தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இயக்குனர் அவதூறு பரப்புகிறார்: படப்பிடிப்பில் இருந்து ஓடவில்லை; நடிகை சாந்த்ரா மறுப்பு

Go down

இயக்குனர் அவதூறு பரப்புகிறார்: படப்பிடிப்பில் இருந்து ஓடவில்லை; நடிகை சாந்த்ரா மறுப்பு Empty இயக்குனர் அவதூறு பரப்புகிறார்: படப்பிடிப்பில் இருந்து ஓடவில்லை; நடிகை சாந்த்ரா மறுப்பு

Post  ishwarya Wed Apr 17, 2013 11:47 am

“சுற்றுலா” என்ற படத்தில் நடிகர் பிரஜன், நடிகை சாந்த்ரா நடித்து வருகின்றனர். இருவரும் கணவன்-மனைவி ஆவர். இதன் படப்பிடிப்பு குன்னூரில் நடந்து வருகிறது.பிரஜன், சாந்த்ரா இருவரும் ஓட்டலில் தங்கி இருந்து நடித்து வந்தனர்.

இந்த நிலையில் திடீரென்று இருவரும் படப்பிடிப்புக்கு வராமல் ஓட்டல் அறையை காலி செய்து மாயமாகி விட்டதாக படத்தின் தயாரிப்பாளர் வெங்கட், இயக்குனர் கே.வி.ராஜேஷ் ஆகியோர் புகார் கூறினர். படப்பிடிப்பில் இருந்து இருவரும் ஓடியதால் தினமும் ரூ.2 லட்சம் வரை நஷ்டம் ஏற்படுகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளித்து பிரஜன், சாந்த்ரா ஆகியோர் இன்று மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

சுற்றுலா படத்தில் நடிக்க தேதி கொடுத்து 23 நாட்கள் நடித்து முடித்து விட்டோம். கூடுதலாக ஒருநாள் நடிக்க கேட்டனர். அதற்கும் சம்மதித்து நடித்தோம். எங்கள் கால்ஷீட் முடிந்ததால் ஊருக்கு கிளம்பினோம். அது இயக்குனருக்கும் தெரியும். வண்டிகூட ஏற்பாடு செய்ய வில்லை. கஷ்டப்பட்டு வீடு வந்து சேர்ந்தோம். அதன்பிறகு நாங்கள் படப்பிடிப்பில் இருந்து காணாமல் போய்விட்டதாக செய்தி வெளியானதை பார்த்து அதிர்ச்சியானோம்.

பாதியில் ஓடிவர வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நடிக்க போன நாங்கள் ஏன் பாதியில் திரும்ப வேண்டும்? நடித்து நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என்று போராடி வருகிறோம்.

இயக்குனர் எங்களை அவமானப்படுத்தி விட்டார். விளம்பரத்துக்காக இந்த அவதூறு செய்திகளை பரப்பியுள்ளார். இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லா விட்டால் இனி அந்த படத்தில் நடிக்க மாட்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நடிகை சாந்த்ரா மேலும் கூறும்போது, துணை நடிகை அங்கீதாவை நான் துன்புறுத்தியதாகவும், இதனால் அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் வெளியான செய்தியில் உண்மை இல்லை. எந்த நடிகையுடனும் நான் சண்டை போடவில்லை. இந்த அவதூறு செய்திக்கு சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» படப்பிடிப்பில் ஒத்துழைக்க மறுத்தார்: நடிகை அனன்யா மீது இயக்குனர் தாக்கு
» சம்பள பிரச்சினையால் நடிக்க மறுப்பு நடிகை நிக்கோல் ஓட்டம்: இயக்குனர் ராஜ்கிருஷ்ணா புகார்
» படப்பிடிப்பில் ஒட்டகத்தில் இருந்து விழுந்த நாயகி தீப்தி!
» நடிகை அஞ்சலி மீது அவதூறு வழக்கு: டைரக்டர் களஞ்சியம் கோர்ட்டில் ஆஜர்
» சோனியா அகர்வால் நடிக்கும் படத்தில் செல்வராகவனை விமர்சிக்கவில்லை: இயக்குனர் ராஜ்கிருஷ்ணா மறுப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum