தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கவுதமேஸ்வரர் கோவில்

Go down

கவுதமேஸ்வரர் கோவில் Empty கவுதமேஸ்வரர் கோவில்

Post  birundha Sun Mar 31, 2013 2:06 pm

ஸ்தல வரலாறு......

மூலவர் - கவுதமேஸ்வரர்
அம்மன் - கிருபாம்பிகை
பழமை - 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் - காரைமரைக்காடு
ஊர் - காரை

உலகிலேயே மிகப்பெரிய பாவம் பசுவைக் கொல்வது தான். அறிந்தோ, அறியாமலோ பசுவுக்கு தீங்கிழைத்திருந்தால் கும்பகோணம் மகாமக குளக்கரையின் தெற்கு பகுதியில் உள்ள கவுதமேஸ்வரர் கோவிலுக்கு சென்றுவர வேண்டும். தல வரலாறு: முன்னொரு காலத்தில் பிரளயம் ஏற்பட்ட போது பிரம்மன் மனம் வருந்தி பிரளயத்திற்கு பிறகு எனது படைப்புத்தொழிலை எங்கிருந்து செய்வது என சிவனிடம் கேட்டார்.

சிவபெருமான் அவரிடம் "நீ இப்போதே பல புண்ணிய தலங்களிலும் உள்ள மணலை எடுத்து அமுதத்தோடு சேர்த்து பிசைந்து மாயக்கும்பம் ஒன்றை செய். அதில் அமுதத்தை நிரப்பு. அனைத்து ஜீவராசிகளுக்கும் விதையாக விளங்கும் சிருஷ்டி பீஜத்தை அதனுள் வை. அதன்மீது ஒரு தேங்காயை வை. அதை மாவிலையால் அலங்கரி.

கும்பத்தில் நூல் சுற்று. அது பிரளய வெள்ளத்தில் சாய்ந்துவிடாத வகையில் ஒரு உரியில் வை. அந்த குடத்திற்கு வில்வத்தால் அர்ச்சனை செய். அந்த கும்பம் பிரளய வெள்ளத்தில் தெற்கு நோக்கி செல்லும். அப்போது அவ்விடத்திற்கு நான் வருவேன்'' என்றார்.

இதன்படி பிரளய காலத்தில் வெள்ளம் ஏற்பட்டது. கும்பம் மிதந்தது. கும்பத்தில் சுற்றப்பட்டிருந்த பூணூல் அறுந்து விழுந்தது. அது லிங்கமாக மாறியது. உபவேதநாதேஸ்வரர் என சிவன் பெயர் பெற்றார்.

பசு தோஷம் நீக்கும் தலம்......

கவுதமர் இப்பகுதியில் தங்கியிருந்து மக்களுக்கு அன்னதானம் வழங்கி வந்தார். அவரது புகழை குறைப்பதற்காக சில எதிரிகள் மாயப்பசு ஒன்றை உருவாக்கி ஆசிரமத்திற்கு அனுப்பினர். அதை வாஞ்சையோடு கவுதமர் தடவிக்கொடுத்தார். திடீரென அந்த பசு மறைந்துவிட்டது. மாயப்பசுவாயினும் கூட ஒரு பசு மறைவதற்கு காரணமாக அமைந்துவிட்டோமே என வருந்திய முனிவர் இங்கிருந்த உபவேத நாதேஸ்வரரை வழிபட்டார்.

கவுதமருக்கு இறைவன் பாவ விமோசனம் அளித்தார். மகாமக குளத்தில் நீராடி பாவம் நீங்கியது. கவுதமருக்கு பாவ விமோசனம் அளித்ததால் இறைவனுக்கு கவுதமேஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது. அஷ்டமியில் இத்தலத்தில் உள்ள பைரவருக்கு பூஜை செய்து பயம் நீங்கப்பெறலாம். நவக்கிரக சன்னதி நீங்கலாக சனிக்கும் சூரியனுக்கும் தனிச்சிலைகள் உள்ளன.

பைரவரின் அருகே கஜலட்சுமியும், சரஸ்வதியும் அருள் பாலிக்கின்றனர். 12 ராசிகளில் விருச்சிக ராசிக்குரிய கோவிலாக இது கருதப்படுகிறது. விருச்சிக ராசி அன்பர்கள் இத்தலத்து இறைவனுக்கு அர்ச்சனை செய்து சிரமங்கள் நீங்கப்பெறலாம். இக்கோவிலுக்கு பசு தானம் செய்வதன் மூலம் பசு தோஷம் நீங்கப்பெறலாம். இதனால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சகல ஐஸ்வர்யமும் உண்டாகும்.

கண் திறத்தல்........

சிவன், விஷ்ணு, சக்தி ஆலய கும்பாபிஷேக சமயத்தில் மூன்றாம் காலத்தின் போது, புதிதாக நிர்மாணிக்கப்படும் சுவாமி சிலைகளை கம்பளம், தலையனை வைத்து படுக்க வைத்து, வாசனை திரவியங்களால் அபிசேகம் செய்வித்து, தங்க ஊசியால் கண் திறப்பு செய்வார்கள்.

இதற்கு நேத்ரோன்-கண்-மீலனம்-திறத்தல் என்பர். கண் திறப்பு செய்யும் முன்பு திரையிட்டு திறந்து முதலில் பசு முகத்தில்தான் அந்த சுவாமி விழிக்க வேண்டும் என்று கோமாதா தரிசனம் செய்வார்கள். இது எல்லோருக்கும் சம்பத்துவகள் உண்டாகும். புது வழிகள் பிறக்கும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum