தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அருள்மிகு ஆலந்துறையார் கோவில்

Go down

அருள்மிகு ஆலந்துறையார் கோவில் Empty அருள்மிகு ஆலந்துறையார் கோவில்

Post  birundha Fri Mar 29, 2013 4:00 pm

மூலவர்- ஆலந்துறையார்(வடமூலநாதர்)
அம்மன் - அருந்தவ நாயகி
தல விருட்சம் -ஆலமரம்
தீர்த்தம்- பிரம, பரசுராம தீர்த்தம்


ஸ்தல வரலாறு...

பரசுராமர் தன் தாய் ரேணுகாதேவியை முனிவர் ஜமத்கனி உத்தரவின்படி வெட்டி கொன்றார். தாயை கொன்றதால் பரசுராமருக்கு தோஷமும், பாவமும் ஏற்பட்டது. அந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய பரசுராமர் பல்வேறு தலங்களுக்கு சென்றார்.

இறுதியில் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ள அருள்மிகு ஆலந்துறையார் (வடமூலநாதர்) என்ற தலத்தில் தான் பரசுராமரின் தோஷம் நீங்கியது.

இத்தல சிவனுக்கு சாம்பிராணத்தைலம் பூசப்படுகிறது. லிங்கம் மிகச்சிறியது என்பதால் அடையாளம் காட்ட, அதன் மீது ஒரு குவளை கவிழ்த்தப்பட்டிருக்கிறது.இந்த குவளைக்கே அபிஷேகம் நடக்கும். பரசுராமர் தன் தாய் ரேணுகா தேவியை கொன்ற பாவம் நீங்க வழிபட்ட தலமாக இது கருதப்படுகிறது.

அங்கு நீராட அவர் உருவாக்கிய குளம் `பரசுராம தீர்த்தம்' எனப்படுகிறது. கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரத்துடன், இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கோயில் கிழக்கு நோக்கியது. கோயில் எதிரில் குளம் உள்ளது. அம்பாள் சன்னிதி தனியே உள்ளது.

அர்த்தமண்டப சுவரையொட்டி காலசம்காரர், அர்த்தனாரீசுவரர், கல்யாணசுந்தரர், கங்காளர், பைரவர் ஆகியோருடைய உருவங்கள் உள்ளன.

பிரகாரத்தில் துர்கை, திருநாவுக்கரசர், சம்பந்தர், வினாயகர், வீரபத்திரர், சப்தமாதர்கள் ஆகியோரது திருமேனிகள் உள்ளன. சில சிவன் கோவில்களில் மூலவர் சன்னதியின் நுழைவு வாயிலின் மேற்பகுதியில் கஜலட்சுமி சிற்பகம் அமைத்திருப்பார்கள்.ஆனால் இத்தலத்தில் பரசுராமர் சயனத்தில் இருப்பதை காணலாம்.

இங்குள்ள பரசுராம தீர்த்தத்தில் நீராடி, சிவனுக்கு திருமுழுக்காட்டு செய்து வணங்கினால் பிரம்மகக்தி தோஷம் நீங்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரவும் இங்கு வழிபாடு செய்யப்படுகிறது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum