தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

யாருடன் நடிக்கிறேங்கிறது முக்கியமில்லை; கதைதான் முக்கியம்: அஞ்சலி பேட்டி!

Go down

யாருடன் நடிக்கிறேங்கிறது முக்கியமில்லை; கதைதான் முக்கியம்: அஞ்சலி பேட்டி! Empty யாருடன் நடிக்கிறேங்கிறது முக்கியமில்லை; கதைதான் முக்கியம்: அஞ்சலி பேட்டி!

Post  ishwarya Wed Apr 10, 2013 1:18 pm

தமிழக-கேரள எல்லையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து வெளியாகி இருக்கும் படம் “தம்பி வெட்டோத்தி சுந்தரம்”. படம் வெளி வருவதற்கு முன்பே, பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புக்குள்ளான இப்படம் கடந்தவாரம் ரிலீசானது. கரண் ஹீரோவாகவும், அஞ்சலி ஹீரோயினாகவும் நடித்துள்ள இப்படத்தை வடிவுடையான் இயக்கியுள்ளார். படத்தில் லூர்து எனும் கேரக்டரில் அஞ்சலி நடித்திருந்தார்.

படம் குறித்தும், தன்னுடைய கேரக்டர் குறித்தும் அஞ்சலி நம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் கூறுகையில், படித்த சுந்தரம் எனும் இளைஞன் வேலை கிடைக்காமல் எப்படி முரடனாக, தப்பான வழியில் செல்கிறான் என்பதை படமாக்கி இருந்தார் டைரக்டர். படத்தில் அந்த முரடனின் காதலியாக, லூர்து எனும் கேரக்டரில் நான் நடித்திருந்தேன். லூர்து எப்படி பேசுவாள், எப்படி நடப்பாள் என்று ஒவ்வொரு விஷயத்தையும் டைரக்டர் எனக்கு சொல்லி கொடுத்தார். அவர் சொன்னதை, என் நடிப்பால் அந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்து இருக்கேன்.

ஒவ்வொரு படத்திலும், அந்தந்த ஏரியா மொழியில் பேசிவருகிறேன். வெட்டோத்தி சுந்தரம் படத்தை பொறுத்த வரை, எனக்கு ரொம்ப சவாலான‌ கேரக்டர் தான். படத்தில் ஒவ்வொரு காட்சியும் சவாலாக இருந்தது. குறிப்பாக படத்தில் கரண் சார், இறந்த காட்சிக்கு பிறகு அவருக்கு வேலை கிடைச்சிருச்சுனு லெட்டர் வரும், அதை நான் தான் படிப்பேன். அப்போது உண்மையாகவே அழுதுவிட்டேன். அதேபோல் கடைசியில் என்னை சுற்றி இருப்பவர்கள் இறந்து போன பின்னர், நான் விளக்கு ஏத்தி வைப்பது போன்ற காட்சியில் நடிக்கும் போது ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு.

என்னை பொறுத்தவரை படத்தில் அஞ்சலி நடிச்சுருக்காங்க, படம் நல்லா இருக்குனு எல்லோரும் சொல்லனும், மத்தபடி யார்கூட நடிக்கிறேங்கிறது முக்கியமில்ல, நல்ல கதை தான் முக்கியம் என்று கூறிய அஞ்சலி, தற்போது சுந்தர்.சி இயக்கும் மசாலா காபி படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்து கொண்டிருப்பதாக கூறுகிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சொத்து முழுவதையும் இழந்தாலும் தேச ஒற்றுமைதான் எனக்கு முக்கியம்: கமல் பேட்டி
» ஓய்வு எடுக்க மும்பை சென்றேன்: நடிகை அஞ்சலி பேட்டி
» நானும் ஸ்ருதி ஹாசனும் பெஸ்ட் ப்ரெண்ட்- அஞ்சலி பேட்டி.
» தினமும் மாத்திரை சாப்பிடாவிட்டால் அஞ்சலி உயிருக்கு ஆபத்து: சித்தி பரபரப்பு பேட்டி
» என் சொந்த வாழ்க்கையை நானே முடிவு செய்வேன்: நடிகை அஞ்சலி பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum