தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உங்களுக்கு தெரியுமா?

Go down

உங்களுக்கு தெரியுமா? Empty உங்களுக்கு தெரியுமா?

Post  meenu Fri Jan 18, 2013 12:50 pm

* ஆகமப்படி அர்த்தநாரீஸ்வரர் நின்ற நிலையில் தான் இருப்பார். விதிவிலக்காக திருக்கண்டியூரில் இரண்டாவது திருச்சுற்றில் உட்கார்ந்த நிலையில் உட்குடி ஆசனத்தில் உருவாக்கப்பட்டுள்ளார்.

* பொதுவாக கோவில்களில் பலி பீடமும், கொடி மரமும் ஆலயத்திற்கு உள்ளே இருக்கும். ஆனால் காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள திருப்புட்குழி திருத்தலத்தில் கொடி மரமும் பலிபீடமும் ஆலயத்திற்கு வெளியே அமைந்துள்ளன.

* தமிழகத்தில் எல்லா சிவாலயங்களிலும் நவக்கிரக சந்நிதி உண்டு. விதிவிலக்காக பிரசித்திபெற்ற திருக்கோவிலான திருக்கடவூர் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோவிலில் நவக்கிரக சந்நிதி கிடையாது.

* பொதுவாக திருமால் கோவில்களில் மூலவருக்கு தினசரி திருமஞ்சனம் கிடையாது. விதிவிலக்காக நெல்லை மாவட்ட நவதிருப்பதிகளில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம் கண்ணபிரானுக்கு தினமும் முதலில் பாலாபிஷேகம் நடைபெறும். அதன்பின் மந்திர புஷ்பங்களுடன் நவகலசாபிஷேகம் நடைபெறுகிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum