தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குஜராத் மாநிலத்தில் மாநகராட்சி அலுவலகம் முன்பு 5 பேர் தீக்குளித்ததால் பரபரப்பு

Go down

 குஜராத் மாநிலத்தில் மாநகராட்சி அலுவலகம் முன்பு 5 பேர் தீக்குளித்ததால் பரபரப்பு  Empty குஜராத் மாநிலத்தில் மாநகராட்சி அலுவலகம் முன்பு 5 பேர் தீக்குளித்ததால் பரபரப்பு

Post  amma Thu Apr 04, 2013 5:33 pm



குஜராத் மாநிலம், ராஜ்கோட் மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. இதனை அறிந்ததும், சோட்டு நகர் பகுதியைச் சேர்ந்த 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் கையில் மண்எண்ணெய் கேன்களுடன் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டனர்.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாநகராட்சி ஊழியர்கள், விரைந்து வந்து 5 பேரையும் காப்பாற்றி உடனே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.இதுகுறித்து மாநகராட்சி மேயர் ஜனாக் கோடாக் கூறுகையில், மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் திட்டம் எதுவும் இல்லை. தவறான தகவலால் 5 பேர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அவர்களை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
»  ஆப்கானிஸ்தான் கோர்ட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்: 53 பேர் சாவு; 91 பேர் காயம்
» உத்தரகாண்ட் மாநிலத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்தது: 7 பேர் பலி
» டெல்லியில் மீண்டும் பரபரப்பு! கல்லூரி மாணவி கடத்தி கற்ழிப்பு! 4 பேர் கும்பல் அட்டகாசம்!
» மஞ்சுவிரட்டில் மாடு முட்டி 3 பேர் பலி விழா குழுவினர் உள்பட 8 பேர் கைது
» ஆப்கானிஸ்தான் கோர்ட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்: 53 பேர் சாவு; 91 பேர் காயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum