தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தசாவதாரக் கோயில் - ஸ்ரீரங்கம்

Go down

தசாவதாரக் கோயில் - ஸ்ரீரங்கம் Empty தசாவதாரக் கோயில் - ஸ்ரீரங்கம்

Post  meenu Mon Apr 01, 2013 12:43 pm


ஸ்தல வரலாறு.....

மூலவர் - பத்து அவதாரங்களும் மூலஸ்தானத்தில் உள்ளன
உற்சவர் - லட்சுமி நாராயணர்
பழமை - 1000 வருடங்களுக்கு முன்
ஊர் - ஸ்ரீரங்கம்
மாவட்டம் - திருச்சி

இந்த கோயில் மூலஸ்தானத்தில், மச்சா, கூர்மா, வராக, நரசிம்மா ஆகிய அவதாரங்கள் ஆயுதங்கள் இல்லாமல் சங்குசக்கரத்துடனும், வாமன அவதாரம் கையில் குடையுடனும், பரசுராம அவதாரம் கையில் கோடாரியுடனும், இராம அவதாரம் வில், அம்புடனும், பலராமன் அவதாரம் கலப்பையுடனும், ஸ்ரீ கிருஷ்ணா அவதாரம் நர்த்தன கிருஷ்ணணாக ஒரு கையில் வெண்ணையுடனும், நாட்டிய பாவனையிலும், கல்கி அவதாரம் கேடயம், கத்தியுடனும் பத்து அவதாரங்களும் மூலஸ்தானத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.

மூலஸ்தானத்தில் சேனாதிபதி விஸ்வக்சேனர் வீற்றிருக்கிறார். இங்குள்ள உற்சவ மூர்த்தி லெட்சுமி நாராயணர். இவர் ஆழ்வார்களாலேயே பூஜை செய்யப்பட்டவர். கோயில்களில் ஒரு மூலவருக்கு பல உற்சவர் இருப்பதை காணலாம். ஆனால் இங்கு பத்து மூலவருக்கு ஒரே ஒரு உற்சவர் மட்டுமே உள்ளார். பத்து அவதாரங்களுக்கும் ஒரு கலசம் வீதம் விமானத்தில் பத்து கலசங்களும் காணப்படுகிறது.

மச்சா (மீன்), கூர்மா (ஆமை) அவதாரங்கள் அவதார நிலையிலேயே மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ளன. கல்கி அவதாரத்தில் குதிரைவாகனத்தில் பெருமாள் கத்தி, கேடயம் போன்ற ஆயுதங்களுடன் தோன்ற இருப்பதை இங்கு காணலாம். இங்குள்ள ஒன்பது அவதாரமும் ஒவ்வொரு கிரகங்களின் தலைவராக கருதப்படுகிறது.

குறிப்பாக மச்சா- கேது, கூர்மா- சனிஸ்வரர், வராக -இராகு, நரசிம்மா - செவ்வாய், வாமன- குரு, பரசுராம-சுக்கிரன், இராம- சூரியன், பலராமன்- மாந்தி(துணைகோள்), ஸ்ரீ கிருஷ்ணா - சந்திரன். கிரகங்கள்தோஷ நிவர்த்தி தலமாக இருப்பதால் ஒவ்வொரு கிரக தோஷமுடையவர்கள் தங்கள் பிறந்த நட்சத்திரத்தில் தசாவதார கோயிலில் பத்து அவதாரங்களையும் பிரார்த்தித்து பலனடையலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum