தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வதந்திகளை விரும்பும் ஹீரோயின்!

Go down

வதந்திகளை விரும்பும் ஹீரோயின்! Empty வதந்திகளை விரும்பும் ஹீரோயின்!

Post  ishwarya Tue Apr 16, 2013 4:33 pm

பேருக்கு ஏற்ப அழகின் முழுமையோடு வலம் வரும் பூர்ணா அறிமுகமானது ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு`, படத்தில். அதன்பிறகு `ஆடு புலி` ‘துரோகி’என்று அடுத்தடுத்து படங்கள் கிடைத்தன. தற்போது பார்த்திபனுடன் வித்தகன் படத்தில் நடித்து முடித்திருக்கும் பூர்ணா, `அர்ஜுனன் காதலி`, `வேலூர் மாவட்டம்` ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் `ஆடுபுலி` படத்தில் நடித்த போது அந்தப் படத்தின் நாயகன் ஆதிக்கும், பூர்ணாவுக்கும் காதல் துளிர்விட்டதாக செய்தி பரவியது. இருவரும் இணைந்து பார்ட்டிகளுக்கு செல்வதாகவும் சூடு பறந்தது செய்தி. ஆனால் இந்த செய்திகள் எதற்கும் வாய் திறக்காத பூர்ணா, அசத்தலான ஒரு பதிலை மீடியாவிடம் வீசியெறிந்திருக்கிறார். “ என்னை பற்றி வரும் வதந்திகளை எனது வளர்ச்சியாகப் பார்க்கிறேன். என்னைப் பற்றி வதந்திகள் வந்து கொண்டிருந்ததால்தான் எனக்கு வாய்ப்புகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. தயவுசெய்து ஜாலியாக என்னைப் பற்றி ஏதாவது எழுதிக்கொண்டிருங்கள்.

ஆனால் சீரியஸாக எதையும் எழுதி விடாதீர்கள். ஏனென்றால் நான் சினிமாவில் உள்ள ஒருவரை திருமணம் செய்ய மாட்டேன். எனது பெற்றோர்கள் யாரை திருமணம் செய்துகொள்ள சொல்கிறார்களோ அவரை தான் திருமணம் செய்து கொள்வேன்” என்றார் வேலூர் மாவட்டம் படத்தின் இசை வெளியீட்டில்! ஒரு பிரபல கதாநாயகி வதந்திகளை விரும்புவது ஆச்சர்யம்தான்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum