தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மம்பட்டியான் படத்தை வெளியிட்டால் மோதல் ஏற்படும்: மம்பட்டியான் மகன் பேட்டி

Go down

மம்பட்டியான் படத்தை வெளியிட்டால் மோதல் ஏற்படும்: மம்பட்டியான் மகன் பேட்டி Empty மம்பட்டியான் படத்தை வெளியிட்டால் மோதல் ஏற்படும்: மம்பட்டியான் மகன் பேட்டி

Post  ishwarya Tue Apr 09, 2013 12:45 pm

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ளது கோல்காரனூர். இந்த ஊரை சேர்ந்தவர்
நல்லப்பன்(வயது 57). இவர் மலையூர் மம்பட்டியானின் மகனாவார். இன்று இவரும்,
இவரது மகன் குமார், பேரன் துரைராஜ் , உறவினர் கருணாகரன் மற்றும் ஊர்
பொதுமக்களுடன் சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் வந்து பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:



சேலம் என்றாலே மாம்பழம்தான் நினைவுக்கு வரும். இதுபோல் மலையூர்
மம்பட்டியான் என்றால் சேலம் மாவட்டம்தான் நினைவுக்கு வரும். எனது தந்தைக்கு
இரண்டு மனைவிகள். முதல் மனைவி சின்னப்பிள்ளையின் மகன்தான் நான். தற்போது
நான் கூலி தொழில் செய்து வருகிறேன். இயக்குனர் தியாகராஜன் மம்பட்டியான்
படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில் எங்கள் ஊரில் நடந்த கோவில்
திருவிழா குறித்தும், இதில் பலர் கொல்லப்பட்டது குறித்தும் காட்ட உள்ளனர்.

இந்த கொலை சம்பவம் 1959-ம் ஆண்டு நடந்தது. அப்போது மலையூர்
மம்பட்டியானும், அவரது ஆட்களும் கோவிலுக்கு வந்து 9 பேரை கொன்றதாக
கூறுவார்கள். இதை இப்போது மீண்டும் சினிமாவினால் காட்டினால் ஊரில் தகராறு
வரும். எங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும். இதனால் இந்த படத்தை
தடை செய்ய வேண்டும் என கூறுகிறோம்.

ஒவ்வொரு வருடம் ஆடிமாதம் கோவிலில் விழா சிறப்பாக நடக்கும். இந்த
நேரத்தில் இந்த படம் வெளியானால் ஊரில் நிச்சயம் தகராறு ஏற்பட்டு விடும்.
ஊரின் நன்மையை கருதியும், எங்களுக்கு பாதுகாப்பு கேட்டும்தான் இந்த
முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம். எப்பாடு பட்டாவது இந்தபடத்தை
நிறுத்துவோம். எங்களுக்கு ஊர் மக்கள் துணை நிற்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum