வீரப்பனைப் பற்றி யாருக்கும் முழுசா தெரியாது! – ‘குப்பி’ ரமேஷ்
Page 1 of 1
வீரப்பனைப் பற்றி யாருக்கும் முழுசா தெரியாது! – ‘குப்பி’ ரமேஷ்
சர்ச்சைக்குரிய உண்மைச் சம்பவங்களை வைத்து படமாக்கும் ‘குப்பி’ ரமேஷ் அடுத்ததாக சந்தனக் கடத்தல் வீரப்பன் கதையை கையில் எடுத்திருக்கிறார். படம் வளர்ந்து கொண்டிருக்கும்போதே வம்பும் வளரும். இந்த முறையும் அப்படிதான் ரமேஷிடம் பேசினோம்.
பல வருஷங்களாக பரபரப்பாக பேசப்பட்ட வீரப்பன் கதைதான் எல்லாருக்கும் தெரியுமே இந்தப் படத்தில் புதுசா என்ன சொல்லிடப் போறீங்க?
வீரப்பனைப் பற்றி யாருக்கும் முழுசா தெரியாது. நாம கேட்டதும், பார்த்ததும், படிச்சதும் எல்லாம் அரைகுறைதான். ஆனால் உண்மையை தேடிப்போனபோதுதான் பல ஷாக்கான தகவல்கள் கிடைச்சது. அந்த உண்மைகளை மட்டும் திரைக்கதையா ‘வன யுத்தம்’ படத்தில் காட்டியிருக்கேன்.
இந்தத் தகவலுக்காக வீரப்பனோட வாழ்ந்தவங்க, உதவியா காட்டுக்குள்ள இருந்தவங்க என 250 பேரை சந்திச்சுப் பேசியிருக்கேன். ஐ.பி.எஸ் ஆபீஸர்களையும் பார்த்துப் பேசினேன்.
காவல் துறையிலிருந்து உங்களுக்கு எதிர்ப்பு வராதா?
இந்த விஷயத்துல வீரப்பனைப் பற்றியும் அவனை சுட திட்டம் போட்டது பற்றியும் ரெண்டே பேருக்குதான் தெரியும். அதனாலதான் அது ரகசியமா இருந்துச்சு. அந்த ரெண்டு பேர் விஜயகுமார், செந்தாமரை கண்ணன். இவங்களையும் நான் சந்திச்சு என் கதையோட முழு ஸ்கிரிப்ட்டையும் கொடுத்து அனுமதி கேட்டேன்.
டெல்லியில் விஜயகுமாருடன் பல நாள் தங்கியிருந்து அவரோட பேசியிருக்கேன். செந்தாமரை கண்ணனிடமும் பலநாள் பேசி நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டேன். அதனால காவல்துறையிலிருந்து எந்த எதிர்ப்பும் வராது.
வீரப்பன் மனைவி முத்துலட்சுமி ‘என் கணவர் கதையை எடுக்கக் கூடாது’னு சொல்லியிருக்காங்களே?
இது அவங்க கணவர் கதை மட்டுமல்ல. ஒரு போலீஸ் ஆபீசர் கதை. ஒரு மலை கிராமத்து மக்களோட கதை. ஒரு பத்திரிகையாளரோட கதை, நான் பத்திரிகையாளரின் பார்வையில் வீரப்பனைப் பற்றி சொல்றேன். அதனால முத்துலட்சுமிக்கு இந்த விஷயத்துல தலையிட உரிமை கிடையாது. ஆனா அவங்களையும் சந்திச்சுப் பேசிட்டேன்.
பரபரப்பான அந்த கதாபாத்திரங்கள்ல யார் நடிக்கிறாங்க?
வீரப்பனா கிஷோர் பண்றார். முத்துலட்சுமியாக விஜயலட்சுமி, விஜயகுமார் கேரக்டர்ல அர்ஜுன், ரவி காளை செந்தாமரைக் கண்ணன் கேரக்டர்ல வர்றார். சுரேஷ் ஓபராய் கடத்தப்படும் ராஜ்குமாரா வர்றார். அதோடு நிஜ கேரக்டர்களோட பெயரையே படத்திலும் வெச்சிருக்கேன். அர்ஜுன்கூட விஜயகுமாரோட பேசி ஸ்டடி பண்ணி நடிக்கிறார்.
வீரப்பன் நிறைய பணத்தையும், நகைகளையும் காட்டில் மறைச்சு வெச்சிருக்குறதா செய்தி இருக்கே?
அதைத்தான் சில இடங்கள்ல தேடி எடுத்தாங்களே… கோர்ட்டிலும் அதை ஒப்படைச்சாங்க. இன்னும் எந்த இடத்துல பணம் இருக்குனு வீரப்பன், கோவிந்தன் இவங்களுக்குத்தான் தெரியும்.
அடுத்து எந்த சம்பவத்தைப் படமாக்கப் போறீங்க?
‘பிரபாகரன்’
பல வருஷங்களாக பரபரப்பாக பேசப்பட்ட வீரப்பன் கதைதான் எல்லாருக்கும் தெரியுமே இந்தப் படத்தில் புதுசா என்ன சொல்லிடப் போறீங்க?
வீரப்பனைப் பற்றி யாருக்கும் முழுசா தெரியாது. நாம கேட்டதும், பார்த்ததும், படிச்சதும் எல்லாம் அரைகுறைதான். ஆனால் உண்மையை தேடிப்போனபோதுதான் பல ஷாக்கான தகவல்கள் கிடைச்சது. அந்த உண்மைகளை மட்டும் திரைக்கதையா ‘வன யுத்தம்’ படத்தில் காட்டியிருக்கேன்.
இந்தத் தகவலுக்காக வீரப்பனோட வாழ்ந்தவங்க, உதவியா காட்டுக்குள்ள இருந்தவங்க என 250 பேரை சந்திச்சுப் பேசியிருக்கேன். ஐ.பி.எஸ் ஆபீஸர்களையும் பார்த்துப் பேசினேன்.
காவல் துறையிலிருந்து உங்களுக்கு எதிர்ப்பு வராதா?
இந்த விஷயத்துல வீரப்பனைப் பற்றியும் அவனை சுட திட்டம் போட்டது பற்றியும் ரெண்டே பேருக்குதான் தெரியும். அதனாலதான் அது ரகசியமா இருந்துச்சு. அந்த ரெண்டு பேர் விஜயகுமார், செந்தாமரை கண்ணன். இவங்களையும் நான் சந்திச்சு என் கதையோட முழு ஸ்கிரிப்ட்டையும் கொடுத்து அனுமதி கேட்டேன்.
டெல்லியில் விஜயகுமாருடன் பல நாள் தங்கியிருந்து அவரோட பேசியிருக்கேன். செந்தாமரை கண்ணனிடமும் பலநாள் பேசி நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டேன். அதனால காவல்துறையிலிருந்து எந்த எதிர்ப்பும் வராது.
வீரப்பன் மனைவி முத்துலட்சுமி ‘என் கணவர் கதையை எடுக்கக் கூடாது’னு சொல்லியிருக்காங்களே?
இது அவங்க கணவர் கதை மட்டுமல்ல. ஒரு போலீஸ் ஆபீசர் கதை. ஒரு மலை கிராமத்து மக்களோட கதை. ஒரு பத்திரிகையாளரோட கதை, நான் பத்திரிகையாளரின் பார்வையில் வீரப்பனைப் பற்றி சொல்றேன். அதனால முத்துலட்சுமிக்கு இந்த விஷயத்துல தலையிட உரிமை கிடையாது. ஆனா அவங்களையும் சந்திச்சுப் பேசிட்டேன்.
பரபரப்பான அந்த கதாபாத்திரங்கள்ல யார் நடிக்கிறாங்க?
வீரப்பனா கிஷோர் பண்றார். முத்துலட்சுமியாக விஜயலட்சுமி, விஜயகுமார் கேரக்டர்ல அர்ஜுன், ரவி காளை செந்தாமரைக் கண்ணன் கேரக்டர்ல வர்றார். சுரேஷ் ஓபராய் கடத்தப்படும் ராஜ்குமாரா வர்றார். அதோடு நிஜ கேரக்டர்களோட பெயரையே படத்திலும் வெச்சிருக்கேன். அர்ஜுன்கூட விஜயகுமாரோட பேசி ஸ்டடி பண்ணி நடிக்கிறார்.
வீரப்பன் நிறைய பணத்தையும், நகைகளையும் காட்டில் மறைச்சு வெச்சிருக்குறதா செய்தி இருக்கே?
அதைத்தான் சில இடங்கள்ல தேடி எடுத்தாங்களே… கோர்ட்டிலும் அதை ஒப்படைச்சாங்க. இன்னும் எந்த இடத்துல பணம் இருக்குனு வீரப்பன், கோவிந்தன் இவங்களுக்குத்தான் தெரியும்.
அடுத்து எந்த சம்பவத்தைப் படமாக்கப் போறீங்க?
‘பிரபாகரன்’
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» களவாடியப் பொழுதுகள் ரிலீஸ் பற்றி தெரியாது
» ‘பிரபாகரனைப் பற்றி படமெடுக்கப் போறீங்களா இயக்குநர் ரமேஷ்… ஒரு நிமிஷம்!’
» டி.ஆர். ரசிகர்களை சீண்டப்போகும் ஜித்தன் ரமேஷ்!
» இது என்னுடைய பொருள், வெளியிடும் தேதி பற்றி முடிவு செய்ய யாருக்கும் அருகதை கிடையாது
» முழுசா வர்றேன் - லட்சுமிராய்
» ‘பிரபாகரனைப் பற்றி படமெடுக்கப் போறீங்களா இயக்குநர் ரமேஷ்… ஒரு நிமிஷம்!’
» டி.ஆர். ரசிகர்களை சீண்டப்போகும் ஜித்தன் ரமேஷ்!
» இது என்னுடைய பொருள், வெளியிடும் தேதி பற்றி முடிவு செய்ய யாருக்கும் அருகதை கிடையாது
» முழுசா வர்றேன் - லட்சுமிராய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum