தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இனி நாத்திகம் பேச மாட்டாராம் டைரக்டர் பாலா!

Go down

 இனி நாத்திகம் பேச மாட்டாராம் டைரக்டர் பாலா! Empty இனி நாத்திகம் பேச மாட்டாராம் டைரக்டர் பாலா!

Post  ishwarya Fri Apr 19, 2013 6:13 pm

வாய்கிழிய நாத்திகம் பேசிக் கொண்டிருந்த டைரக்டர் பாலா, இனி நாத்திகம் பேச மாட்டேன், என்று கூறியிருக்கிறார். மைனா இசை வெளியீட்டு விழாவில் பாடலாசிரியர் பேசும்போது, பிரபுசாலமனுக்கு ஜீசஸ் வெற்றியை தருவார், என்று சொன்னதற்காக அவரை உண்டு இல்லை என ஆக்கியவர் டைரக்டர் பாலா.

அவர் அளித்துள்ள லேட்டஸ்ட் பேட்டியொன்று ஒட்டுமொத்த கோடம்பாக்கத்தையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. அப்படியென்ன சொல்லியிருக்கிறார் பாலா?.

ஆன்மீகத்தை நான் வெறுக்கல. நல்ல விஷயங்கள் நடக்குறதா சொல்றீங்க சரி. என்ன வேணாலும் சேவை பண்ணுங்க. எதுக்காக பட்டை அடிச்சுக்கிட்டு அங்கியை மாட்டிகிட்டு சேவை பண்றீங்க? மனிதனா சேவை பண்ணாமல் மதத்தின் போர்வையில் சேவை செய்யறது உண்மையான சேவையா எனக்கு தெரியல. அதே சமயம் சமீபகாலமா ஆன்மிகத்தை பற்றி நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன். அதுக்கு காரணம் ரெண்டு சம்பவம். ஒரு கோயில்ல ஷுட்டிங் எடுத்தப்போ கோயில் சுவத்துல எண்ணெயில் ஏதேதோ எழுதியிருந்தது. அதுல ஒரு இடத்தில் “சாமி. எங்க அக்காவுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கணும்”னு ஒரு சின்னப் பையன் எழுதியிருந்தான். இதுக்கு மேல ஒரு அடி எனக்கு வேணுமா? இன்னொரு சம்பவம். நான் தேனியில தங்கியிருந்த ஹோட்டலுக்கு பக்கத்தில ஒரு கோயில்ல சுமங்கலிகள் ஐம்பது பேர் சேர்ந்து “என் தாலியை காப்பாய் சிவசக்தி…”ன்னு உருகி பாடிகிட்டு இருந்தாங்க. அந்த ஐம்பது பேரும் என்னை முச்சந்தியில் நிறுத்தி வெச்சு செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சு. அவங்க நம்பிக்கையைத் தவறுன்னு நான் எப்படிச் சொல்ல முடியும். தப்புன்னு சொல்ல நான் யாரு. இனி நாத்திகக் கருத்துக்களை நான் பேச மாட்டேன், என்று கூறியிருக்கிறார் டைரக்டர் பாலா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum