தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெரிய நடிகையாக இருந்தும் பந்தா இல்லை: சினேகாவின் எளிமை காதலிக்க தூண்டியது நடிகர் பிரசன்னா பேட்டி

Go down

பெரிய நடிகையாக இருந்தும் பந்தா இல்லை: சினேகாவின் எளிமை காதலிக்க தூண்டியது நடிகர் பிரசன்னா பேட்டி Empty பெரிய நடிகையாக இருந்தும் பந்தா இல்லை: சினேகாவின் எளிமை காதலிக்க தூண்டியது நடிகர் பிரசன்னா பேட்டி

Post  ishwarya Wed Apr 10, 2013 2:38 pm

சினேகாவும், பிரசன்னாவும் நீண்ட நாட்களாக காதலித்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக பிரசன்னா நேற்று அறிவித்தார். பிரசன்னாவை விட சினேகா வயதில் மூத்தவர். தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் முன்னணி நடிகையாக உள்ளார்.

2001-ல் சினேகா சினிமாவில் அறிமுகமானார். முதல் படம் விரும்புகிறேன். பின்னர் என்னவளே, ஆனந்தம், பார்த்திபன் கனவு, கமலுடன் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., ஆட்டோ கிராப், புதுப்பேட்டை, பார்த்தாலே பரவசம், பாண்டி உள்பட பல படங்களில் நடித்தார்.

ஆட்டோ கிராப் படத்தில் சினேகா பாடிய `ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே’ பாடல் பட்டி தொட்டியொங்கும் பிரபலமாகி தேசிய விருது பெற்றது.

பிரசன்னா `5 ஸ்டார்’ படத்தில் அறிமுகமாகி அழகிய தீயே, கண்ட நாள் முதல், அஞ்சாதே, பாணா காத்தாடி, முரண் போன்ற படங்களில் நடித்தார். `அச்சமுண்டு அச்சமுண்டு’ என்ற படத்தில் இருவரும் கணவன் மனைவியாக நடித்தனர். அப்போது இருவரும் நெருக்கமானார்கள்.

சினேகாவுடன் காதல் மலர்ந்தது எப்படி என்பது குறித்து பிரசன்னா அளித்த பேட்டி வருமாறு:

சினேகாவுக்கும் எனக்கும் ஆரம்பத்தில் தொழில் ரீதியான நட்புதான் இருந்தது. நாளடைவில் சினேகா நடவடிக்கையில் ஈர்ப்பானேன். அவர் பெரிய நடிகை. ஆனாலும் அந்த தலைக்கனம் கொஞ்சமும் இல்லை. பந்தா இல்லாமல் பழகுவார். எளிமையாக நடந்து கொள்வார். அந்த குணங்கள் எனக்கு பிடித்தது.

சினேகா வாழ்க்கை பூரா என்னுடன் இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். மூன்றரை வருடம் எங்களுக்குள் காதல் இருந்தது. ஆனாலும், அவசரப்படாமல் ஒருவரையொருவர் முழுமையாக புரிந்து கொள்ள கால அவகாசம் எடுத்தோம். நிறைய யோசித்தோம். விவாதித்தோம். அதன் பிறகு திருமணம் செய்து கொள்வதென முடிவு எடுத்தோம். முதலில் சினேகாவுக்கு புடவை வாங்கி கொடுத்தேன். அது அவருக்கு ரொம்ப பிடித்தது.

எனக்கு சினேகா விலை உயர்ந்த கைக்கடிகாரம் வாங்கி கொடுத்தார். நாங்கள் ரொம்ப நெருக்கமான பிறகு சினேகாவுக்கு அவரது பிறந்த நாளில் `ஐ பேட்’ வாங்கி கொடுத்தேன். இரு குடும்பத்தாரும் திருமணத்துக்கு சம்மதித்து விட்டனர். விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெறும். அதன் பிறகு திருமண தேதியை முடிவு செய்வோம்.

இவ்வாறு சினேகா கூறினார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum