தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குழந்தை பாக்கியம் தரும் குருபகவான் வழிபாடு

Go down

குழந்தை பாக்கியம் தரும் குருபகவான் வழிபாடு Empty குழந்தை பாக்கியம் தரும் குருபகவான் வழிபாடு

Post  gandhimathi Mon Jan 21, 2013 1:42 pm





பிரம்மாவின் மூன்று குழந்தைகளில் அங்கிரஸ முனிவரும் ஒருவர். அங்கிரஸருக்கு பிரஹத் ஜோதிஷன், பிரஹத் கீர்த்தி, பிரஹத் பிரம்மன், பிரஹத் மனஸன், பிரஹத் மந்த்ரன், பிரஹத் பாஸன், பிரஹஸ்பதி என்ற ஏழு புத்திரர்களும் பானுமதி என்ற பெண்ணும் பிறந்தனர். இவர்களில் ஏழாவதாகப் பிறந்தவர் பிரஹஸ்பதி.

ஒரு சமயம் அக்னி தேவன் தன் பணியில் சலிப்படைந்து காட்டுக்குச் சென்று விட்டதால், யாகங்கள் நடப்பது தடைப்பட்டு, அதனால் மழை பெய்யாமல் பூமி வறண்டு போனது. `இந்த நிலை இப்படியே நீடித்தால் பல பிரச்சினைகள் உருவாகும்' என்று நினைத்த அங்கிரஸர், தானே அக்னியின் பணியைச் செய்ய முன்வந்து, செய்யவும் துவங்கினார்.

இதை கண்டு மனம் வருந்திய அக்னி, அங்கிரஸரிடம் வந்து தன் வேலையைத் தன்னிடமே திருப்பித் தந்து விடும்படி கேட்க, அதை அவரிடமே தந்து விட்டார் அங்கிரஸர். ஆனாலும் அத்தனை நாட்களாக அங்கிரஸரே அக்னியின் பணிகளைச் செய்து வந்ததால் `ஹவ்யவாகன்' (அக்னியில் இடப்படும் அவிர்பாகத்தை தேவர்களுக்கு எடுத்துச் செல்லும் தூதன்) என்ற பெயரைப் பெற்று விட்டார்.

தன்னுடைய பெயர் மறைந்து விட்டதால் மீண்டும் அங்கிரஸரிடமிருந்தே புதுப் பெயர் பெற்று விடுகிறேன் என்று சொல்லி அவருக்கே மகனாகப் பிறந்தார் அக்னிதேவன். அந்த மகன் தான் பிரஹஸ்பதி. பிறகு அவர், தாரா என்ற பெண்ணை மணந்து கொண்டு விஸ்வஜித், விஸ்வபுக், சம்யூ, நிச்யவன், படபாக்னி, ஸ்விஷ்டக்குதன் என்னும் ஆறு அக்னிகளையும் ஸ்வாகா என்ற பெண்ணையும் உருவாக்கினார்.

பிரஹஸ்பதி கல்வி, கேள்விகளில் வல்லவராக விளங்கினார். அவருடைய உயர்ந்த அறிவைக் கண்டு அதிசயித்த தேவர்கள் அவரையே தங்கள் குருநாதராக ஏற்றுக் கொண்டனர். `உலகில் நீதி நிலை பெற்று அநீதி அழிய வேண்டும்' என்ற உயரிய நோக்கு டன் `நீதி' என்ற சத்திய நூலை எழுதினார் பிரஹஸ் பதி. அத்தகைய சிறப்பு மிக்க குருவை வழிபட்டு, சகல யோகம் பெறு வோம் என்கிறார் ஈரோடு மாவட்டம் அவல் பூந்துறையைச் சேர்ந்த விஜய்சுவாமிஜி.

குருபலம்.....

ஒருவர் ஜாதகதக்தில் குரு பலம் பெற்றிருப்பது முக்கித்துவம் வாய்ந்தது. குரு பலமே நாம் எடுத்த காரியத்தில் வெற்றி தரும். குரு பலம் இருந்தால் புத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், திருமணத்தடை போன்றவை நீங்கும். ஒருவருக்கு திருமண பாக்கியம் கிடைக்க குரு பலம் அவசியம். குரு பகவான் ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்திலிருந்து 5,7,9 இடத்து பார்வை பெற்ற ஸ்தானங்கள் குரு பலம் அடைகின்றன.

பூஜை முறை.....

குருபகவானுக்கு உரிய கிழமைகள் திங்கள், வியாழன். ஒரு குழந்தை அறிவோடு விளங்கி நல்வழியில் சிறக்க அதன் ஜென்ம நட்சத்திர நாளிலோ, வியாழக்கிழமையிலோ இந்த பூஜையை செய்வது மிகவும் நல்லது. திங்கள் அன்றும் செய்யலாம். ஒரு மனைப்பலகையில் மஞ்சள் தூளால் பிரஹஸ்பதி கோலத்தை வரைந்து மஞ்சள் நூல் சுற்றிய கலசத்தில் மஞ்சள் நிறத் துணியைச் சுற்றி, வாழை இலையில் அரிசி பரப்பி அதன் மேல் வைக்க வேண்டும்.

குருவுக்குப் பிடித்த முல்லை மலர், சாமந்தி, வில்வ இலைகளை வைத்துக் கொண்டு, நிவேதனத்துக்கு கடலை சாதம், தேங்காயம், பழம், வெற்றிலை பாக்கு, ஆகியவற்றை தயாராக எடுத்து வைக்கவும். பிள்ளைகள் மிகவும் சிறியவர்கள் எனில் அவர்களுக்காக தாய் அமர்ந்து பூஜை செய்யலாம். ஓரளவுக்கு வளர்ந்தவர்கள் எனில், பிள்ளைகளே செய்யலாம்.

பலன்கள்.....

குரு வழிபாடு செய்பவர்களுக்கு உயர்பதவி கிடைக்கும், அவர்களிடம் செல்வச்செழிப்பு மேலோங்கும் சுகவாழ்வு, மனநிம்மதி கிடைக்கும். மேலும் அவர் ஞானகாரகன் என்பதால் அறிவு விருத்தியடையும். மற்ற கிரகதோஷங்களால் ஏற்படும் துன்பங்கள் குருவை வணங்குவதால் நீங்கும் என்பது ஐதீகம்.

திருமணத்தடையை நீக்குவதில் குரு பகவான் முக்கிய பங்கு வகிக்கிறார். எனவே திருமணம் தடைபட்டு வருபவர்கள் குருவை அவசியம் வணங்குவது நல்லது. புத்திர பாக்கியம் தருவதிலும் குரு பகவான் முக்கிய பங்கு வகிக்கிறார். எனவே குழந்தை பாக்கியம் தடைபட்டு வரும் தம்பதிகள் குரு பகவானை வழிபட்டு வருவது நல்லது. இந்திரனுக்கு

குரு தந்த சாபம்.........

மீன்களும் , தவளை போன்ற உயிரினங்களும் நீரில் வசிப்பதற்கு புராணத்தில் கூறப்படும் காரணம் வருமாறு: ஒரு முறை இந்திரலோகத்தில் உள்ள தடாகத்திற்கு குரு பகவான் நீராடச்சென்றார். அப்போது அந்த குளத்தில் இருந்த நீர்கலங்கி அழுக்கடைந்திருந்தது.

இதனால் ஆத்திரமடைந்த குரு பகவான் இந்திரனிடம் சென்று "உன் அழுக்குத் தண்ணீரில் இனி மீன்களும், தவளைகளும் வசிக்கும்.'' என்று சபித்தார். அந்த சாபத்தின் விளைவாகவே நீர்நிலைகளில் மீன்களும் தவளைகளும் வசிப்பதாக ஐதீகம்.

பரிகாரங்கள்.........

குரு பகவானுக்குரிய பொதுவான பரிகாரங்கள் மற்றும் அவர் அருளை அள்ளித்தரும் வழிபாடுகள் வருமாறு:-

* நவக்கிரக பீடத்தில் உள்ள குருவை முல்லை மலரால் அர்ச்சனை செய்யலாம்.

* வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை படைத்து அர்ச்சனை செய்து வழிபடலாம்.

* வியாழக்கிழமை தோறும் கந்தசஷ்டி கவசம் படித்து முருகனை வழிபாடு செய்யலாம்.

* வியாழக்கிழமை தோறும் ராகவேந்திரரை வணங்கி வரலாம்.

* அவ்வப்போது நம்மனதில் குரு ஸ்தானத்தில் நினைத்திருப்பவர்களை வணங்கி ஆசிபெறலாம்.

* குரு பகவானுக்குரிய மந்திரங்களை கூறி அவரை வழிபட்டு வரலாம்.

* விஷ்ணு சகஸ்ஹரநாம பாராயணம் செய்யலாம்.

* அரசு, வேம்பு, நாகர், ஆகியவைகளை 9 தடவை சுற்றி வலம் வரலாம்.

* குரு பகவானுக்கு மிகவும் பிடித்த நிறம் மஞ்சள். எனவே குரு தோஷத்தால் அவதிபட்டு வருபவர்கள் அந்த காலங்களில் மஞ்சள் நிற ஆடையை உடுத்தி வருவது நல்லது. குறைந்தபட்சம் மஞ்சள் நிற கைக்குட்டையாவது தன் வசம் வைத்திருப்பது நல்லது.

* மஞ்சள் நிற ஆடைகளை பிறருக்கு தானம் செய்வது குரு பகவானுக்கு உரிய பரிகாரங்களில் ஒன்றாக விளங்குகிறது.

மேலும் மஞ்சள் நிற ஆடை உடுத்துபவர்களுக்கு குரு அருள் நிரம்பக்கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன என்கிறார் விஜய்சுவாமிஜி.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum