தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சொந்த வீடு அமைய ஸ்லோகம்........

Go down

சொந்த வீடு அமைய ஸ்லோகம்........ Empty சொந்த வீடு அமைய ஸ்லோகம்........

Post  meenu Thu Mar 28, 2013 5:08 pm

புதிய சொந்தமான வீடுபெற வேண்டுவோர் பாராயணம் செய்ய வேண்டி திருப்புகழ் ஒன்றை வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் அளித்துள்ளார்.

"அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற அருளாலே
அந்தரியொ (டு) உடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனும் உமையாளும் மகிழ்வாக
மண்டலமும் முனிவோரும் எண்திசையில் உளபேரும்
மஞ்சினும் அயனாரும் எதிர்காண
மங்கையுடன் அரிதானும் இன்பமுற மகிழ்கூற
மைந்துமயிலுடனாடி வரவேணும்
புண்டரிக விழியாள! அண்டர்மகள் மணவாள!
புந்திநிறை அறிவாள! உயர்தோளா
பொங்குடலுடன் நாகம் விண்டுவரை இகல்சாடு
\பொன்பரவு கதிர்வீசு வடிவேலா
தண்தரண மணிமார்ப! செம்பொன் எழில் செறிரூப!
தண்தமிழின் மிகுநேய முருகேசா
சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு பெருமாளே''

இத்திருப்புகழினை மனமுருகிப் பாராயணம் செய்து புதிய சொந்தவீடு வேண்டுவோர் பலருக்குத்தவறாமல் முருகன் வரம் அளித்துள்ளான். `அண்டர்பதி'என்று துவங்கும் பாடல் தன்னை பாடு வதால் சொந்தவீடு கிட்டுவதோடு இன்பம் மகிழ்ச்சியும் தாண்டவமாடும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum