தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரூ.67லட்சம் மோசடி புகார் : இரு டைரக்டர்கள் கைது!

Go down

ரூ.67லட்சம் மோசடி புகார் : இரு டைரக்டர்கள் கைது! Empty ரூ.67லட்சம் மோசடி புகார் : இரு டைரக்டர்கள் கைது!

Post  ishwarya Fri Apr 05, 2013 2:44 pm

“காதலில் விழுந்தேன்” பட டைரக்டர் பிரசாத் மற்றும் “பவானி”, “மாசி”
படங்களின் டைரக்டர் கிச்சா ஆகியோர் மோசடி புகாரில் கைது
செய்யப்பட்டுள்ளனர். சின்னத்திரை நடிகரும், தயாரிப்பாளருமான தமிழ்குமரன்
சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்திருக்கிறார். அதில்,
நான் சின்னத்திரையில் நிறைய தொடர்களில் நடித்துள்ளேன். நான் சினிமா படம்
எடுக்க முடிவு எடுத்து, அந்த படத்தை டைரக்ட் செய்யும் பொறுப்பை “காதலில்
விழுந்தேன்” டைரக்டர் பிரசாத்திடம் ஒப்படைத்தேன். படத்திற்கு “எப்படி
மனசுக்குள் வந்தாய்” என்று பெயர் வைத்தோம். படத்தை ஆரம்பிக்க ரூ.67 லட்சம்
காசோலையும் வழங்கினேன். மேலும் படத்தின் நாயகனாக நகுலை நடிக்க சொல்லி
கேட்டேன். ஆனால் சொன்னபடி படத்தை எடுக்கவில்லை பிரசாத்.
பின்னர் அந்த படத்தை இயக்கும் பொறுப்பை “பவானி”, “மாசி” படங்களின்
டைரக்டர் கிச்சாவிடம் ஒப்படைத்தார். ஆனால் அவரும் படத்தை எடுக்கவி‌ல்லை.
ஒருகட்டத்தில் நானே படத்தை தயாரிக்கிறேன் உங்களுடைய ரூ.67 லட்சம் பணத்தை
நான் தந்து விடுகிறேன் என்று ஒரு காசோலையை கொடுத்தார் கிச்சா. ஆனால் அது
பணம் இன்றி திரும்பிவந்துவிட்டது. சொன்னபடி பணத்தையும் தராமல், படத்தையும்
எடுத்து முடிக்காமல் என்னை ஏமாற்றிய பிரசாத் மற்றும் கிச்சா இருவர் மீது
சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என்று தமது
புகார் மனுவில் கூறியுள்ளார்.

தமிழ்குமரனின் மனுவை ஏற்றுக்கொண்ட போலீசார், ரூ.67 லட்சம் மோசடி செய்த
பிரசாத் மற்றும் கிச்சா ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள்
இருவரும் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் புழல்
சிறையில் அடைக்கப்பட்டனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum