தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தம்பி வெட்டோத்தி சுந்தரம் – திரை விமர்சனம்

Go down

தம்பி வெட்டோத்தி சுந்தரம் – திரை விமர்சனம் Empty தம்பி வெட்டோத்தி சுந்தரம் – திரை விமர்சனம்

Post  ishwarya Wed Apr 10, 2013 2:07 pm


வெட்டோத்திங்கிற ஏரியாவில இருக்கிற சுந்தரம் ஆசிரியருக்கு படித்திருந்தாலும் படித்த படிப்புக்கு ஆசிரியர் வேலை கிடைக்கவில்லை. அப்புறம் என்ன போலீஸ் வேலையில இருந்து ஆர்மி வரைக்கும் எல்லா அரசு உத்தியோகத்துக்கும் முயற்சி பண்றான் சுந்தரம். ஆனால் எந்த வேலையுமே கிடைக்கலை. அந்த ஏரியாவில் சாராயம் காய்ச்சுற தொழில் கட்டப்பஞ்சாயத்து இப்படி சகலமும் செய்யுறவரு சிலுவை. இவரோட ஒரே பொண்ணு லூர்து மேரி (அஞ்சலி). சுந்தரத்தைப் பற்றி நல்லாவே தெரிந்த லூர்துமேரி அவனை லவ் பண்றாங்க. இவரும் லூர்து மேரியைக் காதலிக்கிறார்.

சுந்தரத்தின் அப்பா வாங்கிய கடனுக்காக அவனுடைய வீட்டை ஜப்தி செய்வதற்கான நோட்டீஸை சுந்தரம் வீட்டில் கொண்டு வந்து ஒட்டுறாங்க சில அதிகாரிகள். பதினைந்து நாட்களுக்குள் மொத்த பணத்தையும் கட்டலைன்னா வீடு ஏலத்துக்கு போயிரும்ங்கிற சூழ்நிலையில சுந்தரம் தன் நண்பன் சாளை (சரவணன்) கூட சேர்ந்து ரெண்டாம் நம்பர் பிஸினஸான அரிசி கடத்தல் தொழில்ல இறங்குறான்.

லூர்துமேரியோட அப்பாகிட்ட பொண்ணு கேட்கிறப்போ அவரு கடத்தல் பண்றவனுக்கு என் பொண்ணைக் கட்டித் தரமாட்டேன்னு சொல்லுறாரு. இதனால அந்த கடத்தல் தொழிலையை விட்டுடுறான் சுந்தரம். மதம் மாறி லூர்து மேரியை கல்யாணம் பண்ண ஞானஸ்தானம் வாங்குறபோது நண்பன் சாளையால பிரச்சனை வருது. இதனால கோபப்படுற லூர்துமேரியோட அப்பா அவளை சுந்தரத்துக்கு கட்டித் தரமாட்டேன்னு சொல்லுறாரு.

இதனால ‘வீட்டை விட்டு ஓடி வந்துடுறேன் கல்யாணம் பண்ணிக்கலாம்’னு சுந்தரத்துகிட்ட சொல்லுறா லூர்து மேரி. அவனும் சரின்னு சொல்ல, நடு ராத்திரியில வீட்டைவிட்டு ஓடி வருகிறாள் லூர்துமேரி. அவளுக்காக காத்திருக்கிறான் சுந்தரம். ஆனால் வீட்டைவிட்டு வெளியேறினவ அவனை வந்து சந்திக்கல.

எங்கே போனான்னு தெரியாமல் சுந்தரம் ஒரு பக்கம் தேட, இன்னொரு பக்கம் லூர்து மேரியை சுந்தரம்தான் கடத்திச் சென்றுவிட்டான் என்று சிலுவை கோஷ்டி சுந்தரத்தை தேடு அலைகிறார்கள். லூர்துமேரி என்ன ஆனாள்? அவள் கிடைத்தாளா? சுந்தரம் சிலுவை கோஷ்டிகிட்ட சிக்கினானா? என்பது க்ளைமேக்ஸ்.

குமரி மாவட்டம் 100 சதவீதம் படிப்பறிவு பெற்ற மாவட்டம்தான் என்றாலும் வெறும் கல்விதான் அந்த மக்கள் கிட்ட இருக்குங்கிறதும் கல்விஅறிவு என்பது சுத்தமாக அந்த மக்களிடம் இல்லைங்கிறதையும் படம் பிடிச்சுக் காட்டுது தம்பி வெட்டோத்தி சுந்தரம். கல்வி அறிவு இல்லாத காரணத்தால் குற்ற செயல்கள், வரதட்சனை கொடுமை, வரதட்சணை அதிகம் வாங்குவது இதெல்லாம் குமரி மாவட்டத்தில் சர்வசாதாரணம். ஒரு காலகட்டத்தில் அரசு வேலை மோகம் அனைவரையும் பிடித்து ஆடிக்கொண்டிருந்தது.

குமரி மாவட்டத்தில் கொஞ்சம் கூடுதலாகவே இந்த மோகம் இருந்தது. இதனாலேயே படத்தில வருகிற ஒரு கதாபாத்திரம் அரசு வேலையை எதிர்பார்த்து அது கிடைக்காமல் செத்தே போகிற மாதிரியான காட்சிகள் வருது. குமரிமாவட்டத்துல வீட்டு பக்கத்திலயே இறந்தவங்களோட கல்லறையை வெச்சிருப்பாங்க. அதெல்லாமே படத்தின் கதையோட அழுத்தமாக வந்து போகுது. குமரி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு அரிசி கடத்துற வேலைகளை சிலர் ரொம்ப வருஷமாகவே செய்துட்டு இருக்காங்க. அதை ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது இந்த படம்.

சுந்தரம்… சாரி… கரண், சுந்தரம் கேரக்டர்ல வராரு. கேரக்டருக்கு தேவையான உணர்ச்சிகளை கொட்டி நடித்திருக்கிறார் கரண். இவரை விட இவருக்கு தோழரா வருகிற சரவணன் நடிப்புக்குதான் தியேட்டர்ல க்ளாப்ஸ் எக்கச்சக்கம். பருத்திவீரனுக்கு அப்புறமா சரவணன் இந்த படத்தில கலக்கியிருக்காரு. அவர், செயற்கை கால் பொருத்தியிருக்காருன்னு தெரியுறப்போ கொஞ்சம் உச் கொட்ட வைக்கிறது.

லூர்து மேரி கேரக்டரில் அஞ்சலி அங்காடி தெருவில் வந்த மாதிரியே துருதுரு கேரக்டர். அஞ்சலியைப் பார்க்கும் போது ஏதோ நம்ம பக்கத்து வீட்டு எதிர் வீட்டு பொண்ணை பார்க்கிற மாதிரி ஒரு ஃபீல். இதுதான் இத்தனை நாட்கள் அம்மணியை தமிழ் சினிமாவில் நடிப்பைக் கொட்ட வெச்சிட்டிருக்கு போலும். சுந்தரத்தின் நண்பராக வருகிறார் கஞ்சா கருப்பு. ஒன்றிரண்டு காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். மற்ற காட்சிகளில் குணச்சித்திர நடிகராகி விடுகிறார்.

அஞ்சலிக்கு தோழியாக வருகிற பொண்ணு நடிப்பும் ஓ.கே. தன் காதலனுடன் தனிமையில் அவள் இருப்பதைப் பார்த்ததும் அவளை அவ அப்பா வெட்டிக் கொன்றுவிடும் காட்சி, சுந்தரத்தின் கண்ணில் சுண்ணாம்பைக் கலந்து வைத்துவிடும் காட்சிகள் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றன. ‘கொலைகாரா’ பாடல் செம மெலடி. அந்த பாடலை காட்சியாக்கியிருக்கும் விதமும் அருமை.
குமரி மாவட்த்திலேயே படத்தின் பெரும்பாலான காட்சிகளை படமாக்கியதால படத்தில நேச்சர் இருக்கு. குமரி மாவட்டத்து வழக்கு மொழியை இந்த தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தில சரியா பயன்படுத்திக்கலை இயக்குநர். என்னடே, வாடே, போடே… இந்த வார்த்தைகளை வைத்த இயக்குநர் கூட்டாளி, மத்தவன் இதுமாதியான இன்னும் ஏராளமான வட்டார வழக்கு வார்த்தைகளை படத்தில் சேர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

அலுப்பை ஆத்திரத்தை கிளப்பாத காட்சிகளை கொண்டு படம் இருப்பதால் சுந்தரம்ங்கிற ஒருத்தனோட வாழ்க்கையையே நிஜமாகவே நம்ம கண்ணு முன்னால பார்த்த மாதிரி ஒரு ஃபீல் ஏற்படுது.

அரசு வேலையோ இல்லை வேறு ஏதாவது ஒரு வேலை கிடைக்காததாலேயே ஒருவன் குற்றவாளி ஆகிவிடுவான்னு இயக்குநர் சொல்லுறதும் க்ளைமேக்ஸ்ல இந்த மாதிரி வேலை கிடைக்காமல் குமரி மாவட்டத்து இளைஞர்கள் குற்றவாளிகளாகி விடுகிறார்கள் என்று சொல்வதும் அவ்வளவு பொருத்தமானதாக இல்லை.

ஒருத்தனுக்கு வேலை கிடைக்காததுக்கு இந்த சமுதாயம் எப்படி பொறுப்பாகும் இயக்குநரே? அவன்கிட்ட திறமை இருந்திருந்தா வேலை கிடைச்சிருக்கும். அதற்கான திறமையை உருவாக்கிக்க முயற்சி பண்ணணுமே தவிர வேலை கிடைக்கலைன்னா, குற்றசெயல்களில் ஈடுபட்டு குற்றவாளி ஆகிடுவான்னு சப்பைக்கட்டு கட்டுறது என்ன நியாயம் இயக்குநரே…?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum