தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உங்களுக்கு தெரியுமா?

Go down

உங்களுக்கு தெரியுமா? Empty உங்களுக்கு தெரியுமா?

Post  gandhimathi Sun Jan 20, 2013 1:44 pm




* விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது. அதேநேரம், விநாயக சதுர்த்தி அன்று மட்டும் துளசியில் ஒரு தளம் போடலாம்.

* சிவபெருமானுக்கு தாழம்பூ ஆகாது. தும்பை, வில்வம், கொன்றை ஆகியவை விசேஷம். ஊமத்தை, வெள்ளருக்கு ஆகியவற்றாலும் அர்ச்சிக்கலாம்.

* விஷ்ணுவை அட்சதையால் அர்ச்சிக்கக் கூடாது.

* அம்பிகைக்கு அருகம்புல் உகந்ததல்ல.

* லட்சுமிக்குத் தும்பைக் கூடாது.

* பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது.

* விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம். அதுபோல, சிவன் சம்பந்தமுடைய தெய்வங்களுக்கே வில்வ அர்ச்சனை செய்யலாம்.

* துலுக்க சாமந்திப்பூவை கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது.

* மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும். இதழ் இதழாக கிள்ளி அர்ச்சனை செய்யக்கூடாது.

* வாடிப்போன, அழுகிப்போன, பூச்சிகள் கடித்த மலர்களை உபயோகிக்கக் கூடாது.

* அன்று மலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும்.

* ஒருமுறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை எடுத்து, மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது. வில்வம், துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடியும் உபயோகிக்கலாம்.

* தாமரை, நீலோத்பவம் போன்ற நீரில் தோன்றும் மலர்களை தடாகத்தில் இருந்து எடுத்த அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும் என்கிற விதி இல்லை.

* வாசனை இல்லாதது, முடி, புழு ஆகியவற்றோடு சேர்ந்திருந்தது, வாடியது, தகாதவர்களால் தொடப்பட்டது அல்லது நுகரப்பட்டது, ஈரத்துணி உடுத்திக் கொண்டு வரப்பட்டது, காய்ந்தது, பழையது, தரையில் விழுந்தது ஆகிய மலர்களை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தக் கூடாது.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum