தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ரீரங்கம் கோவில்

Go down

ஸ்ரீரங்கம் கோவில் Empty ஸ்ரீரங்கம் கோவில்

Post  meenu Fri Jan 18, 2013 12:33 pm

வைகுண்ட ஏகாதசி தினத்தன்று 108 திவ்ய தேசங்களில் மட்டுமின்றி எல்லா பெருமாள் கோவில்களிலும் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்கவாசல் சிறப்புக்குரியதாகக் கருதப்படுகிறது.

இங்கு மட்டுமே அதிகாலையில் பரமபத வாசல் திறக்கப்படுகிறது. மற்ற பெருமாள் கோவில்களில் மாலையில் தான் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிகிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு மட்டும் ஏன் இந்த சிறப்பு தெரியுமாப ஸ்ரீரங்கம் கோவில் விமானம் பாற்கடலில் தோன்றியது.

அதை பெருமாளிடம் இருந்து பெற்ற பிரம்மா நீண்ட நாட்கள் பூஜை செய்து வந்தார். பிறகு சூரிய பகவானிடம் ஒப்படைத்தார்.சூரிய வம்சத்தில் வந்த கிஷ்வாகு மன்னன், அயோத்தியில் அந்த விமானத்தை வைத்து பூஜைகள் செய்து வந்தார். அவரது வழித்தோன்றல் ராமர்.

தன் அவதாரம் முடிவடைந்த நிலையில் ராமபெருமான் அதை இலங்கை மன்னன் விபிஷணனிடம் கொடுத்து சிறப்பாக பூஜிக்குமாறு கூறினார். வீபிஷணன் அதை சுமந்து கொண்டு இலங்கை சென்றார். வழியில் ஸ்ரீரங்கத்தில் காவிரிக்கரையில் வைத்து விட்டு சிறிது ஓய்வு எடுத்தார். மீண்டும் விமானத்தை தூக்க முயன்றபோது முடியவில்லை.

அந்த இடத்திலேயே இருக்க விரும்புவதாக ரங்கநாதர் அருள்பாவித்தார். இதனால் வீபிஷணன் அழுது புலம்பினார். பிறகு அவர் விருப்பப்படி ரங்கநாதர் தெற்கு நோக்கி சயனம் கொண்டார்.

அந்த இடத்தில் சோழ மன்னன் கிள்ளிவளவன் கோவில் கட்டினான். இது ராமபிரானுடன் சம்பந்தப்பட்ட கோவில் என்பதால், ஸ்ரீரங்கம் சென்று வந்தாலே பாவம் தீர்ந்து விடும் என்பார்கள்.

வைகுண்ட ஏகாதசி:

வைகுண்ட ஏகாதசி அன்று ஸ்ரீரங்கம் கோவிலில் நடக்கும் பகல்பத்து, இராப்பத்து என்ற விழா தமிழுக்காக நடக்கும் விழாவாகும். இந்த நாட்களில் 12 ஆழ்வார்களும் பாடிய நாலாயிரத் திவ்யப்பிரபந்தங்கள் பாடப்படுகிறது. இந்த பாடல்களை தமிழர்கள் மறந்து விடக்கூடாது என்பதற்காகவே ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார் இந்த ஏற்பாட்டை செய்து வைத்துள்ளார்.

சொர்க்கம் திறக்கிறது:

ஒரு சமயம் பிரளயத்தில் மூழ்கிவிட்ட உலகத்தை மீண்டும் படைத்த திருமால், மற்ற உயிரினங்களை உண்டாக்க பிரம்மாவை படைத்தார். அப்போது பிரம்மாவை வதைக்க 2 அசுரர்கள் வந்தனர். அவர்களை திருமால் அழித்தார். அப்போது அந்த 2 அசுரர்களும் திருமாலிடம், ``நாங்கள் ஸ்ரீவைகுண்டத்தில் வாசம் செய்யும் பாக்கியம் தர வேண்டும்'' என்றனர்.

அதை ஏற்றுக் கொண்ட திருமால் அவர்கள் இருவரையும் மார்கழி மாத சுக்ல ஏகாதசியன்று வடக்கு நுழைவாயில் வழியாக பரமபதத்துக்கு அனுப்பி வைத்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த 2 அசுரர்களும் எங்களுக்கு அருளிய இந்த பரமபத சொர்க்க வாசலை பூமியில் திருவிழாவாக கொண்டாட வேண்டும்.

அதோடு இந்த வாசல் வழியாக வரும் உங்களை தரிசிப்பவர்களுக்கும், இவ்வாசல் வழியாக வருபவர்களுக்கும், அவர்கள் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் முக்தி அளிக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டனர். அதன்படியே மார்கழி சுக்ல ஏகாதசியன்று பரமபத வாசல் திறக்கப்படுகிறது.
போக்குவரத்து வசதி:

கோயம்பேட்டில் இருந்து இந்த கோவிலுக்கு செல்ல தனியார் மற்றும் அரசு பேருந்து வசதி உள்ளது.பேருந்தில் சென்றால் திருச்சி சென்று பின் அங்கிருந்து மாநகர பேருந்து முலம் இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும். எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்தும் இந்த கோவிலுக்கு செல்ல ரெயில் வசதி உள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum