தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

''நானும், சத்யராஜும் கணவன்-மனைவி மாதிரி'' டைரக்டர் மணிவண்ணன் தமாஷ்

Go down

''நானும், சத்யராஜும் கணவன்-மனைவி மாதிரி'' டைரக்டர் மணிவண்ணன் தமாஷ்  Empty ''நானும், சத்யராஜும் கணவன்-மனைவி மாதிரி'' டைரக்டர் மணிவண்ணன் தமாஷ்

Post  amma Fri Apr 05, 2013 5:45 pm



''நானும், சத்யராஜும் கணவன்-மனைவி மாதிரி'' என்று டைரக்டர் மணிவண்ணன் தமாசாக கூறினார்.

பாடல் வெளியீடு

சத்யராஜ் நடித்து, மணிவண்ணன் டைரக்டு செய்துள்ள 'அமைதிப்படை' படத்தின் இரண்டாம் பாகமான 'நாகராஜ சோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ.' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. பாடல்களை டைரக்டரும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் (பெப்சி) தலைவருமான அமீர் வெளியிட, டைரக்டர் கே.பாக்யராஜ், நடிகை நமீதா ஆகிய இருவரும் பெற்றுக்கொண்டார்கள். விழாவில், டைரக்டர் மணிவண்ணன் பேசியதாவது:-

இளையராஜா சிபாரிசு

''நானெல்லாம் டைரக்டர் ஆவேன் என்று எங்க டைரக்டர் பாரதிராஜா நம்பவே இல்லை. அப்போதெல்லாம் பாரதிராஜா படங்களுக்கு இளையராஜா இசையமைக்கும்போது, அவருக்கு பாடலுக்கான சூழ்நிலையை சொல்வது, பாடல் வரிகளை எழுதி வாங்குவது என அத்தனை வேலைகளையும் நான்தான் செய்து வந்தேன்.

ஒருமுறை அவர்தான் என்னை தயாரிப்பாளர் கலைமணிக்கு அறிமுகப்படுத்தி, ''நம்ம பையன்தான். நல்ல திறமை இருக்கு. ஒரு வாய்ப்பு கொடுங்க'' என்று, 'கோபுரங்கள் சாய்வதில்லை' படத்தை டைரக்டு செய்யும் வாய்ப்பை வாங்கிக் கொடுத்தார். இளையராஜாவால்தான் நான் டைரக்டர் ஆனேன். ஆனால், இளையராஜாவை இந்த படத்தில் பயன்படுத்த முடியவில்லை. காரணம், பட்ஜெட். இந்த படத்தின் பட்ஜெட் அதற்கு இடம் கொடுக்கவில்லை. ஜேம்ஸ் வசந்தனை பயன்படுத்தியிருக்கிறேன்.

அரசியல் படம்

'அமைதிப்படை இரண்டாம் பாகம்' அரசியல் படம் என்று சொல்கிறார்கள். ஆமாம். இது, அரசியல் படம்தான். எந்த அரசியல் கட்சி தலைவரையும் தனிப்பட்ட முறையில் தாக்காமல், சமகால அரசியலை சொல்லும் படம் இது. இதில் வரும் வசனங்களும் அப்படித்தான். 'அமைதிப்படை' முதல் பாகம் எடுத்து 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்த இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளோம். இந்த 20 ஆண்டுகளில் சத்யராஜ் முகத்திலும், நடையிலும் ஏற்பட்டுள்ள அனைத்து மாறுதல்களும் இரண்டு பேருக்குத்தான் நன்றாக தெரியும். ஒன்று அவர் துணைவியாருக்கு. இன்னொன்று எனக்கு.

கணவன்-மனைவி மாதிரி...

நாங்கள் இருவருமே கணவன்-மனைவி மாதிரிதான். படப்பிடிப்பின்போது, அவர் நடித்துக் கொண்டிருப்பார். நான், 'கட்' சொல்ல மறந்து அவர் நடிப்பையே ரசித்துக் கொண்டிருப்பேன். அவரே, ''தலைவரே கட் சொல்லுங்க'' என்பார்.

பயப்படவில்லை

அரசியலையும், அரசியல்வாதிகளையும் விமர்சிப்பதால், அச்சுறுத்தல் வருமே என்றெல்லாம் நான் பயப்படவில்லை. காரணம், இழப்பதற்கு எதுவும் இல்லை. உயிரைத் தவிர. அப்படி எனக்கு என்ன நேர்ந்தாலும், என் உடலை புலிக்கொடி போர்த்தி எடுத்துச் செல்லுமாறு என் தம்பி சீமானை கேட்டுக் கொள்கிறேன்.
என் வீட்டின் மீது ஒரு கல் விழுந்தாலும், இந்த தமிழகத்தில் ஒரு அரசியல்வாதியும் மேடை போட்டுப் பேச முடியாத நிலை ஏற்படும். அதை புலிப்படை பார்த்துக் கொள்ளும்.'' இவ்வாறு மணிவண்ணன் பேசினார்.

சத்யராஜ்

விழாவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், செயலாளர் பி.எல்.தேனப்பன், பொருளாளர் எஸ்.தாணு, நடிகர்கள் சிவகுமார், சத்யராஜ், ஸ்ரீகாந்த், சிபிராஜ், ஷக்தி, விஜய் சேதுபதி, ரகுவண்ணன், தம்பி ராமய்யா, எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி, நடிகைகள் சந்தியா, கஸ்தூரி, சுஜாவாருண்ணி, கோமல் சர்மா, டைரக்டர்கள் வசந்த், சுந்தர் சி, ஜனநாதன், சுசீந்திரன், டி.பி.கஜேந்திரன், சந்தானபாரதி, ஜி.எம்.குமார், சாமி, ஜெகன், ராம், பட அதிபர்கள் ஹென்றி, கே.ஈ.ஞானவேல்ராஜா, கே.ஆர்.கண்ணன், வி.ராமதாஸ், பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஆகியோரும் பேசினார்கள். பட அதிபர்கள் சுரேஷ் காமாட்சி, வி.ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் வரவேற்று பேசினார்கள்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum