
» கொலவெறி ’3′ – திரை விமர்சனம்
» வித்தகன் – திரை விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum