தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வந்தான் வென்றான் – திரை விமர்சனம்

Go down

வந்தான் வென்றான் – திரை விமர்சனம் Empty வந்தான் வென்றான் – திரை விமர்சனம்

Post  ishwarya Tue Apr 16, 2013 11:25 am

குத்துச்சண்டை வீரர் சிவாவாக வரும் ஜீவா, அஞ்சனாவாக வரும் டாப்ஸியை ஒரு இக்கட்டான சந்தர்ப்பத்தில் சந்திக்கிறார். டாப்ஸிக்கு ஆபத்தில் இருக்கும் போது அவருக்கு உதவி செய்து அவரை காப்பாற்றுகிறார். காதலிப்பதாகவும் கூறுகிறார். அதற்கு டாப்ஸியோ, என் அப்பா சொன்னால் உன்னை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்கிறார். அவரை சந்திக்க சென்றால், மும்பை தாதாக்களுக்கு இடையே நடைபெறும் சண்டையில் தவறுதலாக டாப்ஸியின் தந்தை கொல்லப்படுகிறார்.

என் தந்தையை கொன்றவனை சிறையில் தள்ளினால், உன்னை கல்யாணம் செய்து கொள்கிறேன் என டாப்ஸி, ஜீவாவை உசுப்பேற்றுகிறார். இதற்கு மும்பையிலுள்ள தாதாவான ரமணாவாக வரும் நந்தாவை சந்தித்து உதவி கோருகிறார். காதல் கதையை சொல்லி, அந்த தாதாவை சிறையில் தள்ள உதவுங்கள் என்கிறார் ஜீவா. ‘யார் அந்த தாதா?’ என்று நந்தா கேட்கும் போது, அது வேறு யாருமல்ல நீதான் என்று அதிர்ச்சி தருகிறார். இதன்பிறகு ஜீவா தனது தம்பி என்று நந்தாவிற்கு தெரிய வருகிறது. அப்பா வேறு வேறு ஆள் என்றாலும், இருவருக்கும் தாய் ஒன்று என்பதால் அவருக்கு தனது தம்பி யார் என்ற உண்மையை தெரிந்து கொள்கிறார்.

தம்பியின் காதலுக்காக நந்தா சிறைக்கு சென்றாரா? அண்ணனின் உயிருக்காக ஜீவா காதலை துறந்தாரா? டாப்ஸி தனது தந்தையின் மரணத்திற்கு நீதி தேடினாரா? என்ற கேள்விகளுக்கெல்லாம் முடிவு சொல்லி சுபம் போட்டிருக்கிறார் இயக்குனர் ஆர். கண்ணன். முக்கால்வாசி படம் பிளாஷ்பேக்கில் நகர்கிறது. அதிகம் மும்பை பகுதியில் படமாக்கப்பட்டிருக்கிறது. ஜீவாவின் நடிப்பு கனகச்சிதம். காதல், ஆக்ஷன் என தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். டாப்ஸியுடன் காதல் வசனம் போது மனதில் நிற்கிறார். ஆடுகளத்தில் அமைதியாக நடித்த டாப்ஸி, இப்படத்தில் துப்பாக்கி தூக்கி நடித்திருக்கிறார். இவரது நடிப்பை இன்னும் மெருகேற்றியிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. காதல், கவர்ச்சி, கோபம் எதுவும் சரியாக அமையிவில்லை. புன்னகை மட்டும் நம்மை வசீகரிக்கிறது.

மும்பையிலுள்ள பெரிய தாதாவாக வருகிறார் நந்தா. அந்த கேரக்டருக்கு உரிய முகம் இவரிடம் இல்லையா? அல்லது உடம்பு இல்லையா என சந்தேகம் வரும் அளவிற்கு இருக்கிறது இவருடைய கேரக்டர். டமீல் டுமீல் என சிலரை சுட்டுப் போடுகிறார். அவ்வளவே….காமெடிக்கென வரும் சந்தானம் சில நேரங்களில் சிரிக்கவைக்கிறார். ஒரு வரியில் சொல்லும் காமெடிகள் ரசிக்க வைக்கிறது. ஆனால் மனதில் பதியவில்லை.

இசையமைப்பாளர் தமனின் இசையில் ‘காஞ்சன மாலா’ மனதிஃல் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறது. அதனை படம் பிடித்த விதமும் அழகு. நந்தாவும் ஜீவாவும் மோதும் காட்சியில் அமைக்கப்பட்டுள்ள பிண்ணனி இசை தமனை கவனிக்க வைக்கிறது. தாதாக்கள் கோட்டையான மும்பையை பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு, தனது கேமரா கண்களால் நேர்த்தியாக சிறை பிடித்திருக்கிறது.

பட்டுக் கோட்டை பிரபாகரின் வசனங்கள் சில இடத்தில் அட சொல்ல வைக்கிறது. ஜீவா, டாப்ஸி இடையேயான காதல் வசனங்களை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆர். கண்ணனின் கடின உழைப்பு எல்லாம், தெளிவற்ற திரைக்கதையால் வீணாகியது போல் தோன்றுகிறது. வள வளவென்று போன்று முதல் பாதியில் நகரும் திரைக்கதை, கடைசி 30 நிமிடத்தில் வேகம் எடுக்கிறது. இதை சரிசெய்திருக்கிலாம். இவரது கடைசி நேர ட்விஸ்ட் தமிழ் சினிமாவிற்கு புதுசு.

வந்தான் வென்றான்.. ஜீவாவிற்கு வந்தான் நின்றான்..!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum