தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வித்தகன் – திரை விமர்சனம்

Go down

வித்தகன் – திரை விமர்சனம் Empty வித்தகன் – திரை விமர்சனம்

Post  ishwarya Wed Apr 10, 2013 12:14 pm

பார்த்திபன் இயக்கத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளிவந்திருக்கும் படம் வித்தகன். காக்கக் காக்க மாதிரியான போலீஸ் ஸ்டோரியை பார்த்திபன் தன் திரைக்கதை திறமையில் பளிச்சென்று கொடுத்திருக்கிறார். போலீஸ்கார அப்பா, அன்பான அம்மா, தங்கை இவர்கள் எல்லாரும் இருந்தும் ரௌத்திரன் தான் ஒரு அனாதை என்று சொல்லி போலீஸில் சேருகிறார். காக்கியில் இருந்து கொண்டு வில்லன்களை ரௌத்திரன் போட்டுத் தள்ளுகிறார்.

ஒரு கட்டத்தில் ரௌத்திரன் அனாதை இல்லை என்பதை கண்டுபிடிக்கும் அவரது உயர் அதிகாரி அவரை ஜெயிலுக்கு அனுப்புகிறார். வேலை பறிபோகிறது. சில வருடங்களுக்குப் பிறகு ஜெயிலில் இருந்து வெளியே வரும் ரௌத்திரன் வில்லனுடன் சேர்ந்து கொள்கிறார். அதன்பிறகும் வில்லன்களை எப்படி துவம்சம் செய்கிறார் என்பது மீதி கதை.

ரா. பார்த்திபன் தனது பெயரை ராதாகிருஷ்ணன் பார்த்திபன் என்று டைட்டிலில் போடும் போதே அவருடைய ரகளை ஆரம்பித்து விடுகிறார். காக்கி உடையில் கம்பீரமாக தோன்றும் பார்த்திபன் வில்லன்களை பொட் பொட்டென சுட்டுத் தள்ளுகிறார். இவர் அனாதை இல்லை என்பதை இவருடைய மேலதிகாரி கண்டுபிடித்ததும் அவரை கைது செய்யும் போது மனுஷன் பீல் பண்ணுறாரே செம நடிப்பு.

இடைவேளைக்கு பிறகு இவர் வரும் கேரக்டர் வில்லன் என்றால் உடனே நம்ப முடியவில்லை. மீசை இல்லாமேல் வித்தியாசமான கெட்டப்பில்… அதைப் பார்த்தால் கொஞ்சம் சிரிப்பும் கூடத்தான் வருகிறது. படத்திற்கு வித்தகன் என்ற பெயருக்கு பதிலாக ரௌத்திரன் என்ற பெயரை வைத்திருக்கலாம். காரணம், படம் முழுக்க ரௌத்திரன் ராஜாங்கம்.

இவருக்கு ஜோடியாக பூர்ணா. பார்த்திபன் வில்லனை சுட்டுக் கொன்றுவிட்டு பூர்ணாவிடம் துப்பாக்கியைக் கொடுத்து, ‘இதில உன் கைரேகைதான் இருக்கு… நீதான் சுட்டுக் கொன்னேன்னு யாருகிட்டயும் சொல்ல மாட்டேன்னு…’ சொல்லுற சீன்ஸ் செம கலக்கல். அதன்பிறகு ரௌத்திரனையே துரத்தி துரத்தி லவ் பண்ணுகிறார் மெர்ஸி கேரக்டரில் வரும் பூர்ணா. கடைசியில் பாவம் அந்த பொண்ணு… அப்படி ஒரு விபரீத முடிவு அவளுக்கு.

வில்லன் பத்ரி கூடவே இருக்கும் கிழவனும் அவருடன் வருபவரும் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை. இருவரும் ஹோட்டலில் பில் கொடுக்கும் காட்சியில் திரையரங்கமே அதிர்கிறது.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் பார்த்திபன் இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கிறார். பல காட்சிகளில் பார்த்திபனின் நக்கலான வசனங்கள் பளிச்சிடுகின்றன. படத்தின் முதல்பாதியில் இருக்கும் விறுவிறுப்யை இடைவேளைக்குப் பிறகும் கொடுத்திருக்கலாம்.

வித்தகனுக்கு இசையமைத்திருக்கிறார் ஜோஷ்வா ஸ்ரீதர். இரண்டு மெலடி பாட்டுகள் கேட்கிற ரகம். எடிட்டர் ஆன்டனியால் படம் படு வேகமாய் நகருகிறது.

வித்தகன் – with the gun

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum